குணமதி
06-11-2009, 01:43 PM
உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் இந்தக் காலத்ததில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தம் தொழிலை நடத்தி வருவதை அறிந்து வருகின்றோம்.
சரியான விதை கிடக்காமை, வேலைக்கு ஆள் கிடைக்காமை, செயற்கை உரங்களால் மண்ணின் வளச்சிதைவு, பூச்சி கொல்லிகளால் விளைபொருள் நஞ்சூட்டம், அறுவடை செய்கையில் பல்வேறு சிக்கல்கள், விளைபொருளுக்குத் தகுந்த விலை கிடைக்காததால் இழப்பு, இடைத் தரகர்களின் சுரண்டல் போலும் எண்ணற்ற இன்னல்களால் இன்று உழவர்கள் தொல்லைப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு தொல்லை இடையூறுகளுக்கு இடையில் கடன் வாங்கிப் பயிரிட்ட பின்பு, பல்வேறு காரணங்களால் தக்க பலன் கிடைக்காது இழப்பை நேர் கொள்ளும் உழவர்கள் பலர், தற்கொலை செய்கொண்டு இறந்து போகும் செய்திகளையெல்லாம் படித்து வருகின்றோம்.
இந்த நிலை இப்போது. முன்பும் கூட உழவுத்தொழில் எளிய தொழிலாக இல்லை என்ற உண்மையைப் பழமொழிகளும் கூட சொல்கின்றன. அவற்றுள், ' உழுதவன் கணக்குப் பார்த்தால், உழவுகோலும் மிஞ்சாது' என்ற பழமொழியும் ஒன்றாகும். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னால், உழவுத்தொழில் மிகவும் சிக்ககலானது என்ற செய்தியை ஒருபாட்டின் வழி அறிகிறோம்.
'விநோத ரச மஞ்சரி' என்ற பழைய நூலில் உள்ள இந்தப் பாடலைப் பாருங்கள் :
ஏரும் இரண்டுளதாய் இல்லத்தில் வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுளதாய் - ஊரருகே
சென்று வரஎளிதாய்ச் செய்வாரும் சொல்கேட்கில்
என்றும் உழவே இனிது.
எந்த வசதியிருந்தால் உழவுத்தொழில் இனிதாக இருக்கும் என்று விளக்குகிறது இப் பாடல். பொருள் எளிதில் புரிகிறது. இவ்வாறு வசதிகள் இல்லாதபோது, உழவுத் தொழில் துன்பந் தருவதாகும் என்று சொல்லாமல் சொல்கிறது!
சரியான விதை கிடக்காமை, வேலைக்கு ஆள் கிடைக்காமை, செயற்கை உரங்களால் மண்ணின் வளச்சிதைவு, பூச்சி கொல்லிகளால் விளைபொருள் நஞ்சூட்டம், அறுவடை செய்கையில் பல்வேறு சிக்கல்கள், விளைபொருளுக்குத் தகுந்த விலை கிடைக்காததால் இழப்பு, இடைத் தரகர்களின் சுரண்டல் போலும் எண்ணற்ற இன்னல்களால் இன்று உழவர்கள் தொல்லைப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு தொல்லை இடையூறுகளுக்கு இடையில் கடன் வாங்கிப் பயிரிட்ட பின்பு, பல்வேறு காரணங்களால் தக்க பலன் கிடைக்காது இழப்பை நேர் கொள்ளும் உழவர்கள் பலர், தற்கொலை செய்கொண்டு இறந்து போகும் செய்திகளையெல்லாம் படித்து வருகின்றோம்.
இந்த நிலை இப்போது. முன்பும் கூட உழவுத்தொழில் எளிய தொழிலாக இல்லை என்ற உண்மையைப் பழமொழிகளும் கூட சொல்கின்றன. அவற்றுள், ' உழுதவன் கணக்குப் பார்த்தால், உழவுகோலும் மிஞ்சாது' என்ற பழமொழியும் ஒன்றாகும். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னால், உழவுத்தொழில் மிகவும் சிக்ககலானது என்ற செய்தியை ஒருபாட்டின் வழி அறிகிறோம்.
'விநோத ரச மஞ்சரி' என்ற பழைய நூலில் உள்ள இந்தப் பாடலைப் பாருங்கள் :
ஏரும் இரண்டுளதாய் இல்லத்தில் வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுளதாய் - ஊரருகே
சென்று வரஎளிதாய்ச் செய்வாரும் சொல்கேட்கில்
என்றும் உழவே இனிது.
எந்த வசதியிருந்தால் உழவுத்தொழில் இனிதாக இருக்கும் என்று விளக்குகிறது இப் பாடல். பொருள் எளிதில் புரிகிறது. இவ்வாறு வசதிகள் இல்லாதபோது, உழவுத் தொழில் துன்பந் தருவதாகும் என்று சொல்லாமல் சொல்கிறது!