சொ.ஞானசம்பந்தன்
13-11-2009, 01:57 AM
'ஒளவையார் பாட்டில் பொருட்குற்றம்' என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு வந்த மறுப்புகளுள்,
"அன்று குற்றம் கண்டுபிடித்து சொல்லியிருந்தால் சரியே அன்றி பிற்காலத்தில் அதனை ஆராய்வது சரியல்ல."
(மேற்கண்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப்பிழைகள் என்னுடையவையல்ல.)
என்றொரு கருத்து எனக்கெதிராய் முன் வைக்கப்பட்டது. அதாவது ஓர் இலக்கியத்தை அது தோன்றிய காலத்தில் மட்டுமே ஆராயலாம், குற்றம் கண்டுபிடிக்கலாம், பின்னோர் அதை ஆராய்வது தவறு என்கிறது அக்கருத்து. அதற்கு ஆப்பு வைத்து இறுக்குவதற்குத் தனிக் கட்டுரை தேவைப்பட்டது.
அது இது:
நூற்றாண்டைக் குறிக்கும் எண் அடைப்புக்குறிக்குள்.
1. மனு சாத்திரம் (2க்கு முன்) சாத்திரமே அல்ல என்று ஒரேயடியாய்த் தாக்கியவர் சுப்பிரமணிய பாரதியார்.(20)
சூத்திரனுக் கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரங் கூறிடுமாயின் - அது
சாத்திர மன்று சதியெனக் கண்டோம்.
1800 ஆண்டுக்குப் பின்பு பாரதி ஆய்ந்துள்ளார்.
2. திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகரின்(10) பல கருத்துகளை ஆராய்ந்து மறுத்துப் புதிய உரை எழுதியவர் புலவர் குழந்தை(20). நூல்: திருக்குறளும் பரிமேலழகரும். (1000 ஆண்டுக்குப் பின்பு)
3. கம்பன்(12) காவியத்தை ஆராய்ந்து அவனைத் தாக்கிக் 'கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்' என்ற நூலை இயற்றினார் பா.வே.மாணிக்க நாயகர்(20)
4. அதே காவியத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி அண்ணாதுரை (20) எழுதிய நூல்: கம்பரசம்.
5. உரையாசிரியர்களுள் சிலர் இலக்கியங்களுக்கும் வேறு சிலர் இலக்கணங்களுக்கும் உரையெழுதினர். எல்லாவற்றுக்கும் உரை இயற்றிய ஒரே அறிஞர் நச்சினார்க்கினியர்(14). எனவேதான் "உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்" என்று அவரைத் தமிழறிஞர் உலகம் போற்றிப் புகழ்கிறது. அவர் முல்லைப் பாட்டுக்கு எழுதிய உரையில் குற்றங்காட்டி மறுத்து வேறுரை இயற்றினார் மறைமலையடிகள்(20). நூல்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சி.
6. கிரேக்க ஈசோப்பின் கதைகளைச் செய்யுள் வடிவத்தில் எழுதி 12 நூல்கள் வெளியிட்டார் லஃபோன்த்தேன்(17) என்ற பிரெஞ்சு எழுத்தாளர். அவருடைய செய்யுள்கள் சிலவற்றின் குறைபாடுகளை எடுத்துக் காட்டினார் பிரெஞ்சு அறிஞர் ருசோ(18) தம் எமீல் என்ற நூலில்.
7. அரிஸ்டாட்டில் (கி.மு.4) மாபெரும் கிரேக்க மேதை. மாவீரன் அலெக்சாண்டரின் குரு. அவர் தொடாத துறையில்லை, கருத்துத் தெரிவிக்காத இயல் இல்லை என்று போற்றுமளவுக்கு இயற்பியல், உயிரியல், விலங்கியல், கவிதை, நாடகம், தருக்கம், அரசியல், இசை முதலிய பலவற்றைப் பற்றிய நூல்களை இயற்றியவர். அவருடைய கொள்கைகள் தாம் ஐரோப்பிய அறிஞர்களுக்கு வழிகாட்டிகளாய் நீண்ட நெடுங்காலம் நிலைபெற்றிருந்தன.
அவரை எதிர்க்கத் துணிந்தார் பெரோ(17) என்ற பிரெஞ்சு எழுத்தாளர். உலகமறிந்த கதைகளாகிய சிந்தரெலா, தூங்கும் அழகி (sleeping beauty) முதலியவற்றின் ஆசிரியராகிய இவர் '14 ஆம் லூயியின் சகாப்தம்' என்ற தம் கவிதையில் கிரேக்கக் கவிஞர் ஓமரிடமும், அரிஸ்டாட்டிலிடமும் குறைகள் உண்டு என்று தெரிவித்தார்.
உடனடியாய் ஆகா! என்று வரிந்து கட்டித் தொடை தட்டி எழுந்தனர் சிலர். அவர்கள் பெரோவை நோக்கி, "அரிஸ்டாட்டில் எவ்வளவு பெரிய மேதை! அவரை விட நீர் அறிவாளியா? அவரைக் குறை சொல்ல உமக்கென்ன தகுதி? அவரிடங் குற்றங் கண்டு பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறீரா? அவரைப் போல் உம்மால் பல துறை ஆய்வு நூல்கள் எழுத இயலுமா?" என்றெல்லாம் கேள்விக்கணைகளைத்.......தொடுக்கவில்லை! காரணம் என்ன?
அவர்கள் அறிஞர்கள், நிறைகுடங்கள், அப்படிக் கேட்கமாட்டார்கள். கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்து அவர்கள் வாதிட்டார்கள். அவர்கள் புஆலோ, ரசீன், லஃபோன்த்தேன், லபுருய்யேர் என நால்வர். பெரோவை ஆதரித்தவர் ஃபோன்த்தனேல் மட்டுமே.
எழுத்துப்போர் மும்முரமாய் நடைபெற்றது. இறுதியில் பழைமைவாதிகள் தோற்றார்கள். அரிஸ்ட்டாட்டிலின் கொள்கைகள் சிறிது சிறிதாய்க் கைவிடப்பட்டன.
மேற்காட்டிய முன்னுதாரணங்கள் எக்கால இலக்கியத்தையும் படைப்பையும் பிற்காலத்தார் திறனாயலாம், குறை சொல்லலாம், மறுக்கலாம் என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.
ஆகையால் இலக்கியத்தை ஆராய்வதற்குக் காலக்கெடு நிபந்தனை எதுவும் இல்லை, நிபந்தனை விதிப்பவர் அறியாதாரே!
"அன்று குற்றம் கண்டுபிடித்து சொல்லியிருந்தால் சரியே அன்றி பிற்காலத்தில் அதனை ஆராய்வது சரியல்ல."
(மேற்கண்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப்பிழைகள் என்னுடையவையல்ல.)
என்றொரு கருத்து எனக்கெதிராய் முன் வைக்கப்பட்டது. அதாவது ஓர் இலக்கியத்தை அது தோன்றிய காலத்தில் மட்டுமே ஆராயலாம், குற்றம் கண்டுபிடிக்கலாம், பின்னோர் அதை ஆராய்வது தவறு என்கிறது அக்கருத்து. அதற்கு ஆப்பு வைத்து இறுக்குவதற்குத் தனிக் கட்டுரை தேவைப்பட்டது.
அது இது:
நூற்றாண்டைக் குறிக்கும் எண் அடைப்புக்குறிக்குள்.
1. மனு சாத்திரம் (2க்கு முன்) சாத்திரமே அல்ல என்று ஒரேயடியாய்த் தாக்கியவர் சுப்பிரமணிய பாரதியார்.(20)
சூத்திரனுக் கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரங் கூறிடுமாயின் - அது
சாத்திர மன்று சதியெனக் கண்டோம்.
1800 ஆண்டுக்குப் பின்பு பாரதி ஆய்ந்துள்ளார்.
2. திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகரின்(10) பல கருத்துகளை ஆராய்ந்து மறுத்துப் புதிய உரை எழுதியவர் புலவர் குழந்தை(20). நூல்: திருக்குறளும் பரிமேலழகரும். (1000 ஆண்டுக்குப் பின்பு)
3. கம்பன்(12) காவியத்தை ஆராய்ந்து அவனைத் தாக்கிக் 'கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்' என்ற நூலை இயற்றினார் பா.வே.மாணிக்க நாயகர்(20)
4. அதே காவியத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி அண்ணாதுரை (20) எழுதிய நூல்: கம்பரசம்.
5. உரையாசிரியர்களுள் சிலர் இலக்கியங்களுக்கும் வேறு சிலர் இலக்கணங்களுக்கும் உரையெழுதினர். எல்லாவற்றுக்கும் உரை இயற்றிய ஒரே அறிஞர் நச்சினார்க்கினியர்(14). எனவேதான் "உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்" என்று அவரைத் தமிழறிஞர் உலகம் போற்றிப் புகழ்கிறது. அவர் முல்லைப் பாட்டுக்கு எழுதிய உரையில் குற்றங்காட்டி மறுத்து வேறுரை இயற்றினார் மறைமலையடிகள்(20). நூல்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சி.
6. கிரேக்க ஈசோப்பின் கதைகளைச் செய்யுள் வடிவத்தில் எழுதி 12 நூல்கள் வெளியிட்டார் லஃபோன்த்தேன்(17) என்ற பிரெஞ்சு எழுத்தாளர். அவருடைய செய்யுள்கள் சிலவற்றின் குறைபாடுகளை எடுத்துக் காட்டினார் பிரெஞ்சு அறிஞர் ருசோ(18) தம் எமீல் என்ற நூலில்.
7. அரிஸ்டாட்டில் (கி.மு.4) மாபெரும் கிரேக்க மேதை. மாவீரன் அலெக்சாண்டரின் குரு. அவர் தொடாத துறையில்லை, கருத்துத் தெரிவிக்காத இயல் இல்லை என்று போற்றுமளவுக்கு இயற்பியல், உயிரியல், விலங்கியல், கவிதை, நாடகம், தருக்கம், அரசியல், இசை முதலிய பலவற்றைப் பற்றிய நூல்களை இயற்றியவர். அவருடைய கொள்கைகள் தாம் ஐரோப்பிய அறிஞர்களுக்கு வழிகாட்டிகளாய் நீண்ட நெடுங்காலம் நிலைபெற்றிருந்தன.
அவரை எதிர்க்கத் துணிந்தார் பெரோ(17) என்ற பிரெஞ்சு எழுத்தாளர். உலகமறிந்த கதைகளாகிய சிந்தரெலா, தூங்கும் அழகி (sleeping beauty) முதலியவற்றின் ஆசிரியராகிய இவர் '14 ஆம் லூயியின் சகாப்தம்' என்ற தம் கவிதையில் கிரேக்கக் கவிஞர் ஓமரிடமும், அரிஸ்டாட்டிலிடமும் குறைகள் உண்டு என்று தெரிவித்தார்.
உடனடியாய் ஆகா! என்று வரிந்து கட்டித் தொடை தட்டி எழுந்தனர் சிலர். அவர்கள் பெரோவை நோக்கி, "அரிஸ்டாட்டில் எவ்வளவு பெரிய மேதை! அவரை விட நீர் அறிவாளியா? அவரைக் குறை சொல்ல உமக்கென்ன தகுதி? அவரிடங் குற்றங் கண்டு பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறீரா? அவரைப் போல் உம்மால் பல துறை ஆய்வு நூல்கள் எழுத இயலுமா?" என்றெல்லாம் கேள்விக்கணைகளைத்.......தொடுக்கவில்லை! காரணம் என்ன?
அவர்கள் அறிஞர்கள், நிறைகுடங்கள், அப்படிக் கேட்கமாட்டார்கள். கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்து அவர்கள் வாதிட்டார்கள். அவர்கள் புஆலோ, ரசீன், லஃபோன்த்தேன், லபுருய்யேர் என நால்வர். பெரோவை ஆதரித்தவர் ஃபோன்த்தனேல் மட்டுமே.
எழுத்துப்போர் மும்முரமாய் நடைபெற்றது. இறுதியில் பழைமைவாதிகள் தோற்றார்கள். அரிஸ்ட்டாட்டிலின் கொள்கைகள் சிறிது சிறிதாய்க் கைவிடப்பட்டன.
மேற்காட்டிய முன்னுதாரணங்கள் எக்கால இலக்கியத்தையும் படைப்பையும் பிற்காலத்தார் திறனாயலாம், குறை சொல்லலாம், மறுக்கலாம் என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.
ஆகையால் இலக்கியத்தை ஆராய்வதற்குக் காலக்கெடு நிபந்தனை எதுவும் இல்லை, நிபந்தனை விதிப்பவர் அறியாதாரே!