PDA

View Full Version : பாசத்தாக்கம்!



குணமதி
14-11-2009, 03:49 PM
கதறக் கதற அடிக்கிறாளே...

வண்டிகள் பெருத்த சாலைக்கு ஓடும் மகனை.

பாசத் தாக்கம்.

பா.ராஜேஷ்
14-11-2009, 05:12 PM
ஆஹா! தாய்ப்பாசம் ஈடு இணையற்றது என்பதை பறைசாற்றும் வரிகள் ...

குணமதி
15-11-2009, 01:36 AM
ஆஹா! தாய்ப்பாசம் ஈடு இணையற்றது என்பதை பறைசாற்றும் வரிகள் ...

நன்றி.

சரண்யா
15-11-2009, 02:15 AM
தாயின் அக்கறை....
இப்போ அடிக்க முடியாது என்று எண்ணுகிறேன்..
நன்றிகள் குணமதி அவர்களே...

குணமதி
15-11-2009, 09:07 AM
தாயின் அக்கறை....
இப்போ அடிக்க முடியாது என்று எண்ணுகிறேன்..
நன்றிகள் குணமதி அவர்களே...

எச்சரிக்கைக்காகத் தாய் குழந்தையை அடிப்பது தண்டனைக்குரிய குற்றமா, என்ன?

கீதம்
16-11-2009, 01:27 AM
சில நேரங்களில் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று முரண்டு செய்யும் பிள்ளையை ஒருகையிலும், மறு கையில் ஒரு குச்சியும் கொண்டு அடித்து அடித்துப் பள்ளிக்கு இழுத்து வரும் தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன்.அப்போதெல்லாம் மிகவும் வேதனையாயிருக்கும். அவள் செய்வது மகனின் எதிர்கால நலன் கருதிதான் என்றாலும், அக்காட்சி நம் கண்களில் நீரை வரவழைக்கத்தான் செய்கிறது.
தாய்மைக்குள் பொதிந்திருக்கும் பாசத்திற்கு அளவுகோல் ஏது?
அழகாய் எடுத்தியம்பும் கவிதைக்கு பாராட்டு குணமதி அவர்களே.

குணமதி
16-11-2009, 02:57 AM
சில நேரங்களில் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று முரண்டு செய்யும் பிள்ளையை ஒருகையிலும், மறு கையில் ஒரு குச்சியும் கொண்டு அடித்து அடித்துப் பள்ளிக்கு இழுத்து வரும் தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன்.அப்போதெல்லாம் மிகவும் வேதனையாயிருக்கும். அவள் செய்வது மகனின் எதிர்கால நலன் கருதிதான் என்றாலும், அக்காட்சி நம் கண்களில் நீரை வரவழைக்கத்தான் செய்கிறது.
தாய்மைக்குள் பொதிந்திருக்கும் பாசத்திற்கு அளவுகோல் ஏது?
அழகாய் எடுத்தியம்பும் கவிதைக்கு பாராட்டு குணமதி அவர்களே.

நன்றி.

ஜனகன்
16-11-2009, 07:24 AM
மேலை நாடுகளில் பெற்றார் பிள்ளைகளுக்கு அடித்தாலே அது தடனைக்குரிய குற்றம். அதுவும் நீங்கள் பொது இடத்தில் எந்கிரீர்கள், நிற்சயம் தண்டனைதான்.

இளசு
16-11-2009, 08:34 PM
பெரிய தீமை தடுக்க
சிறு தீமை ...

பெரியம்மை தடுக்க
தடுப்பூசி போல..


அன்னை ம(க)ருத்துவம்!

பாராட்டுகள் குணமதி!

அமரன்
16-11-2009, 08:36 PM
இந்தப் பாசத்தின் மறுதாக்கம் பயங்கரமானது..

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது..

ஆனால் அடிபட்ட புலி....?

அம்மா எதுவாகவும் இருக்கட்டும்.... பிள்ளை பூனையா புலியா..

சிந்தனைத் தூண்டில்..

சுகந்தப்ரீதன்
17-11-2009, 08:50 AM
யதார்த்தமான ஹைக்கூ ரகக்கவிதை...!!

வாழ்த்துக்கள் குணமதி..!!

குணமதி
17-11-2009, 10:53 AM
பெரிய தீமை தடுக்க
சிறு தீமை ...

பெரியம்மை தடுக்க
தடுப்பூசி போல..


அன்னை ம(க)ருத்துவம்!

பாராட்டுகள் குணமதி!

நன்றி இளசு.

குணமதி
17-11-2009, 10:55 AM
இந்தப் பாசத்தின் மறுதாக்கம் பயங்கரமானது..

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது..

ஆனால் அடிபட்ட புலி....?

அம்மா எதுவாகவும் இருக்கட்டும்.... பிள்ளை பூனையா புலியா..

சிந்தனைத் தூண்டில்..


பூனை என்றாலும் புலி என்றாலும் சிறுபிள்ளையாக இருக்கும் போது தாயைத் தாயாகத் தானே எண்ணக் கூடும்!

நன்றி.

குணமதி
17-11-2009, 10:56 AM
யதார்த்தமான ஹைக்கூ ரகக்கவிதை...!!

வாழ்த்துக்கள் குணமதி..!!

நன்றி.