View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா-25
ஆர்.ஈஸ்வரன்
18-01-2010, 09:22 AM
நிற்கும் வண்டி
உறங்கும் நாய்
கோடைவெயில்
அமரன்
22-01-2010, 10:27 PM
ஊர்க் காற்றை ஊதிச்சென்ற கவிதை..
உச்சி வெய்யில்..
வேப்பமர நிழலில் நானும் நாயும்.
ஓரத்தில் மாடில்லா வண்டி.
தூரத்தில் அடுத்தவன் வளவில் மேயும் நம் மாடுகள்..:lachen001:
ஆர்.ஈஸ்வரன்
27-01-2010, 09:45 AM
நன்றி அமரன் அவர்களே
ஓவியன்
28-01-2010, 05:41 PM
வெயிலில் வண்டி ஓய்வெடுக்க,
வண்டி நிழலில் நாய் ஓய்வெடுக்கிறது போல...
பாராட்டுகள் ஈஸ்வரன் அவர்களே..!!
ஈஸ்வரனின் காட்சி அருமை..
அமரனின் காட்சி குளுமை.. ( அடுத்தவன் வளவாச்சே..)
பாராட்டுகள் இருவருக்கும்..
( வண்டி நகர்த்துமுன்
ஒலி கொடுங்கள்..
உறங்கும் நாய் வெளியேற..)
ஆர்.ஈஸ்வரன்
02-02-2010, 09:46 AM
நன்றி இளசு அவர்களே