View Full Version : தண்டனை!
குணமதி
26-11-2009, 03:29 PM
தண்டனை!
உற்றவருக்கும் உதவுகிறவருக்கும்...
ஒரே நேரத்தில் தண்டனை -
நோயாளி மருத்துவ மனையில்.
குணமதி
27-11-2009, 02:57 AM
யாராவது கருத்தை எழுதுங்கள்; இந்தக் 'குறுங் கவிதை'ப் பக்கம் கவனம் செலுத்துவது மிகமிகக் குறைவாக உள்ளதே!
ஓவியன்
27-11-2009, 03:34 AM
உதவுகிறவருக்கு அது தண்டனை தானா..???
உற்றவருக்கு நோய் உற்றதால் தானே
உதவ வந்தார்,
உற்றவருக்கு உதவுவதில் கிடைக்கும்
மன நிம்மதியே தனி தானே.....
நான் கூறிய உற்றவர், உறவினர், வேண்டியவர்...
சிந்திக்க வைத்த கவித்துளிகளுக்கு நன்றி குணமதி..!!
குணமதி
27-11-2009, 07:38 AM
பின்னூடத்திற்கு முதலில் நன்றி.
உற்றவர் - நோயுற்றவர்.
உதவுகிறவருக்கு மனநிறைவு என்பது உண்மை.
உலகில் மற்றவர்கள் பார்வையில், உலகியலில் - பொதுவாக, அவர் தொல்லைப் படுவதாகத் தோன்றுவதை வைத்தே, தண்டனை என்றேன்.
உண்மையில், நோயுற்றோருக்கு உதவுவது ஒப்பற்ற தொண்டு என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
கருத்துரைகளுக்கு, மீண்டும் நன்றி.
அமரன்
27-11-2009, 09:18 PM
கணத்தில் தடுமாற வைத்த கவிதை.
உபத்திரவம் என்பதை பிச்சுப் பார்த்தால் திரவம் இருக்கு.
உலகப் பார்வையுடன் கவிதை பொருந்திப் போகிறது.
பாராட்டுகள்.
குணமதி
28-11-2009, 01:38 AM
கணத்தில் தடுமாற வைத்த கவிதை.
உபத்திரவம் என்பதை பிச்சுப் பார்த்தால் திரவம் இருக்கு.
உலகப் பார்வையுடன் கவிதை பொருந்திப் போகிறது.
பாராட்டுகள்.
நன்றி.