செல்வா
05-01-2010, 08:36 AM
ஓலமிட்டபடியே கரைபுரண்டு ஓடும்
ஆற்றுக் கடுத்தபடி வெட்டப்பட்ட
கால்வாய் நீரைப் பருகியபடியே
சலனமற்றுப் படுத்துக் கிடக்கும்
சிறுகுளம் நான்….
ஒழுங்கற்றுச் சுருட்டப் பட்டிருக்கும்
என் கரைகள் உமக்கு அழகாகத்
தோன்றலாம்…
அந்தி வானின் மஞ்சள் வெயில்
சிந்தித் தெறிக்கும் என் அழகிய
மேனிமீது நீங்கள் மையல்
கொள்ளலாம்…
கரைநெடுக அடர்ந்து படர்ந்து
சமதர்மம் வளர்க்கும்
செடிகொடிகளோடு கதைபல பேசும்
பேர்தெரியாத பலவித பூச்சிகளையும்
பறவைகளையும் நீங்கள் இரசிக்கலாம்.
காற்றற்ற பகல் வெளியில்
நீலவான வரங்கில் மேகக்கூட்டம்
நடத்தும் ஓவியக் கண்காட்சிகளை
கழுத்து வலிக்காமலே என்னில்
கண்டு களிக்கலாம்
ஒரு மாலை நேர மழையில்
எகிறும் கெண்டையின்
வெள்ளிப் பளபளப்பில் உங்கள்
உள்ளம் நெகிழலாம்.
கரை நடுவே இரையுண்ட பாம்புபோல்
நீண்டு வளைந்து கிடக்கும்
ஒற்றையடிப் பாதையில் நடந்தும்
ஓரமாய் ஒருபக்கம் நின்றும் நீங்கள்
உருகிப் போகலாம்
மரநிழலில் மாங்காய் கடித்தபடியே
நெளியும் புழுவை ஊசியில் மாட்டி
ஏமாற்றிச் சில மீன்களைப் பிடிக்கலாம்
எட்டிப் பறிக்கும் தூரத்தில்
கொட்டிக் கிடக்கும்
ஆம்பலையும் தாமரையையும்
தட்டிப் பறித்துக் கொண்டோடலாம்…
பால்நிலா ஒழுகும் பின்னிரவில்
வெள்ளை ஒளிப் பின்னணியில்
ஓங்கி உயர்ந்தாடும் கறுப்புப்
பிசாசு மரங்கள் உங்களைப்
பயமுறுத்தலாம்.
கரையோர கிணற்றில்
தாகம் தீர்க்கலாம்
வழியும் வாய்க்கால்
வழியாக வயல்கள்
வளர்க்கலாம்
இத்தனைப் பயன்கள் என்னிலிருந்து கிடைத்தபின்னும்
என்னை ஆழம் பார்க்கும் எண்ணம் உங்களுக்கு ஏன்?
வெளிப்பார்வை போல்
தெளிவானதல்ல என் உட்பக்கம்…
என் மனவாழத்தில் எறியப்பட்ட
கற்கள் கொஞ்சமல்ல
தலைமுறை தலைமுறையாக
எறியப்பட்ட குப்பைகளின்
மட்கிய நீட்சிகளை இன்னும் எனக்குள் பார்க்கலாம்.
என்றோ வெட்டி எறியப்பட்ட
மூங்கில் கழிகளின்
மீதித்துருத்திக் கொண்டிருந்து
உங்களைப் பதம் பார்க்கலாம்
பெரும் பிரயாசைக்குப் பின்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
வழிப்போக்கர்கள்
கழுவிச் சென்ற கழிவுகளை
மீண்டும் கலைத்து விடாதீர்கள்…
இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்…
எனக்குள் இறங்கி
என் அமைதியைக் குலைக்கும்
உங்கள் முயற்சிகளை.
மண்கரை தாண்டி
ஈரமணல் தொட்டு
உள்ளிறங்கத் துடிக்கும் உங்கள் பாதங்களுக்குப்
பூட்டிடுங்கள்.
தீயைச் சுட்ட விரலைப் போல்
தீண்டத் துடிக்கும்
விரல்களைப் பின்னிழுத்துக் கொள்ளுங்கள்..
என் நீரைக் கொப்பளித்து
என்மீது உமிழ்ந்தவர்களின்
வீச்சமும்
வீரியமும் இன்னும் தீரவில்லை…
கிளறி விட்டு விடாதீர்கள்
ஆழத்தில் அமிழ்ந்திருக்கும்
சேற்றினை…
அதன் நாற்றத்தைச் சகிக்கும் சக்தி
உங்களில் யாருக்கும் இல்லை…
யாருக்குமே.....!
ஆற்றுக் கடுத்தபடி வெட்டப்பட்ட
கால்வாய் நீரைப் பருகியபடியே
சலனமற்றுப் படுத்துக் கிடக்கும்
சிறுகுளம் நான்….
ஒழுங்கற்றுச் சுருட்டப் பட்டிருக்கும்
என் கரைகள் உமக்கு அழகாகத்
தோன்றலாம்…
அந்தி வானின் மஞ்சள் வெயில்
சிந்தித் தெறிக்கும் என் அழகிய
மேனிமீது நீங்கள் மையல்
கொள்ளலாம்…
கரைநெடுக அடர்ந்து படர்ந்து
சமதர்மம் வளர்க்கும்
செடிகொடிகளோடு கதைபல பேசும்
பேர்தெரியாத பலவித பூச்சிகளையும்
பறவைகளையும் நீங்கள் இரசிக்கலாம்.
காற்றற்ற பகல் வெளியில்
நீலவான வரங்கில் மேகக்கூட்டம்
நடத்தும் ஓவியக் கண்காட்சிகளை
கழுத்து வலிக்காமலே என்னில்
கண்டு களிக்கலாம்
ஒரு மாலை நேர மழையில்
எகிறும் கெண்டையின்
வெள்ளிப் பளபளப்பில் உங்கள்
உள்ளம் நெகிழலாம்.
கரை நடுவே இரையுண்ட பாம்புபோல்
நீண்டு வளைந்து கிடக்கும்
ஒற்றையடிப் பாதையில் நடந்தும்
ஓரமாய் ஒருபக்கம் நின்றும் நீங்கள்
உருகிப் போகலாம்
மரநிழலில் மாங்காய் கடித்தபடியே
நெளியும் புழுவை ஊசியில் மாட்டி
ஏமாற்றிச் சில மீன்களைப் பிடிக்கலாம்
எட்டிப் பறிக்கும் தூரத்தில்
கொட்டிக் கிடக்கும்
ஆம்பலையும் தாமரையையும்
தட்டிப் பறித்துக் கொண்டோடலாம்…
பால்நிலா ஒழுகும் பின்னிரவில்
வெள்ளை ஒளிப் பின்னணியில்
ஓங்கி உயர்ந்தாடும் கறுப்புப்
பிசாசு மரங்கள் உங்களைப்
பயமுறுத்தலாம்.
கரையோர கிணற்றில்
தாகம் தீர்க்கலாம்
வழியும் வாய்க்கால்
வழியாக வயல்கள்
வளர்க்கலாம்
இத்தனைப் பயன்கள் என்னிலிருந்து கிடைத்தபின்னும்
என்னை ஆழம் பார்க்கும் எண்ணம் உங்களுக்கு ஏன்?
வெளிப்பார்வை போல்
தெளிவானதல்ல என் உட்பக்கம்…
என் மனவாழத்தில் எறியப்பட்ட
கற்கள் கொஞ்சமல்ல
தலைமுறை தலைமுறையாக
எறியப்பட்ட குப்பைகளின்
மட்கிய நீட்சிகளை இன்னும் எனக்குள் பார்க்கலாம்.
என்றோ வெட்டி எறியப்பட்ட
மூங்கில் கழிகளின்
மீதித்துருத்திக் கொண்டிருந்து
உங்களைப் பதம் பார்க்கலாம்
பெரும் பிரயாசைக்குப் பின்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
வழிப்போக்கர்கள்
கழுவிச் சென்ற கழிவுகளை
மீண்டும் கலைத்து விடாதீர்கள்…
இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்…
எனக்குள் இறங்கி
என் அமைதியைக் குலைக்கும்
உங்கள் முயற்சிகளை.
மண்கரை தாண்டி
ஈரமணல் தொட்டு
உள்ளிறங்கத் துடிக்கும் உங்கள் பாதங்களுக்குப்
பூட்டிடுங்கள்.
தீயைச் சுட்ட விரலைப் போல்
தீண்டத் துடிக்கும்
விரல்களைப் பின்னிழுத்துக் கொள்ளுங்கள்..
என் நீரைக் கொப்பளித்து
என்மீது உமிழ்ந்தவர்களின்
வீச்சமும்
வீரியமும் இன்னும் தீரவில்லை…
கிளறி விட்டு விடாதீர்கள்
ஆழத்தில் அமிழ்ந்திருக்கும்
சேற்றினை…
அதன் நாற்றத்தைச் சகிக்கும் சக்தி
உங்களில் யாருக்கும் இல்லை…
யாருக்குமே.....!