Ravee
24-10-2009, 01:52 PM
கொட்டுமா மழை .....:traurig001:
http://farm4.static.flickr.com/3351/3427041103_e244968db0.jpg
ஐப்பசி மாதம் என்றாலே
அடை மழை என்பார்கள்
வாரம் இரண்டு
போனதுதான் மிச்சம்
காணவில்லை ஒரு பொட்டும்
அம்மன் கோயில் குருக்கள் சொன்னார்
நாத்திகம் பேசும் நாடாய் போனதால்
நாதி இழந்து போனோம் என்றார்
அம்மா ஏன் நாங்களும் உன் பிள்ளைகள் தானே
என் தாயாய் இருந்தால் ஒரு நாளும்
தனித்தனியே பிரித்துப் பார்க்க மாட்டாள்
ஊருக்கு அம்மா ஒரு கோயில் கட்டி
உடனே குடமுழுக்கு செய்வேன்
கொட்டுமா மழை உறுதி கூறுங்கள்
கழுதைக்கும் தவளைக்கும்
கல்யாணம் செய்துவைத்தால்
கண்மாய் நிறையும் என்றார்
ஏன் நான் யானைக்கும் பூனைக்கும்
கல்யாணம் செய்துவைக்கிறேன்
கொட்டுமா மழை கூறுங்கள்
இயற்கை தந்த செல்வத்தை
இறைத்திர்கள் தெருவில்
இறைவன் எங்கிருந்து வந்தான் இடையில்
காட்டை அழித்து
தேயிலை தோட்டம் போட்டீர்கள்
கண்மாய்களை அழித்து
வீட்டுமனை போட்டீர்கள்
அமிலத்தையும் அசிங்கத்தையும்
ஆற்றில் விட்டீர்கள்
பத்து நாள் தண்ணீர் வராமல்
சாலை மறியல் செய்தோம்
பதினோராம் நாள் நிரம்பிவழிந்த
குழாயை அடைக்க நாதி இல்லை தமிழகத்தில்
ஐந்நூறு ரூபாய்க்காய் கை ஏந்திய மக்கள்
அரை லிட்டர் நீருக்கு ஓட்டு
போடப்போகிறார்கள்
காலம் இன்னும் இருக்கிறது
கண்விளித்துக்கொள்விர்
காலம் போனால் ......
சந்திராயன் மூன்று வந்து
நிலவில் நீர் இருக்கிறது என்று
படம் பிடித்து காட்டும்
பார்த்துக்கொள்ளுங்கள்..........:icon_rollout:
http://farm4.static.flickr.com/3351/3427041103_e244968db0.jpg
ஐப்பசி மாதம் என்றாலே
அடை மழை என்பார்கள்
வாரம் இரண்டு
போனதுதான் மிச்சம்
காணவில்லை ஒரு பொட்டும்
அம்மன் கோயில் குருக்கள் சொன்னார்
நாத்திகம் பேசும் நாடாய் போனதால்
நாதி இழந்து போனோம் என்றார்
அம்மா ஏன் நாங்களும் உன் பிள்ளைகள் தானே
என் தாயாய் இருந்தால் ஒரு நாளும்
தனித்தனியே பிரித்துப் பார்க்க மாட்டாள்
ஊருக்கு அம்மா ஒரு கோயில் கட்டி
உடனே குடமுழுக்கு செய்வேன்
கொட்டுமா மழை உறுதி கூறுங்கள்
கழுதைக்கும் தவளைக்கும்
கல்யாணம் செய்துவைத்தால்
கண்மாய் நிறையும் என்றார்
ஏன் நான் யானைக்கும் பூனைக்கும்
கல்யாணம் செய்துவைக்கிறேன்
கொட்டுமா மழை கூறுங்கள்
இயற்கை தந்த செல்வத்தை
இறைத்திர்கள் தெருவில்
இறைவன் எங்கிருந்து வந்தான் இடையில்
காட்டை அழித்து
தேயிலை தோட்டம் போட்டீர்கள்
கண்மாய்களை அழித்து
வீட்டுமனை போட்டீர்கள்
அமிலத்தையும் அசிங்கத்தையும்
ஆற்றில் விட்டீர்கள்
பத்து நாள் தண்ணீர் வராமல்
சாலை மறியல் செய்தோம்
பதினோராம் நாள் நிரம்பிவழிந்த
குழாயை அடைக்க நாதி இல்லை தமிழகத்தில்
ஐந்நூறு ரூபாய்க்காய் கை ஏந்திய மக்கள்
அரை லிட்டர் நீருக்கு ஓட்டு
போடப்போகிறார்கள்
காலம் இன்னும் இருக்கிறது
கண்விளித்துக்கொள்விர்
காலம் போனால் ......
சந்திராயன் மூன்று வந்து
நிலவில் நீர் இருக்கிறது என்று
படம் பிடித்து காட்டும்
பார்த்துக்கொள்ளுங்கள்..........:icon_rollout: