Ravee
11-11-2009, 06:37 PM
அய்யா சொன்ன வாக்கு ....
http://static.flickr.com/66/154141542_ce3e7bd20f.jpg
பள்ளி ஆண்டுவிழா புத்தகத்தில்
ஒண்ணு எழுதனும்
தமிழ் அய்யா உதவி கேட்டு
அவர் அருகில் இருந்தேன்
உன் ஆற்றலுக்கும் அறிவுக்கும்
என்ன வருமோ
அதை அழகான தமிழாலே
எழுது என்றார்
கவிதை பாடி பழக்கம் இல்லை
கட்டுரைக்கு நேரம் இல்லை
கதை சொல்ல தெரியாது
கதம்பமா சேதி போட
வழி சொல்லுங்க அய்யா
அய்யா சொன்னார்
மூவாறு வயசாச்சே
முழிக்கிறியே தம்பி
முக்கினா வாறதுக்கு
தமிழ் வாத்து முட்டை இல்லை
நூலகம் போய் பாரு
நல்லாவே புரியும் என்றார்
அரைமணி நேரம் போக்கி
அய்யாவிடம் போனேன்
அங்க என்ன பார்த்த தம்பி
அனைத்தையுமே சொல்லு
ஒளிக்காமல் மறைக்காமல்
உள்ளதையே சொன்னேன்
அய்யா நீளமான மேடை சுத்தி
ஏராளமா ஆளு
மேசை மேலே பத்திரிக்கை சில நூறு
புத்தகம் எல்லாம் அடுக்கி இருக்க
பத்திரிகை இறைந்து கிடக்க
ஒண்ணுமே புரியலியே
இதில் என்ன இருக்கு சேதி
சிரித்துக்கொண்டே அய்யா சொன்னார்
தம்பி இறைந்து கிடக்கும்
பொழுதுபோக்கு பத்திரிகை எல்லாம்
எடைக்கு போகும்
இரண்டு வாரம் கழித்து என்றார்
இறவாத வரம் பெற்ற
புத்தகம் எல்லாம்
என்றைக்கும் இருக்குமே
நூலகத்தின் பலகை மேலே
பயன் இல்லா சேதி எல்லாம்
குப்பையில் போகும்
நீ படைப்பது ஒன்றே
காவியம் ஆகும்
கருத்தோடு படி....
கவிதைகள் வடி....
கட்டுரை எழுது....
காலத்திற்கும் இருக்கும்
அய்யா சொன்ன வாக்கு
அருள் வாக்கு தாங்க !!!
நீங்க சொல்லும் வாழ்த்து
எல்லாம் அவருக்கு தாங்க !!!
http://static.flickr.com/66/154141542_ce3e7bd20f.jpg
பள்ளி ஆண்டுவிழா புத்தகத்தில்
ஒண்ணு எழுதனும்
தமிழ் அய்யா உதவி கேட்டு
அவர் அருகில் இருந்தேன்
உன் ஆற்றலுக்கும் அறிவுக்கும்
என்ன வருமோ
அதை அழகான தமிழாலே
எழுது என்றார்
கவிதை பாடி பழக்கம் இல்லை
கட்டுரைக்கு நேரம் இல்லை
கதை சொல்ல தெரியாது
கதம்பமா சேதி போட
வழி சொல்லுங்க அய்யா
அய்யா சொன்னார்
மூவாறு வயசாச்சே
முழிக்கிறியே தம்பி
முக்கினா வாறதுக்கு
தமிழ் வாத்து முட்டை இல்லை
நூலகம் போய் பாரு
நல்லாவே புரியும் என்றார்
அரைமணி நேரம் போக்கி
அய்யாவிடம் போனேன்
அங்க என்ன பார்த்த தம்பி
அனைத்தையுமே சொல்லு
ஒளிக்காமல் மறைக்காமல்
உள்ளதையே சொன்னேன்
அய்யா நீளமான மேடை சுத்தி
ஏராளமா ஆளு
மேசை மேலே பத்திரிக்கை சில நூறு
புத்தகம் எல்லாம் அடுக்கி இருக்க
பத்திரிகை இறைந்து கிடக்க
ஒண்ணுமே புரியலியே
இதில் என்ன இருக்கு சேதி
சிரித்துக்கொண்டே அய்யா சொன்னார்
தம்பி இறைந்து கிடக்கும்
பொழுதுபோக்கு பத்திரிகை எல்லாம்
எடைக்கு போகும்
இரண்டு வாரம் கழித்து என்றார்
இறவாத வரம் பெற்ற
புத்தகம் எல்லாம்
என்றைக்கும் இருக்குமே
நூலகத்தின் பலகை மேலே
பயன் இல்லா சேதி எல்லாம்
குப்பையில் போகும்
நீ படைப்பது ஒன்றே
காவியம் ஆகும்
கருத்தோடு படி....
கவிதைகள் வடி....
கட்டுரை எழுது....
காலத்திற்கும் இருக்கும்
அய்யா சொன்ன வாக்கு
அருள் வாக்கு தாங்க !!!
நீங்க சொல்லும் வாழ்த்து
எல்லாம் அவருக்கு தாங்க !!!