PDA

View Full Version : மே.வங்கம்: வீடு தீப்பிடித்து 5 குழந்தைகள் பலி



muthuvel
09-01-2010, 06:37 AM
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் கிழக்கு ரபிபாக் கிராமத்தில் இன்று அதிகாலையில் வீடு தீப்பற்றி எரிந்ததில், வீட்டிலிருந்த 5 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தீயில் கருகி அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் எழுந்து பார்த்த போது, அதுல் மாலிக்கின் வீடு தீப்பற்றி எரிந்ததைப் பார்த்ததாகவும், அவரது 3 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உயிரோடு கருகி உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதுலின் மனைவியும் வேறு இரு குழந்தைகளும் உடல் கருகிய நிலையில் இருந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

உயிரிழந்த அனைவரும் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்க மறுத்து விட்டனர். என்றாலும் சிம்னி விளக்கில் இருந்த மண்ணெண்ணெய் பரவி தீப்பற்றியிருக்கக்கூடும் என்று தெரிகிறது

ஜனகன்
09-01-2010, 08:09 AM
மரணங்கள் என்னென்ன ரூபத்தில் வருகின்றது.இந்த விபத்து மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.அந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.