Honeytamil
30-11-2009, 12:07 PM
கத்தியில்லை… துப்பாக்கிகளில்லை… ரத்தமில்லை… ஆனால் இது மரண வலியாகத் தெரிகிறது இலங்கைக்கு. அதுதான் புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் புறக்கணிப்புப் போராட்டம்.
“இனப்படுகொலை என்ற படுபாதகத்தைச் செய்துவரும் இலங்கையில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்குவதைத் தவிருங்கள். Made in Sri Lanka என்ற லேபிளுடன் வரும் எந்தப் பொருளை நீங்கள் வாங்கினாலும், அங்கு தமிழர்கள் அழிக்கப்பட நீங்களும் துணை போகிறீர்கள் என்று அர்த்தம்..” போன்ற வாசகங்கள் அடங்கிய தட்டிகளைத் தாங்கி தமிழர்கள் நிற்க, அதை ஒருவித இரக்கத்தோடு பார்த்துச் செல்லும் வெளிநாட்டவர், சம்பந்தப்பட்ட கடையில் வேறு நாட்டுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
மீண்டும் அந்தத் தட்டிகளைக் கடக்கும் முன், நாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என்று கூறிவிட்டுச் செல்கின்றனர்.
சும்மா ஏதோ ஒப்புக்கு நடத்தாமல், தொடர்ச்சியாக அமெரிக்காவின் பெரிய நகரங்கள் அனைத்திலுமே ஒரேநரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதில் கைமேல் பலன் கிடைத்துள்ளது.
இன்னொரு பக்கம் இலங்கையில் தங்கள் முதலீடுகளை பெருமளவில் செய்துள்ள சர்வதேச நிறுவனங்களிடமும் இந்தப் போராட்டம் குறித்து எடுத்துசொல்லி, அவர்களது முதலீடுகளை வாபஸ் பெற வைக்கும் முயற்சியிலும் இந்தத் தமிழர்கள் இறங்கியுள்ளனர். இதற்கும் பலன் கிடைக்கும் தருணம் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது.
http://i49.tinypic.com/5b1ic0.jpg
இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria’s Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் முழு வீச்சுடன் நடத்தப்பட்டன.
சிறிய அளவில் – சில மாதங்களிற்கு முன்னதாக – ஓரிரு நகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் – இப்போது, அமெரிக்காவின் பல நகரங்களிற்கும் விரிவாக்கம் பெற்று தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது சர்வதேச சமுதாயத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் [United States Tamil Political Action Committee - USTPAC] ‘இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு’ [Sri Lankan Products Boycott Committee] இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது.
போராட்டக் குழுவினரின் கோரிக்கை மிகத் தெளிவாக இருந்தது:
“நண்பர்களே… இந்தக் கடைகளுக்குச் சென்று எதையும் வாங்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. தாராளமாக செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது ‘Made in Srilanka’ என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது ரத்தம் தோய்ந்திருக்கிறது!”
இந்த வாசகங்கள் தாங்கிய அட்டைகளைக் கைகளில் தாங்கியபடி தமிழ் உணர்வாளர்கள் போராடினர்.
இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாண்டி கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் இலங்கைத் தயாரிப்புகளைத் தவிர்த்துவிட்டு பிற நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். சிலர் தாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு சென்றதும் நடந்தது.
சில அமெரிக்கர்கள், “இலங்கையில் நடந்த விஷயங்களை நாங்கள் அறிவோம். இப்போது நடக்கும் அவலங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களால் எப்படி இலங்கை தயாரிப்புகளை வாங்க முடியும்” என்றும் சில அமெரிக்கர்கள் திருப்பிக் கேட்டது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
http://i50.tinypic.com/5mcvp4.jpg
அதே நேரம், குறிப்பிட்ட கடைகள் இந்தப் போராட்டத்தைக் கண்டு கோபம் கொண்டுள்ளதும் உண்மையே. இந்தக் கடைகளை நடத்துவோர், இறங்கிவந்து போராட்டக்காரர்களிடம் “எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. தயவு செய்து போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள்” என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு போராட்டக்காரர்கள் சொல்லும் பதில், “நாங்கள் அனைத்து பொருட்களையும் வாங்கவிடாமல் தடுக்கவில்லை. இலங்கை தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று வாடிக்கையாளர்களின் மனசாட்சியைத் தொட்டுக் கேட்கிறோம். இந்த சங்கடத்தை நீங்கள் தவிர்க்க நினைத்தால் முதலில் இலங்கையில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள். தற்போதுள்ள முதலீடுகளை திரும்பப் பெறுங்கள்” என்கிறார் அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவையின் துணைத் தலைவரும் போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவருமான டாக்டர் எலீன் ஷாண்டர்.
“இலங்கை அரசு செய்த தமிழினப் படுகெலையை நாம் படங்களாகக் காட்டுகின்றோம்; இலட்சக் கணக்கான தமிழர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நாம் ஆதாரங்களோடு காட்டுகிறோம்; பதாகை அட்டைகளைப் பிடிப்பது மட்டும் இல்லாமல், எல்லா விபரங்களையும் சிறிய பிரசுரங்களாக அச்சிட்டு வாடிக்கையாளர்களின் கைகளில் கொடுக்கின்றோம். இவை எல்லாம் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும்.
சாதாரணமாக ஒரு உடையை வாங்குவதன் மூலம் அவர்கள் கொடுக்கும் பணம், ஒரு மனித சமுதாயத்தின் அழிவுக்கு எப்படியெல்லாம் செலவிடப்படுகின்றது என்பதை விளக்குகின்றோம். இவையெல்லாம் – சாதாரண குடிமகனின் இதயத்தைக் கட்டாயம் உலுக்கும்; நிச்சயமாக உலுக்குகின்றது” என்றார் போராட்டத்தில் பங்கேற்ற சிவா நாதன்.
http://i45.tinypic.com/50nm9w.jpg
இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏதோ இன்று நேற்று தொடங்கியவை அல்ல… சில மாதங்களுக்கு முன்பே ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் முன்னெடுக்கப்பட்டவையே. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் இப்போராட்டத்தை ஆரம்பித்தனர். பிரிட்டனின் கார்டியன் மற்றும் டைம்ஸ் பத்திரிகைகள் ‘இனப்படுகொலை செய்த இலங்கையில் தயாராகும் துணிகள் உள்ளிட்ட எதையும் வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்’ என்று பொது மக்களுக்கு கோரிக்கையே வைத்தன.
இன்று இந்தப் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்க்கும் அளவு விரிவடைந்துள்ளது. முக்கியமாக இலங்கையின் முதுகில் விழும் பெரும் அடியாக மாறிக் கொண்டுள்ளது!
நன்றி : என்வழி
“இனப்படுகொலை என்ற படுபாதகத்தைச் செய்துவரும் இலங்கையில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்குவதைத் தவிருங்கள். Made in Sri Lanka என்ற லேபிளுடன் வரும் எந்தப் பொருளை நீங்கள் வாங்கினாலும், அங்கு தமிழர்கள் அழிக்கப்பட நீங்களும் துணை போகிறீர்கள் என்று அர்த்தம்..” போன்ற வாசகங்கள் அடங்கிய தட்டிகளைத் தாங்கி தமிழர்கள் நிற்க, அதை ஒருவித இரக்கத்தோடு பார்த்துச் செல்லும் வெளிநாட்டவர், சம்பந்தப்பட்ட கடையில் வேறு நாட்டுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
மீண்டும் அந்தத் தட்டிகளைக் கடக்கும் முன், நாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என்று கூறிவிட்டுச் செல்கின்றனர்.
சும்மா ஏதோ ஒப்புக்கு நடத்தாமல், தொடர்ச்சியாக அமெரிக்காவின் பெரிய நகரங்கள் அனைத்திலுமே ஒரேநரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதில் கைமேல் பலன் கிடைத்துள்ளது.
இன்னொரு பக்கம் இலங்கையில் தங்கள் முதலீடுகளை பெருமளவில் செய்துள்ள சர்வதேச நிறுவனங்களிடமும் இந்தப் போராட்டம் குறித்து எடுத்துசொல்லி, அவர்களது முதலீடுகளை வாபஸ் பெற வைக்கும் முயற்சியிலும் இந்தத் தமிழர்கள் இறங்கியுள்ளனர். இதற்கும் பலன் கிடைக்கும் தருணம் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது.
http://i49.tinypic.com/5b1ic0.jpg
இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria’s Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் முழு வீச்சுடன் நடத்தப்பட்டன.
சிறிய அளவில் – சில மாதங்களிற்கு முன்னதாக – ஓரிரு நகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் – இப்போது, அமெரிக்காவின் பல நகரங்களிற்கும் விரிவாக்கம் பெற்று தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது சர்வதேச சமுதாயத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் [United States Tamil Political Action Committee - USTPAC] ‘இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு’ [Sri Lankan Products Boycott Committee] இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது.
போராட்டக் குழுவினரின் கோரிக்கை மிகத் தெளிவாக இருந்தது:
“நண்பர்களே… இந்தக் கடைகளுக்குச் சென்று எதையும் வாங்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. தாராளமாக செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது ‘Made in Srilanka’ என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது ரத்தம் தோய்ந்திருக்கிறது!”
இந்த வாசகங்கள் தாங்கிய அட்டைகளைக் கைகளில் தாங்கியபடி தமிழ் உணர்வாளர்கள் போராடினர்.
இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாண்டி கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் இலங்கைத் தயாரிப்புகளைத் தவிர்த்துவிட்டு பிற நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். சிலர் தாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு சென்றதும் நடந்தது.
சில அமெரிக்கர்கள், “இலங்கையில் நடந்த விஷயங்களை நாங்கள் அறிவோம். இப்போது நடக்கும் அவலங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களால் எப்படி இலங்கை தயாரிப்புகளை வாங்க முடியும்” என்றும் சில அமெரிக்கர்கள் திருப்பிக் கேட்டது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
http://i50.tinypic.com/5mcvp4.jpg
அதே நேரம், குறிப்பிட்ட கடைகள் இந்தப் போராட்டத்தைக் கண்டு கோபம் கொண்டுள்ளதும் உண்மையே. இந்தக் கடைகளை நடத்துவோர், இறங்கிவந்து போராட்டக்காரர்களிடம் “எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. தயவு செய்து போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள்” என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு போராட்டக்காரர்கள் சொல்லும் பதில், “நாங்கள் அனைத்து பொருட்களையும் வாங்கவிடாமல் தடுக்கவில்லை. இலங்கை தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று வாடிக்கையாளர்களின் மனசாட்சியைத் தொட்டுக் கேட்கிறோம். இந்த சங்கடத்தை நீங்கள் தவிர்க்க நினைத்தால் முதலில் இலங்கையில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள். தற்போதுள்ள முதலீடுகளை திரும்பப் பெறுங்கள்” என்கிறார் அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவையின் துணைத் தலைவரும் போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவருமான டாக்டர் எலீன் ஷாண்டர்.
“இலங்கை அரசு செய்த தமிழினப் படுகெலையை நாம் படங்களாகக் காட்டுகின்றோம்; இலட்சக் கணக்கான தமிழர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நாம் ஆதாரங்களோடு காட்டுகிறோம்; பதாகை அட்டைகளைப் பிடிப்பது மட்டும் இல்லாமல், எல்லா விபரங்களையும் சிறிய பிரசுரங்களாக அச்சிட்டு வாடிக்கையாளர்களின் கைகளில் கொடுக்கின்றோம். இவை எல்லாம் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும்.
சாதாரணமாக ஒரு உடையை வாங்குவதன் மூலம் அவர்கள் கொடுக்கும் பணம், ஒரு மனித சமுதாயத்தின் அழிவுக்கு எப்படியெல்லாம் செலவிடப்படுகின்றது என்பதை விளக்குகின்றோம். இவையெல்லாம் – சாதாரண குடிமகனின் இதயத்தைக் கட்டாயம் உலுக்கும்; நிச்சயமாக உலுக்குகின்றது” என்றார் போராட்டத்தில் பங்கேற்ற சிவா நாதன்.
http://i45.tinypic.com/50nm9w.jpg
இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏதோ இன்று நேற்று தொடங்கியவை அல்ல… சில மாதங்களுக்கு முன்பே ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் முன்னெடுக்கப்பட்டவையே. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் இப்போராட்டத்தை ஆரம்பித்தனர். பிரிட்டனின் கார்டியன் மற்றும் டைம்ஸ் பத்திரிகைகள் ‘இனப்படுகொலை செய்த இலங்கையில் தயாராகும் துணிகள் உள்ளிட்ட எதையும் வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்’ என்று பொது மக்களுக்கு கோரிக்கையே வைத்தன.
இன்று இந்தப் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்க்கும் அளவு விரிவடைந்துள்ளது. முக்கியமாக இலங்கையின் முதுகில் விழும் பெரும் அடியாக மாறிக் கொண்டுள்ளது!
நன்றி : என்வழி