PDA

View Full Version : மனமாற்றம்!



குணமதி
11-12-2009, 03:15 PM
மனமாற்றம்!


பெரும்பாடு பட்டுப் படித்தும்

சிறப்பாகத் தேர்ச்சி பெற்றும்

வேலை கிடைக்கவில்லை!


வீட்டில் அப்பாவின் சுடுசொற்கள்!


அன்பான காதலி கைவிட்டதால்

காதல் தோல்வி!


நண்பர்களும் இதே நிலையில்

தொல்லைப்பட்டதால் -

உதவவும்

உதவுபெறவும் முடியாத நிலை!


வாழ்க்கை கசந்தது.


நடந்தான்... நடந்தான்...

ஊருக்கு வெளியே இருந்த

நெடுங்குன்றில் ஏறினான்.


இனி வாழ்வே வேண்டாம்

போதும்...!

முடிவோடு ஏறினான்...

மலைஉச்சிக்கு வந்தான்


அங்கே -

போக முடியாத ஒரு உச்சியில்...

கழுகுக் கூட்டில்...

தனியே குஞ்சுகள்!


ஏறி வந்தவன்-

மனம் மாறினான்...

நானும் வாழ்வேன்!

muthuvel
18-12-2009, 04:19 AM
மனமாற்றம்!


பெரும்பாடு பட்டுப் படித்தும்

சிறப்பாகத் தேர்ச்சி பெற்றும்

வேலை கிடைக்கவில்லை!


வீட்டில் அப்பாவின் சுடுசொற்கள்!


அன்பான காதலி கைவிட்டதால்

காதல் தோல்வி!


நண்பர்களும் இதே நிலையில்

தொல்லைப்பட்டதால் -

உதவவும்

உதவுபெறவும் முடியாத நிலை!


வாழ்க்கை கசந்தது.


நடந்தான்... நடந்தான்...

ஊருக்கு வெளியே இருந்த

நெடுங்குன்றில் ஏறினான்.


இனி வாழ்வே வேண்டாம்

போதும்...!

முடிவோடு ஏறினான்...

மலைஉச்சிக்கு வந்தான்


அங்கே -

போக முடியாத ஒரு உச்சியில்...

கழுகுக் கூட்டில்...

தனியே குஞ்சுகள்!


ஏறி வந்தவன்-

மனம் மாறினான்...

நானும் வாழ்வேன்!

நல்ல கவிதை அருமை தொடர்க

ஜனகன்
18-12-2009, 06:56 AM
நல்ல படிப்பினை...... உங்களுக்கும், எங்களுக்கும், இதை படிப்பவர்களுக்கும். அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

வசீகரன்
18-12-2009, 09:50 AM
நல்ல தன்னம்பிக்கை கவிதை. அருமை...

குணமதி
18-12-2009, 12:17 PM
நல்ல கவிதை அருமை தொடர்க

நன்றி முத்துவேல்.

குணமதி
18-12-2009, 12:19 PM
நல்ல படிப்பினை...... உங்களுக்கும், எங்களுக்கும், இதை படிப்பவர்களுக்கும். அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

நன்றி நண்பரே.

குணமதி
18-12-2009, 12:19 PM
நல்ல தன்னம்பிக்கை கவிதை. அருமை...

மிக்க நன்றி.

செல்வா
18-12-2009, 04:35 PM
நல்ல கருவைத் தொட்டுள்ளீர்கள்...
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

உயரே வசிப்பது தான் கழுகின் இயல்பு
உவமை இன்னும் அழுத்தமாக வேண்டுமோ..?

குணமதி
18-12-2009, 04:46 PM
நல்ல கருவைத் தொட்டுள்ளீர்கள்...
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

உயரே வசிப்பது தான் கழுகின் இயல்பு
உவமை இன்னும் அழுத்தமாக வேண்டுமோ..?

நன்றி.

(இயல்பாகவே இருந்தாலும்) அவ்வளவு உயரத்தில் உச்சியில் தனியே இருந்த கழுகுக் குஞ்சுகளைப் பார்த்த மாந்தனின் மனத்தில் மாற்றம் ஏற்படுவதும் இயலபு தானே என்று நினைத்தே எழுதினேன்!

கருத்துரைக்கு மீண்டும் நன்றி.