ரங்கராஜன்
16-01-2010, 01:17 PM
முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளவும்
என்னுடைய அலுவலக வேலையில் நான் பார்த்து சிரித்த ரசித்த மனதை பாதித்த நிகழ்ச்சிகளை சொல்ல இருக்கிறேன், ஆனால் ஒரே பிரச்சனை இருக்கிறது. இதில் நான் யாரை பற்றி
சொல்லப்போகிறனோ அவர்கள் எல்லாரும் உங்களுக்கு அறிமுகமான மிக பிரபலமானவர்கள். அதனால் அவர்களை நேராக சொல்லாமல் மறைமுகமாக சொல்கிறேன். முடிந்தால் கண்டுபிடித்து
கொள்ளவும். இங்கு நான் பதிக்கும் செய்திகள் எல்லாம் நான் கண்கூடாக பார்த்து, மற்றும் அனுபவித்தது. அதனால் இதில் ஏதும் கற்பனை இல்லை.
1. சமீபத்தில் திரைப்பட உலகத்தையே புரட்டிப் போட்ட பத்திரிக்கையாளர்கள் நடிகர்கள் மோதலுக்கு காரணமாக இருந்த பிரபல நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நாள் அது. நான்
அலுவலகத்தில் இருக்கும் பொழுது எங்கள் தலைக்கு இந்த செய்தி வந்தது. உடனடியாக அவர் யூனிட்டுக்கு தயார் செய்யச் சொன்னார். எந்த ரிப்போர்டர் என்று பேச்சு வருகையில் அனைவரும்
என்னை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். காரணம் புரியவில்லை ஆனால் நான் போகும் வரை என்னை பார்த்து சிரித்தனர். நான் ஸ்டேஷன் போய் இறங்கினேன், அனைத்து பத்திரிக்கை, ஊடகங்களில்
இருந்தும் அனைவரும் வந்து இருந்தனர். நடிகையை உள்ளே வைத்து இருந்தனர், இவரின் தரிசனத்திற்கு பலர் காத்து இருந்தனர். பலர் தங்கள் தலையை சீவிக் கொண்டு இருந்தனர், சிலர் பாட்டிலில்
இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவிக் கொண்டு இருந்தனர். போலீஸார் பர்தாவை அணிவித்தபடி நடிகையை அழைத்து வந்தனர். உடன் சில கைது செய்யப்பட்ட பெண்களும் தலையை குனிந்த படி இருந்தனர் இதில் யார் நடிகை என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் போலீஸை பார்த்து
"என் சார் உள்ள துணிக்கடை எதாவது வச்சி இருக்கீங்களா இத்தனை பேருக்கும் அழகா பர்தா கொடுத்து இருக்கீங்களே, எங்களுக்கும் இரண்டு சட்டை குடுங்க?"
"இல்ல சார் நாங்க குடுக்கல, அவங்களே எடுத்து வந்தாங்க சார்"
யாரு இதுல நடிகை என்று அனைவரும் குழம்பிக் கொண்டு இருக்கும் வேலையில், நான் அந்த கூட்டத்தை நோக்கி அந்த நடிகையின் பெயரை சொல்லி
".................. உங்க வக்கீல் வந்து இருக்கார் பாருங்க" என்று சும்மா சொன்னேன், உடனே அந்த நடிகை தன்னுடைய பர்தாவை தூக்கி குரல் வந்த இடத்தை நோக்கி பார்த்தார், உடனே எங்க ஜாதிக்காரர்கள்
இவங்களை காமிராவால் சுட்டு தள்ளிவிட்டனர். வேனில் ஏறி அமர்ந்ததில் இருந்து அந்த நடிகை என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்.
இந்த பிரச்சனையை குறித்து அடுத்த நாள் பூ என்று முடியும் ஒரு பத்திரிக்கையில் நடிகைகளில் ரேட் வாரியாக கட்டுரை எழுத பிரச்சனை வெடிக்க தொடங்கியது. உண்மையில் அந்த தகவலை
அந்த நடிகை போலீஸில் சொன்னது தான்.
"என்னை மட்டும் ஏன் கைது செய்றீங்க..............................", என்று வரிசையாக சில நடிகைகளில் பெயரை சொல்லி அவர்களின் ரேட்டையும் சொன்னார் அவர். இந்த பிரச்சனை சம்பந்தமாக
நாங்கள் போலீஸ் கமிஷனரிடம் பேட்டி எடுத்துக் கொண்டு இருந்த பொழுது, தடாலடியாக உள்ளே புகுந்த நாட்டாமை குணச்சித்திர நடிகர்
"இப்ப நீங்க அவங்க மேல நடவடிக்கை எடுக்குறீங்களா இல்லை, நான் அருவா எடுத்து அவனை ஒரே போடு போடட்டுமா?" என்றார் கன்னங்கள் துடிக்க. இதை கேட்டு அலட்டிக்காத
கமிஷனர் தன்னுடைய நெற்றியை சுருக்கிக் கொண்டு சொன்னார்.
"நீங்க பேசறது சினிமா கமிஷனரிடம் இல்லை, நிஜ கமிஷனர். உன்னையே அக்குயூஸ்டா புடுச்சி உள்ளே தள்ளிடுவேன், போயா வெளியே". நாட்டாமை ஒரு நிமிடம் ஆடிவிட்டார்.
இப்போ அந்த நடிகை ஒரு கட்சியில் மகளிர் அணி மாநில செயலாளர் பதவியில் இருக்கிறார், பிரபல நிறுவனத்தின் உயர் அதிகாரி போஸ்டும் அந்த கட்சி தலைவர் நடிகைக்கு தந்து இருக்காராம். தமிழகத்தில் மட்டும் தான் இந்த கருமாந்திர எழவு எல்லாம் நடக்கும். ஆனால் இந்த நடிகையுடன் கைது செய்யப்பட்ட பெண்கள் மீது விபச்சார வழக்கு போட்டு புழல் சிறையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வெளியில் அவர்கள் செய்த இந்த தொழிலை இப்போழுது சிறைக்குள் வருமானம் இல்லாமல் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். பாவம்
என்னுடைய அலுவலக வேலையில் நான் பார்த்து சிரித்த ரசித்த மனதை பாதித்த நிகழ்ச்சிகளை சொல்ல இருக்கிறேன், ஆனால் ஒரே பிரச்சனை இருக்கிறது. இதில் நான் யாரை பற்றி
சொல்லப்போகிறனோ அவர்கள் எல்லாரும் உங்களுக்கு அறிமுகமான மிக பிரபலமானவர்கள். அதனால் அவர்களை நேராக சொல்லாமல் மறைமுகமாக சொல்கிறேன். முடிந்தால் கண்டுபிடித்து
கொள்ளவும். இங்கு நான் பதிக்கும் செய்திகள் எல்லாம் நான் கண்கூடாக பார்த்து, மற்றும் அனுபவித்தது. அதனால் இதில் ஏதும் கற்பனை இல்லை.
1. சமீபத்தில் திரைப்பட உலகத்தையே புரட்டிப் போட்ட பத்திரிக்கையாளர்கள் நடிகர்கள் மோதலுக்கு காரணமாக இருந்த பிரபல நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நாள் அது. நான்
அலுவலகத்தில் இருக்கும் பொழுது எங்கள் தலைக்கு இந்த செய்தி வந்தது. உடனடியாக அவர் யூனிட்டுக்கு தயார் செய்யச் சொன்னார். எந்த ரிப்போர்டர் என்று பேச்சு வருகையில் அனைவரும்
என்னை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். காரணம் புரியவில்லை ஆனால் நான் போகும் வரை என்னை பார்த்து சிரித்தனர். நான் ஸ்டேஷன் போய் இறங்கினேன், அனைத்து பத்திரிக்கை, ஊடகங்களில்
இருந்தும் அனைவரும் வந்து இருந்தனர். நடிகையை உள்ளே வைத்து இருந்தனர், இவரின் தரிசனத்திற்கு பலர் காத்து இருந்தனர். பலர் தங்கள் தலையை சீவிக் கொண்டு இருந்தனர், சிலர் பாட்டிலில்
இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவிக் கொண்டு இருந்தனர். போலீஸார் பர்தாவை அணிவித்தபடி நடிகையை அழைத்து வந்தனர். உடன் சில கைது செய்யப்பட்ட பெண்களும் தலையை குனிந்த படி இருந்தனர் இதில் யார் நடிகை என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் போலீஸை பார்த்து
"என் சார் உள்ள துணிக்கடை எதாவது வச்சி இருக்கீங்களா இத்தனை பேருக்கும் அழகா பர்தா கொடுத்து இருக்கீங்களே, எங்களுக்கும் இரண்டு சட்டை குடுங்க?"
"இல்ல சார் நாங்க குடுக்கல, அவங்களே எடுத்து வந்தாங்க சார்"
யாரு இதுல நடிகை என்று அனைவரும் குழம்பிக் கொண்டு இருக்கும் வேலையில், நான் அந்த கூட்டத்தை நோக்கி அந்த நடிகையின் பெயரை சொல்லி
".................. உங்க வக்கீல் வந்து இருக்கார் பாருங்க" என்று சும்மா சொன்னேன், உடனே அந்த நடிகை தன்னுடைய பர்தாவை தூக்கி குரல் வந்த இடத்தை நோக்கி பார்த்தார், உடனே எங்க ஜாதிக்காரர்கள்
இவங்களை காமிராவால் சுட்டு தள்ளிவிட்டனர். வேனில் ஏறி அமர்ந்ததில் இருந்து அந்த நடிகை என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்.
இந்த பிரச்சனையை குறித்து அடுத்த நாள் பூ என்று முடியும் ஒரு பத்திரிக்கையில் நடிகைகளில் ரேட் வாரியாக கட்டுரை எழுத பிரச்சனை வெடிக்க தொடங்கியது. உண்மையில் அந்த தகவலை
அந்த நடிகை போலீஸில் சொன்னது தான்.
"என்னை மட்டும் ஏன் கைது செய்றீங்க..............................", என்று வரிசையாக சில நடிகைகளில் பெயரை சொல்லி அவர்களின் ரேட்டையும் சொன்னார் அவர். இந்த பிரச்சனை சம்பந்தமாக
நாங்கள் போலீஸ் கமிஷனரிடம் பேட்டி எடுத்துக் கொண்டு இருந்த பொழுது, தடாலடியாக உள்ளே புகுந்த நாட்டாமை குணச்சித்திர நடிகர்
"இப்ப நீங்க அவங்க மேல நடவடிக்கை எடுக்குறீங்களா இல்லை, நான் அருவா எடுத்து அவனை ஒரே போடு போடட்டுமா?" என்றார் கன்னங்கள் துடிக்க. இதை கேட்டு அலட்டிக்காத
கமிஷனர் தன்னுடைய நெற்றியை சுருக்கிக் கொண்டு சொன்னார்.
"நீங்க பேசறது சினிமா கமிஷனரிடம் இல்லை, நிஜ கமிஷனர். உன்னையே அக்குயூஸ்டா புடுச்சி உள்ளே தள்ளிடுவேன், போயா வெளியே". நாட்டாமை ஒரு நிமிடம் ஆடிவிட்டார்.
இப்போ அந்த நடிகை ஒரு கட்சியில் மகளிர் அணி மாநில செயலாளர் பதவியில் இருக்கிறார், பிரபல நிறுவனத்தின் உயர் அதிகாரி போஸ்டும் அந்த கட்சி தலைவர் நடிகைக்கு தந்து இருக்காராம். தமிழகத்தில் மட்டும் தான் இந்த கருமாந்திர எழவு எல்லாம் நடக்கும். ஆனால் இந்த நடிகையுடன் கைது செய்யப்பட்ட பெண்கள் மீது விபச்சார வழக்கு போட்டு புழல் சிறையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வெளியில் அவர்கள் செய்த இந்த தொழிலை இப்போழுது சிறைக்குள் வருமானம் இல்லாமல் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். பாவம்