குணமதி
11-12-2009, 03:15 PM
மனமாற்றம்!
பெரும்பாடு பட்டுப் படித்தும்
சிறப்பாகத் தேர்ச்சி பெற்றும்
வேலை கிடைக்கவில்லை!
வீட்டில் அப்பாவின் சுடுசொற்கள்!
அன்பான காதலி கைவிட்டதால்
காதல் தோல்வி!
நண்பர்களும் இதே நிலையில்
தொல்லைப்பட்டதால் -
உதவவும்
உதவுபெறவும் முடியாத நிலை!
வாழ்க்கை கசந்தது.
நடந்தான்... நடந்தான்...
ஊருக்கு வெளியே இருந்த
நெடுங்குன்றில் ஏறினான்.
இனி வாழ்வே வேண்டாம்
போதும்...!
முடிவோடு ஏறினான்...
மலைஉச்சிக்கு வந்தான்
அங்கே -
போக முடியாத ஒரு உச்சியில்...
கழுகுக் கூட்டில்...
தனியே குஞ்சுகள்!
ஏறி வந்தவன்-
மனம் மாறினான்...
நானும் வாழ்வேன்!
பெரும்பாடு பட்டுப் படித்தும்
சிறப்பாகத் தேர்ச்சி பெற்றும்
வேலை கிடைக்கவில்லை!
வீட்டில் அப்பாவின் சுடுசொற்கள்!
அன்பான காதலி கைவிட்டதால்
காதல் தோல்வி!
நண்பர்களும் இதே நிலையில்
தொல்லைப்பட்டதால் -
உதவவும்
உதவுபெறவும் முடியாத நிலை!
வாழ்க்கை கசந்தது.
நடந்தான்... நடந்தான்...
ஊருக்கு வெளியே இருந்த
நெடுங்குன்றில் ஏறினான்.
இனி வாழ்வே வேண்டாம்
போதும்...!
முடிவோடு ஏறினான்...
மலைஉச்சிக்கு வந்தான்
அங்கே -
போக முடியாத ஒரு உச்சியில்...
கழுகுக் கூட்டில்...
தனியே குஞ்சுகள்!
ஏறி வந்தவன்-
மனம் மாறினான்...
நானும் வாழ்வேன்!