சசிதரன்
21-01-2010, 04:03 PM
வாழ்க்கை என்னவென்று...
கேள்வியோடு அலைந்திருந்தேன்..
எதிர்வந்த மனிதரெல்லாம்..
பதிலாய் ஒன்றை சொல்லி போனார்கள்..
வாழ்க்கை என்பது...
ரோஜாப்பூவை போன்றது...
காதலித்துக் கொண்டிருப்பவன்
சொல்லி போனான்..
வாழ்க்கை என்பது...
இதழ்களை இழந்த
ரோஜாவை போன்றது..
முட்கள் மட்டுமே மிஞ்சும்..
காதலித்து தோற்றவன்
சொல்லி போனான்..
வாழ்க்கை என்பது...
வென்று காட்டுவது..
முதலாளி ஒருவன்
சொல்லி போனான்...
வாழ்க்கை என்பது...
வென்றாலும் தோற்பது..
தொழிலாளி ஒருவன்
சொல்லி போனான்...
வாழ்க்கை என்பது...
கானல் நீர் போன்றது...
கவிஞன் ஒருவன்
சொல்லி போனான்..
வாழ்க்கை என்பது...
மரணத்தை நோக்கிய ஓட்டபந்தயம்...
சிப்பாய் ஒருவன்
சொல்லி போனான்...
வாழ்க்கை என்பது...
உண்மை உணர்வது...
இல்லறம் வெறுத்தவன்
சொல்லி போனான்...
வாழ்க்கை என்பது...
உன்னை உணர்வது...
இறைவனை வெறுத்தவன்
சொல்லி போனான்...
அத்தனை பதில்களையும்...
சுமந்து திரிகையில்..
நொடிகள் நிமிடங்களாகி...
நிமிடங்கள் மணிகளாகி...
பின் வருடங்களும் கடந்திருக்கும்...
வாழ்க்கை என்பது...
வாழ்வது மட்டும்தான்..
உணரும் தருணத்தில்..
என் வாழ்க்கையும் முடிந்திருக்கும்.
கேள்வியோடு அலைந்திருந்தேன்..
எதிர்வந்த மனிதரெல்லாம்..
பதிலாய் ஒன்றை சொல்லி போனார்கள்..
வாழ்க்கை என்பது...
ரோஜாப்பூவை போன்றது...
காதலித்துக் கொண்டிருப்பவன்
சொல்லி போனான்..
வாழ்க்கை என்பது...
இதழ்களை இழந்த
ரோஜாவை போன்றது..
முட்கள் மட்டுமே மிஞ்சும்..
காதலித்து தோற்றவன்
சொல்லி போனான்..
வாழ்க்கை என்பது...
வென்று காட்டுவது..
முதலாளி ஒருவன்
சொல்லி போனான்...
வாழ்க்கை என்பது...
வென்றாலும் தோற்பது..
தொழிலாளி ஒருவன்
சொல்லி போனான்...
வாழ்க்கை என்பது...
கானல் நீர் போன்றது...
கவிஞன் ஒருவன்
சொல்லி போனான்..
வாழ்க்கை என்பது...
மரணத்தை நோக்கிய ஓட்டபந்தயம்...
சிப்பாய் ஒருவன்
சொல்லி போனான்...
வாழ்க்கை என்பது...
உண்மை உணர்வது...
இல்லறம் வெறுத்தவன்
சொல்லி போனான்...
வாழ்க்கை என்பது...
உன்னை உணர்வது...
இறைவனை வெறுத்தவன்
சொல்லி போனான்...
அத்தனை பதில்களையும்...
சுமந்து திரிகையில்..
நொடிகள் நிமிடங்களாகி...
நிமிடங்கள் மணிகளாகி...
பின் வருடங்களும் கடந்திருக்கும்...
வாழ்க்கை என்பது...
வாழ்வது மட்டும்தான்..
உணரும் தருணத்தில்..
என் வாழ்க்கையும் முடிந்திருக்கும்.