PDA

View Full Version : இல்(ல) அறம்



சுகந்தப்ரீதன்
29-10-2009, 10:16 AM
மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு
சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும்
உனக்குத்தானே...!

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு,
நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா
தண்ணியடிக்கிறாரு.
கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா
கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- ------

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- ------

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- ------

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும்
வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

--------------------------------------------------------------------------------------------------------------

நன்றி : அனுப்பிய அனுபவசாலிக்கு..!!

வானதிதேவி
29-10-2009, 10:23 AM
ஆகா அருமையிலும் அருமை என சொல்ல வைக்கும் நகைச்சுவை.அதிலும் 4 வது வயிறுவலிக்க சிரிக்க வைக்கிறது.பகிர்வுக்கு நன்றி ப்ரிதன்.

samuthraselvam
29-10-2009, 10:54 AM
ஹா ஹா..... எல்லாமே சூப்பர் கற்பனை...

உங்களுக்கு ரொம்ப புடிசிருக்குமே சுகந்த் அண்ணா... ஏன்னா நீங்களும் அனுபவசாலிதானே?

ஸ்ரீதர்
29-10-2009, 11:52 AM
இந்த ஜோக்குகள் எல்லாவற்றையும் என் மனைவியிடம் காட்டி என்னை அடி வாங்க வைத்த சுகந்தபிரீதன் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
:D:D:D:D:D:D:D:D:D:lachen001::lachen001::lachen001:

சுகந்தப்ரீதன்
29-10-2009, 12:08 PM
ஆகா அருமையிலும் அருமை என சொல்ல வைக்கும் நகைச்சுவை.அதிலும் 4 வது வயிறுவலிக்க சிரிக்க வைக்கிறது.பகிர்வுக்கு நன்றி ப்ரிதன். தேவியக்கா அப்படியே அங்கிட்டு திரும்பி பாருங்கோ... ஆத்துக்காரரு அழுதுக்கிட்டு இருக்க போறாரு...!!:icon_rollout:

ஹா ஹா..... எல்லாமே சூப்பர் கற்பனை...
உங்களுக்கு ரொம்ப புடிசிருக்குமே சுகந்த் அண்ணா... ஏன்னா நீங்களும் அனுபவசாலிதானே? அதான ஒத்துக்க மாட்டீங்களே உண்மைய சொன்னா...!!:confused:

ஆனாலும் தாமரையண்ணாவோட தங்கச்சிங்கறதை நீங்க அடிக்கடி நிருபிக்கிறீங்க லீலுமா..?!:lachen001:

இந்த ஜோக்குகள் எல்லாவற்றையும் என் மனைவியிடம் காட்டி என்னை அடி வாங்க வைத்த சுகந்தபிரீதன் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
:D:D:D:D:D:D:D:D:D:lachen001::lachen001::lachen001: ஸ்ரீதர் இதைத்தான், "வரட்டு வம்பை விலைகொடுத்து வாங்கறதுன்னு" எங்க ஊர்ல சொல்லுவாங்க..?!:icon_rollout:

ஜனகன்
29-10-2009, 12:24 PM
நீங்கள் பெற்று ரசித்ததை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் பெற்ற இன்பம் நாமும் பெற்றோம். வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
29-10-2009, 12:51 PM
என்னையா... பழுக்கவே இல்லை. அதுக்குள்ள வெம்பிட்டீங்களா..????



ஹா ஹா..... எல்லாமே சூப்பர் கற்பனை...

அட்ரா அட்ரா...

சரண்யா
29-10-2009, 12:59 PM
சிரிப்பாக இருந்தது...சில தருணங்கள் நம்மை அறியாமலே பலமாக சிரிப்பதுண்டு....
பகிர்வுக்கு நன்றிகள்...

பா.ராஜேஷ்
29-10-2009, 03:09 PM
நல்லதொரு நகைச்சுவை தொகுப்பு... நன்றி சுகந்தப்ரீதன்... (ப்ரீதன் என்றால் என்ன!!??)

நேசம்
29-10-2009, 05:01 PM
அருமை.அதிலும் முன்று காரணங்கள் நிஞத்தை சொல்கிறது.பகிர்தலுக்கு நன்றி ப்ரிதன்

arun
11-12-2009, 04:29 AM
சூப்பர் நகைச்சுவை தொகுப்பு பகிர்ந்தமைக்கு நன்றி

குணமதி
11-12-2009, 06:55 AM
நல்ல நகைச்சுவை!

ஆனால் இது மட்டும் வேறுபாடாயிருக்கிறதே!

****மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.****

ஒருவேளை, எனக்குச் சரியாகப் புரியவில்லையோ?

சுகந்தப்ரீதன்
09-02-2010, 01:06 PM
நல்ல நகைச்சுவை!

ஆனால் இது மட்டும் வேறுபாடாயிருக்கிறதே!

****மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.****

ஒருவேளை, எனக்குச் சரியாகப் புரியவில்லையோ? அப்படியா குணமதியாரே... இப்ப படிச்சு பாருங்க புரியும்ன்னு நினைக்கிறேன்..!!:confused:

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: அப்ப கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணமாட்டிங்கதானே?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

சிவா.ஜி
09-02-2010, 01:33 PM
ஆஹா...நான் இதை இத்தினிநாள் பாக்கவே இல்லையே....நிஜமாவே ரொம்ப அனுபவிச்ச அனுபவசாலிதான் எழுதியிருக்கனும்.

எல்லாமே சூப்பர். அசத்தல் பகிர்வுக்கு நன்றி சுபி.

(எல்லா ஜோக்கைவிட எனக்கு ரொம்ப பிடிச்சது........லீலுமா சுபியை அனுபவசாலின்னு சொன்னதுதான்...ஹா...ஹா...ஹா...)