சிவா.ஜி
28-11-2009, 05:23 PM
“எங்க அம்மாவுக்கு கல்யாணம். வர்ற 23 ஆம் தேதி. கண்டிப்பா குடும்பத்தோட கலந்துக்குங்க”
பத்திரிக்கையை நீட்டிய என்னைப் பார்த்தவரின் கண்களில் லேசான அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது. பத்திரிக்கைக் கொடுக்க ஆரம்பித்தலிலிருந்தே இந்தவகைப் பார்வைகளை சந்தித்து பழகிவிட்டதால் சிறிய புன்முறுவலோடு அதனை அலட்சியம் செய்துவிட்டு விலகினேன்.
அப்படி பழகவில்லையென்றாலும் நான் எதைப்பற்றியும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் கேரக்டர் இல்லை. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸிதான்.
எங்க அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த கம்பீரம், எந்த சோதனையான சூழ்நிலையியிலும் கண்களில் கண்ணீரே வராத உறுதி, எப்போதும் இதழோரத்தில் லேசாய் இருந்துகொண்டேயிருக்கும் சிரிப்பு என என் ஆதர்ச பெண் என் அம்மா.
அப்பா.....நல்லவர்தான். எனக்கு நாலு வயதாகும்போது சக்கரநாற்காலியில் தள்ளப்பட்ட பிறகும் இரண்டு வருடங்கள் வரை நல்லவராகத்தானிருந்தார். அவரது பென்ஷன் பணம் போதாமல், அம்மா வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்து சந்தேகம் அவரை கொஞ்சம் கொஞ்சமாய் கெட்டவராக்கி, அப்பா என்றாலே வெறுக்குமளவுக்கு போய்விட்டது.
இரண்டுபேருக்கும் காதல் ப்ளஸ் பெற்றோர் சம்மத திருமணம்தான். தாம்பத்யத்தின் ஆரம்பக் காலங்கள் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல ரொம்ப சந்தோஷமாகத்தான் தொடங்கியது. நான் பிறந்து, நாலு வயதுவரை இரண்டு பேருமே போட்டி போட்டுக்கொண்டு என்னைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார்கள். அப்போதுதான் நான் ஏற்கனவே சொன்னதைப் போல அந்த சக்கர நாற்காலி சம்பவம் நிகழ்ந்தது.ஆட்டோக்காரன் உரசியதில் தடுமாறி விழுந்தவர், தலையில் அடிபட்டு வலது பாகம் முழுவதும் இயக்கமில்லாமல், அம்மாவின் உதவியில்லாமல் மற்ற பாகமும் இயங்கமுடியாது என்ற நிலை வந்தபோது, மனதளவில் மிகவும் தளர்ந்துவிட்டார்.
முகத்தில் எந்தக் கஷ்டத்தையும் காட்டாமல் பணிவிடை செய்யும் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் அப்பாதான் கஷ்டப்பட்டார். அம்மாவுக்கும் சேர்த்து அவரே பெருமளவு கண்ணீர்விட்டார். ஆனால் அம்மா வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்து அதே கண்ணீரை வட்டியும் முதலுமாய் அம்மாவிடம் வசூல் செய்ய் நினைத்தாரோ என்னவோ, சந்தேகம் என்ற அரக்கனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அதகளம் செய்தார்.
நன்றாய் இருக்கும் இடது கையால் அம்மாவை அருகில் அழைத்து அறைவார். இயற்கை உபாதைக்குப் பின், பாத்திரத்தை எடுக்க சற்று தாமதமானாலும் அதனை எட்டி உதைப்பார். அதையும் சேர்த்து சுத்தம் செய்யும் அம்மாவை கண்களில் குருரம் தெரிய முறைத்துப் பார்ப்பார்.
அப்போதெல்லாம் என் அப்பாவைப் பார்க்க பயமாக இருக்கும். ஆனால் அடுத்த வருடத்தில் அது ஆத்திரமாகியது. அவரால் எழுந்து வந்து என்னை எதுவும் செய்யமுடியாது என்பதால், அம்மாவை அடிக்கும்போதெல்லாம் அவரை அடித்துவிட்டு ஓடிவிடுவேன்.
“ஓஹோ....உன் பையனை உன் தொழிலுக்கு உதவிக்கு வெச்சுக்கப் போறையா? அதுக்குத்தான் இப்பவே அவனைவிட்டு என்னை அடிக்க வெக்கறையா...ஏண்டி எப்ப புருஷன்காரன் மொடங்கிப்போவான்னு காத்துக்கிட்டிருந்தியா....ச்சீ....அப்படியென்ன சொகம் கேக்குது ஒனக்கு....”
ஒருபக்கமாய் கோணலுடனிருந்த வாயிலிருந்து இப்படி திராவகத்தை வீசியவரை அன்று கையிலிருந்த காம்பஸால் தொடையில் குத்தினேன். ஆனால் அதற்கும் அம்மாதான் அடி வாங்கினாள்.
இந்த கொடுமையும் அடுத்த இரண்டு மாதங்களிலேயே அப்பாவின் மூச்சு நிறுத்தலில் முடிவுக்கு வந்தது. அம்மா அழவில்லை. கல்மனசுக்காரி என்றார்கள். வேலைக்குப் போகும் திமிர் என்றார்கள். ஆனால் அவள் எதையுமே சட்டை செய்யவில்லை. அவளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால்தான் ஆரம்பத்தில் நான் சொன்னதைப் போல எதைப் பற்றியும் கவலைப் படாத ஜென்மமாய் வளர்ந்துவிட்டேன்.
ஆனால் நான் கவலைப் படும் விஷயம் என் அம்மாவின் சிரிப்பு. தன் கஷ்டம், தன் காதல் கணவருக்குத் தெரியக்கூடாது என எந்நேரமும், சிரிப்பை சுமந்து திரிந்தவள், அப்பாவின் மறைவுக்குப் பிறகு அதைத் தொலைத்துவிட்டு புதிதாய் சுமந்து கொண்ட இறுக்கத்துடன் இருந்தாள். அம்மா தொலைத்துவிட்ட அந்த சிரிப்பை திரும்பவும் அவளுக்கு கொடுக்கவேண்டியது பிள்ளயான என் கடமை என்பது தெரிந்தாலும், அதை எப்படி செய்வது எனத் தெரியாமல், கல்லூரியில் முதல் மாணவனாக வந்தேன், அப்போது சிரித்தாள் தாற்காலிகமாக. நல்ல நிறுவனத்தில், கைநிறைய ஊதியத்துடன் வேலை கிடைத்து அனுமதி கடிதத்தை அவள் காலடியில் வைத்தேன். அப்போதும் சிரித்தாள்....மீண்டும் தாற்காலிகமாக.. அந்த சிரிப்பை நிரந்தரமாக்க என்ன வழி....குழம்பினேன்.
அந்த நேரத்தில்தான் தன் அலுவலக நண்பர் என்று பாஸ்கரை அறிமுகப் படுத்தினாள். இருவருக்கும் அலைவரிசை ஒத்துப்போனது அந்த இணக்கத்தில் தெரிந்தது. நல்ல நட்பாகத் தெரிந்தது. ஆரோக்கியமான நட்பாகத் தெரிந்தது. அம்மாவின் முகத்தில் லேசான மலர்ச்சி படரத் தொடங்கியதை உணர்ந்தேன். ஒரே பிள்ளை நான். திருமணத்துக்குப் பிறகு என்னதான் அம்மாவை என்னுடன் வைத்துக்கொண்டாலும், அவளுக்கு அவள் விரும்பும் வாழ்க்கையை வாழமுடியுமா? வருகின்ற மனைவி அனுசரித்துப் போகிறவளாக இருப்பாளா? பலவற்றையும் யோசனை செய்த எனக்கு அப்போதுதான் அந்த எண்ணம் தோன்றியது.
பாஸ்கரை தனிமையில் சந்தித்தேன். மனைவியை இழந்து மகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரையும் என் அம்மாவையும் வாழ்க்கையில் இணயவேண்டுமென வேண்டிக்கொண்டேன். நல்ல நட்பு நாசமாகிவிடுமோ என அச்சப்பட்டவரை, அந்த நட்போடு ஒரு உரிமையும் சேர்வதால் எந்த பாதகமும் இல்லையென்று தேற்றி சம்மதிக்க வைத்தேன். அவரைவிட்டே அம்மாவையும் சம்மதிக்க வைத்தேன்.
அம்மா நீண்டநாட்களுக்குப் பிறகு வெட்கப்பட்டாள். பழைய சிரிப்பு முகத்தில் குடிவந்திருந்தது. அதுதான் எனக்கு வேண்டியது. கஷ்டம் மட்டுமே பார்த்தவள், அந்தக் கஷ்டத்திலும் கண்ணீர் விடாதவள் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். இப்படியொரு மகனா என உச்சிமோந்தாள். சமூகத்தைப் பற்றி கவலைப் பட்டாள். யாருக்கு எது நிகழ்ந்தாலும் கொஞ்ச நாட்களுக்கு அவல் மெல்லும் சமூகம், பிறகு அதையும் மறந்து விடுமென்று சொல்லி அந்த கவலையை கரையவைத்தேன்.
ஆனால்........அப்போதுதான் வளரத் தொடங்கிய என் காதல் இந்தக் கல்யாணத்தால் ஆரம்பத்திலேயே கருகிவிட்டது. ஆம்....பாஸ்கர் அவர்களின் மகளைத்தான் நான் காதலித்துக்கொண்டிருந்தேன். ஆனால் என் அம்மாவின் சந்தோஷத்துக்காக என் காதலை....இல்லையில்லை எங்கள் காதலை கைகழுவினோம். எங்கள் விஷயம் இரண்டுபேருக்குமே தெரியாது என்பது ஆறுதலை அளித்தது.
காதல் கருகியபோது அதன் நெடி என் உள்ளத்தில் கொஞ்சம் காட்டமாகவே வீசியது. ஆனாலும் எத்தனையோ பெண்கள், ஊரெல்லாம் சுற்றிவிட்டு, காதலில் கசிந்துருகிவிட்டு, இரண்டு சொட்டுக் கண்ணீரில் அந்தக் காதலைக் கரைத்துவிட்டு, ‘அண்ணா’ என்று சொல்லி அறுத்துவிட்டுப் போவதில்லையா? அப்படியே இதையும் எடுத்துக்கொண்டேன். எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. அப்படியே ஏதாவது மிச்ச சொச்ச உறுத்தலிருந்தாலும், அவளுக்கு அண்ணனாக இருந்து யாரோ ஒரு நல்லவன் கைகளில் அவளைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் மறைந்து விடப் போகிறது. இல்லையா?
டேக் இட் ஈஸி.....அம்மா சிரித்துக்கொண்டிருப்பாள். அதுபோதும் எனக்கு.
பத்திரிக்கையை நீட்டிய என்னைப் பார்த்தவரின் கண்களில் லேசான அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது. பத்திரிக்கைக் கொடுக்க ஆரம்பித்தலிலிருந்தே இந்தவகைப் பார்வைகளை சந்தித்து பழகிவிட்டதால் சிறிய புன்முறுவலோடு அதனை அலட்சியம் செய்துவிட்டு விலகினேன்.
அப்படி பழகவில்லையென்றாலும் நான் எதைப்பற்றியும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் கேரக்டர் இல்லை. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸிதான்.
எங்க அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த கம்பீரம், எந்த சோதனையான சூழ்நிலையியிலும் கண்களில் கண்ணீரே வராத உறுதி, எப்போதும் இதழோரத்தில் லேசாய் இருந்துகொண்டேயிருக்கும் சிரிப்பு என என் ஆதர்ச பெண் என் அம்மா.
அப்பா.....நல்லவர்தான். எனக்கு நாலு வயதாகும்போது சக்கரநாற்காலியில் தள்ளப்பட்ட பிறகும் இரண்டு வருடங்கள் வரை நல்லவராகத்தானிருந்தார். அவரது பென்ஷன் பணம் போதாமல், அம்மா வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்து சந்தேகம் அவரை கொஞ்சம் கொஞ்சமாய் கெட்டவராக்கி, அப்பா என்றாலே வெறுக்குமளவுக்கு போய்விட்டது.
இரண்டுபேருக்கும் காதல் ப்ளஸ் பெற்றோர் சம்மத திருமணம்தான். தாம்பத்யத்தின் ஆரம்பக் காலங்கள் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல ரொம்ப சந்தோஷமாகத்தான் தொடங்கியது. நான் பிறந்து, நாலு வயதுவரை இரண்டு பேருமே போட்டி போட்டுக்கொண்டு என்னைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார்கள். அப்போதுதான் நான் ஏற்கனவே சொன்னதைப் போல அந்த சக்கர நாற்காலி சம்பவம் நிகழ்ந்தது.ஆட்டோக்காரன் உரசியதில் தடுமாறி விழுந்தவர், தலையில் அடிபட்டு வலது பாகம் முழுவதும் இயக்கமில்லாமல், அம்மாவின் உதவியில்லாமல் மற்ற பாகமும் இயங்கமுடியாது என்ற நிலை வந்தபோது, மனதளவில் மிகவும் தளர்ந்துவிட்டார்.
முகத்தில் எந்தக் கஷ்டத்தையும் காட்டாமல் பணிவிடை செய்யும் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் அப்பாதான் கஷ்டப்பட்டார். அம்மாவுக்கும் சேர்த்து அவரே பெருமளவு கண்ணீர்விட்டார். ஆனால் அம்மா வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்து அதே கண்ணீரை வட்டியும் முதலுமாய் அம்மாவிடம் வசூல் செய்ய் நினைத்தாரோ என்னவோ, சந்தேகம் என்ற அரக்கனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அதகளம் செய்தார்.
நன்றாய் இருக்கும் இடது கையால் அம்மாவை அருகில் அழைத்து அறைவார். இயற்கை உபாதைக்குப் பின், பாத்திரத்தை எடுக்க சற்று தாமதமானாலும் அதனை எட்டி உதைப்பார். அதையும் சேர்த்து சுத்தம் செய்யும் அம்மாவை கண்களில் குருரம் தெரிய முறைத்துப் பார்ப்பார்.
அப்போதெல்லாம் என் அப்பாவைப் பார்க்க பயமாக இருக்கும். ஆனால் அடுத்த வருடத்தில் அது ஆத்திரமாகியது. அவரால் எழுந்து வந்து என்னை எதுவும் செய்யமுடியாது என்பதால், அம்மாவை அடிக்கும்போதெல்லாம் அவரை அடித்துவிட்டு ஓடிவிடுவேன்.
“ஓஹோ....உன் பையனை உன் தொழிலுக்கு உதவிக்கு வெச்சுக்கப் போறையா? அதுக்குத்தான் இப்பவே அவனைவிட்டு என்னை அடிக்க வெக்கறையா...ஏண்டி எப்ப புருஷன்காரன் மொடங்கிப்போவான்னு காத்துக்கிட்டிருந்தியா....ச்சீ....அப்படியென்ன சொகம் கேக்குது ஒனக்கு....”
ஒருபக்கமாய் கோணலுடனிருந்த வாயிலிருந்து இப்படி திராவகத்தை வீசியவரை அன்று கையிலிருந்த காம்பஸால் தொடையில் குத்தினேன். ஆனால் அதற்கும் அம்மாதான் அடி வாங்கினாள்.
இந்த கொடுமையும் அடுத்த இரண்டு மாதங்களிலேயே அப்பாவின் மூச்சு நிறுத்தலில் முடிவுக்கு வந்தது. அம்மா அழவில்லை. கல்மனசுக்காரி என்றார்கள். வேலைக்குப் போகும் திமிர் என்றார்கள். ஆனால் அவள் எதையுமே சட்டை செய்யவில்லை. அவளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால்தான் ஆரம்பத்தில் நான் சொன்னதைப் போல எதைப் பற்றியும் கவலைப் படாத ஜென்மமாய் வளர்ந்துவிட்டேன்.
ஆனால் நான் கவலைப் படும் விஷயம் என் அம்மாவின் சிரிப்பு. தன் கஷ்டம், தன் காதல் கணவருக்குத் தெரியக்கூடாது என எந்நேரமும், சிரிப்பை சுமந்து திரிந்தவள், அப்பாவின் மறைவுக்குப் பிறகு அதைத் தொலைத்துவிட்டு புதிதாய் சுமந்து கொண்ட இறுக்கத்துடன் இருந்தாள். அம்மா தொலைத்துவிட்ட அந்த சிரிப்பை திரும்பவும் அவளுக்கு கொடுக்கவேண்டியது பிள்ளயான என் கடமை என்பது தெரிந்தாலும், அதை எப்படி செய்வது எனத் தெரியாமல், கல்லூரியில் முதல் மாணவனாக வந்தேன், அப்போது சிரித்தாள் தாற்காலிகமாக. நல்ல நிறுவனத்தில், கைநிறைய ஊதியத்துடன் வேலை கிடைத்து அனுமதி கடிதத்தை அவள் காலடியில் வைத்தேன். அப்போதும் சிரித்தாள்....மீண்டும் தாற்காலிகமாக.. அந்த சிரிப்பை நிரந்தரமாக்க என்ன வழி....குழம்பினேன்.
அந்த நேரத்தில்தான் தன் அலுவலக நண்பர் என்று பாஸ்கரை அறிமுகப் படுத்தினாள். இருவருக்கும் அலைவரிசை ஒத்துப்போனது அந்த இணக்கத்தில் தெரிந்தது. நல்ல நட்பாகத் தெரிந்தது. ஆரோக்கியமான நட்பாகத் தெரிந்தது. அம்மாவின் முகத்தில் லேசான மலர்ச்சி படரத் தொடங்கியதை உணர்ந்தேன். ஒரே பிள்ளை நான். திருமணத்துக்குப் பிறகு என்னதான் அம்மாவை என்னுடன் வைத்துக்கொண்டாலும், அவளுக்கு அவள் விரும்பும் வாழ்க்கையை வாழமுடியுமா? வருகின்ற மனைவி அனுசரித்துப் போகிறவளாக இருப்பாளா? பலவற்றையும் யோசனை செய்த எனக்கு அப்போதுதான் அந்த எண்ணம் தோன்றியது.
பாஸ்கரை தனிமையில் சந்தித்தேன். மனைவியை இழந்து மகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரையும் என் அம்மாவையும் வாழ்க்கையில் இணயவேண்டுமென வேண்டிக்கொண்டேன். நல்ல நட்பு நாசமாகிவிடுமோ என அச்சப்பட்டவரை, அந்த நட்போடு ஒரு உரிமையும் சேர்வதால் எந்த பாதகமும் இல்லையென்று தேற்றி சம்மதிக்க வைத்தேன். அவரைவிட்டே அம்மாவையும் சம்மதிக்க வைத்தேன்.
அம்மா நீண்டநாட்களுக்குப் பிறகு வெட்கப்பட்டாள். பழைய சிரிப்பு முகத்தில் குடிவந்திருந்தது. அதுதான் எனக்கு வேண்டியது. கஷ்டம் மட்டுமே பார்த்தவள், அந்தக் கஷ்டத்திலும் கண்ணீர் விடாதவள் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். இப்படியொரு மகனா என உச்சிமோந்தாள். சமூகத்தைப் பற்றி கவலைப் பட்டாள். யாருக்கு எது நிகழ்ந்தாலும் கொஞ்ச நாட்களுக்கு அவல் மெல்லும் சமூகம், பிறகு அதையும் மறந்து விடுமென்று சொல்லி அந்த கவலையை கரையவைத்தேன்.
ஆனால்........அப்போதுதான் வளரத் தொடங்கிய என் காதல் இந்தக் கல்யாணத்தால் ஆரம்பத்திலேயே கருகிவிட்டது. ஆம்....பாஸ்கர் அவர்களின் மகளைத்தான் நான் காதலித்துக்கொண்டிருந்தேன். ஆனால் என் அம்மாவின் சந்தோஷத்துக்காக என் காதலை....இல்லையில்லை எங்கள் காதலை கைகழுவினோம். எங்கள் விஷயம் இரண்டுபேருக்குமே தெரியாது என்பது ஆறுதலை அளித்தது.
காதல் கருகியபோது அதன் நெடி என் உள்ளத்தில் கொஞ்சம் காட்டமாகவே வீசியது. ஆனாலும் எத்தனையோ பெண்கள், ஊரெல்லாம் சுற்றிவிட்டு, காதலில் கசிந்துருகிவிட்டு, இரண்டு சொட்டுக் கண்ணீரில் அந்தக் காதலைக் கரைத்துவிட்டு, ‘அண்ணா’ என்று சொல்லி அறுத்துவிட்டுப் போவதில்லையா? அப்படியே இதையும் எடுத்துக்கொண்டேன். எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. அப்படியே ஏதாவது மிச்ச சொச்ச உறுத்தலிருந்தாலும், அவளுக்கு அண்ணனாக இருந்து யாரோ ஒரு நல்லவன் கைகளில் அவளைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் மறைந்து விடப் போகிறது. இல்லையா?
டேக் இட் ஈஸி.....அம்மா சிரித்துக்கொண்டிருப்பாள். அதுபோதும் எனக்கு.