View Full Version : வியப்பு!
குணமதி
15-12-2009, 02:58 AM
வியப்பு!
பெரும் வியப்பு!
கல்லாரையும் கற்றாரையும்...
செல்வரையும் வறியரையும்...
மாபெரு வலிவுடன் -
பிரித்து வைத்திருக்கிறதே...
தன்னியக்க உணர்வாக -
ஒன்ற விடாமல் -
கற்பனைக்கு எட்டாத
ஒரு மாயக் கட்டுதலில்...
கரவுருவான...
சாதி.
(பொதுவான உலகியல் நோக்கில் எழுதப்பட்டது; யாரையும் குறித்து எழுதவில்லை; பொது உணர்வாளர் புரிந்து கொள்வர் என்று நம்புகின்றேன்.)
கா.ரமேஷ்
15-12-2009, 05:41 AM
அருமையான கவிதை...
உண்மையைத்தான் எழுதியிருக்கிறீர்கள்.... ஜாதி எனும் வன்மம் படிந்த படித்த மனிதர்களும் அதிகம் இருப்பதும் அது விளையாடாத இடங்களே இல்லை என்பது உண்மைதான்...
வாழ்த்துக்கள்..
குணமதி
15-12-2009, 11:12 AM
அருமையான கவிதை...
உண்மையைத்தான் எழுதியிருக்கிறீர்கள்.... ஜாதி எனும் வன்மம் படிந்த படித்த மனிதர்களும் அதிகம் இருப்பதும் அது விளையாடாத இடங்களே இல்லை என்பது உண்மைதான்...
வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி.
செல்வா
18-12-2009, 05:07 PM
கல்லாயினும்
முள்ளாயினும்
மலராயினும்
மரமாயினும்
பள்ளியாயினும்
கோயிலாயினும்
எங்கும் படியும் தூசு போல்
எல்லா மனங்களிலும் படிந்து கிடக்கும் மாசு சாதி
துடைக்க இது போன்ற இன்னும் பல்லாயிரக் கை(கவி)கள் அவசியம் தான்.
வாழ்த்துக்கள்.
குணமதி
19-12-2009, 11:35 AM
கல்லாயினும்
முள்ளாயினும்
மலராயினும்
மரமாயினும்
பள்ளியாயினும்
கோயிலாயினும்
எங்கும் படியும் தூசு போல்
எல்லா மனங்களிலும் படிந்து கிடக்கும் மாசு சாதி
துடைக்க இது போன்ற இன்னும் பல்லாயிரக் கை(கவி)கள் அவசியம் தான்.
வாழ்த்துக்கள்.
நான் எழுதினேன்.
நீங்களும் எழுதினீர்கள்.
உண்மையை எழுதினோம்.
எல்லா மனங்களிலும் படிந்து கிடக்கும் மாசு சாதி
இதைப் படிக்கையில் வலிக்கிறது.
நன்றி நண்பரே.
அமரன்
20-12-2009, 09:02 AM
சாதி பேதம் இல்லாத உலகில் வாழ்ந்த சில நாட்களின் நிம்மதி நினைவுகளில் நிமிடத்தில் நிழலாட வைத்த கவிதை!
பாராட்டுகள் படைத்தவருக்கும் ஊட்டியவர்களுக்கும்.
குணமதி
21-12-2009, 02:15 AM
சாதி பேதம் இல்லாத உலகில் வாழ்ந்த சில நாட்களின் நிம்மதி நினைவுகளில் நிமிடத்தில் நிழலாட வைத்த கவிதை!
பாராட்டுகள் படைத்தவருக்கும் ஊட்டியவர்களுக்கும்.
நன்றி அமரன்.