PDA

View Full Version : இன்றைய இரவு



muthuvel
11-12-2009, 04:11 PM
காதலர்களின் தகவல் பரி மாற்றம் ,

விண்ணுக்கு கருப்பு வண்ணம் பூசும் இயற்கை,

செய்திகளை அச்சடிபவனின் உழைப்பு ,

திருடர்களின் வசந்த காலம் ,

இயற்கை ஒளியணைந்து ,
செயற்கை இமை திறக்கும் தெரு விளக்கு ,

வலை விரித்து காத்து கிடக்கும் மீனவன் ,

பிள்ளைக்கு நிலா சோறு ,

சூரியன் ,ஓய்வு எடுக்கும் நேரம்,

சந்ததிகளை உருவாகும் சந்தர்பம் ,

கலைமகளை வாசிக்கும் ,
தேர்வு எழுத்தும் மாணவன் ,

அகமும், புறமும் அமைதியாகும் நேரம்,

கடவுளை ,கால் அடி அறையில் பூட்டி வைக்கும பூசாரி !

கோடிச்வரனை காக்கும் ,
தினக்கூலி கூர்க்கா !



இரவில் மட்டுமே உயரும் பெட்ரோல் !

தாவரங்களின் கண் விழிக்கும் காலம் !

சாதிதவனும்,வேலை இல்லா பட்ட தாரியும் ,
உறங்கா இரவு!



நாளை பொழுது நம்பிக்கையோடு ,
உறங்கும் ,
வாழ்வில் தோல்வி கண்டவன் !

..........

அறிஞர்
11-12-2009, 08:41 PM
இரவில் பல நிகழ்வுகள்...
நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு வாழ விடியல்கள்...

குணமதி
12-12-2009, 12:58 AM
இரவைப் பற்றிய புதிய தொகுப்பு, புதுமைத் தொகுப்பு!

aren
12-12-2009, 01:50 AM
இரவில் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா. நாம் இனிமேல் தூங்கக்கூடாது.

சரண்யா
12-12-2009, 02:09 AM
செயற்கை இமை திறக்கும் தெரு விளக்கு ,
வித்தியாசமான வரி...

கோடிச்வரனை காக்கும் ,
தினக்கூலி கூர்க்கா !
எவ்வள்வு சேர்த்தாலும் நிம்மதி இல்லை போல..

சாதிதவனும்,வேலை இல்லா பட்ட தாரியும் ,
உறங்கா இரவு!
ஆம் உண்மையே..

அருமையான வரிகள் முத்துவேல் அவர்களே...
தொடருங்கள்..

muthuvel
12-12-2009, 07:42 AM
வித்தியாசமான வரி...

எவ்வள்வு சேர்த்தாலும் நிம்மதி இல்லை போல..

ஆம் உண்மையே..

அருமையான வரிகள் முத்துவேல் அவர்களே...
தொடருங்கள்..

சகோதரி என் கவிதை தொகுப்புகளை நான் எப்படி பார்ப்பது ?

aren
12-12-2009, 08:29 AM
சகோதரி என் கவிதை தொகுப்புகளை நான் எப்படி பார்ப்பது ?

ஏன் பார்க்கமுடியாது. இங்கேதானே இருக்கிறது.

ஏதாவது பிரச்சனையென்றால் பொறுப்பாளர்க*ளின் கவனத்திற்கு எடுத்துச்செல்லுங்கள். பொறுப்பாளர்கள் உடனே அதை நிவர்த்தி செய்வார்கள்.

richard
12-12-2009, 09:28 AM
காதலர்களின் தகவல் பரி மாற்றம் ,

விண்ணுக்கு கருப்பு வண்ணம் பூசும் இயற்கை,

செய்திகளை அச்சடிபவனின் உழைப்பு ,

திருடர்களின் வசந்த காலம் ,

இயற்கை ஒளியணைந்து ,
செயற்கை இமை திறக்கும் தெரு விளக்கு ,

வலை விரித்து காத்து கிடக்கும் மீனவன் ,

பிள்ளைக்கு நிலா சோறு ,

சூரியன் ,ஓய்வு எடுக்கும் நேரம்,

சந்ததிகளை உருவாகும் சந்தர்பம் ,

கலைமகளை வாசிக்கும் ,
தேர்வு எழுத்தும் மாணவன் ,

அகமும், புறமும் அமைதியாகும் நேரம்,

கடவுளை ,கால் அடி அறையில் பூட்டி வைக்கும பூசாரி !

கோடிச்வரனை காக்கும் ,
தினக்கூலி கூர்க்கா !



இரவில் மட்டுமே உயரும் பெட்ரோல் !

தாவரங்களின் கண் விழிக்கும் காலம் !

சாதிதவனும்,வேலை இல்லா பட்ட தாரியும் ,
உறங்கா இரவு!



நாளை பொழுது நம்பிக்கையோடு ,
உறங்கும் ,
வாழ்வில் தோல்வி கண்டவன் !

..........

கவிதை வரிகள் அற்ப்புதம், சூரியனுக்கு ஏது ஓய்வு,