muthuvel
14-01-2010, 04:53 AM
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்தாண்டு நடந்த இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்க ராணுவத்தைச் சேர்ந்த 27 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரில் சிங்கள ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ராணுவம் தரப்பில் பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை சிறிலங்க அரசு முறைப்படி தெரிவிக்கவில்லை. எனவே பலியான இலங்கை வீரர்கள் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிபர் ராஜபக்சவின் தம்பியும், சிறிலங்க பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்ச, பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், “விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் 27 ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்ததாக” கூறியுள்ளார்.
நன்றி வெப்துனியா
சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரில் சிங்கள ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ராணுவம் தரப்பில் பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை சிறிலங்க அரசு முறைப்படி தெரிவிக்கவில்லை. எனவே பலியான இலங்கை வீரர்கள் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிபர் ராஜபக்சவின் தம்பியும், சிறிலங்க பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்ச, பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், “விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் 27 ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்ததாக” கூறியுள்ளார்.
நன்றி வெப்துனியா