Ravee
20-10-2009, 10:55 PM
என் கனவிற்கு விடை சொல்லுங்கள்
http://static.flickr.com/3253/2507105000_5e631614a4.jpg
பலமுறை நான் காணும் கனவு இது
இது ஏன் வருகிறது என்று இன்றுவரை தெரியாது
ஆட்கள் யாரும் இல்லா
அனாதையாய் போன சாலை ஒன்று
காலர நடந்து வருவேன்
எங்கோ கேட்கும் லியோனியின் பேச்சு
கோவில் திருவிழாவோ தெரியாது
காதுக்கு இதமாய் தமிழ் ஏற்ற இறக்கங்களுடன்
கண்ணுக்கு எதிரே ஒரு மாளிகை
காரணம் தெரியாது அதனுள் போவேன்
கம்பிகளால் அடைத்த நடைபாதை
மேலே ஏறி இறங்கி சென்று கொண்டே இருக்கும்
பல வளைவுகள் கடந்து
ஒரு திருப்பத்துடன் கூடிய மாடிப்படி
அகலமான படிகள் கீழே பெரியதாய் ஒரு முற்றம்
முற்றத்தின் வடகோடியில் ஒரு வளைவு
அதன் பின்னே என்ன இருக்கும் ஒரு ஆவல்
படிகளில் மெதுவாக இறங்க
மனது ஏனோ படபடக்கும்
உள்ளே எங்கேயோ ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும்
படிகளின் கடைசி திருப்பத்தில் நின்று திரும்பி பார்ப்பேன்
அங்கே........................................................................
கொழுத்த சிங்கங்கள் மூன்று என்னையே உற்று நோக்கும்
என் கால்கள் கட்டிப்போட்டது போல கிடக்க
உடல் எல்லாம் வேர்க்கும்
இதயம் இருமடங்கு வேகம் கொண்டு துடிக்க
அறிவு சொல்லும் பின்னே போ , பின்னே போ
என் கால் செருப்பு கல்லாய் போனது போல
கைகளால் அவைகளை கழட்டி எறிகிறேன்
கண்ணுக்கு நேரே ஒரு சிங்கம்
நான்கு படிகளாய் தாண்டி ஓடுவேன்
ஒரே திருப்பத்தில் மாடிப்படிகள் முடிந்து போக
என் பின்னே இருமடங்கு வேகத்தில் ஒரு சிங்கம்
கம்பிகள் கொண்ட நடை பாதை கடந்து
பாழாய் போன சில அறைகள்
மின்கம்பிகள் அறுந்து கிடக்க
எந்த மின் இணைப்புகளும் இல்லாமல்
கால் வரை கவ்வ வந்த சிங்கத்தின்
வாயில் இருந்து ஒரே தாவலில்
அந்த அறைக்குள் பாய்வேன்
கனவு கலைந்துவிடும்
ஆனால் உள்ளத்தின் பதட்டம் அடங்க
ஒரு பத்து நிமிடங்கள்
அறிவு இப்போது நிதானமாக தேடும் இதன் அர்த்தத்தை
எத்தனையோ தடவை கண்ட கனவுக்கு
இன்று வரை விடை தெரியவில்லை
யாரவது சொல்லுங்கள் ...................
அந்த முற்றத்தில் சிங்கத்துக்கு என்ன வேலை ? ? ?
http://static.flickr.com/3253/2507105000_5e631614a4.jpg
பலமுறை நான் காணும் கனவு இது
இது ஏன் வருகிறது என்று இன்றுவரை தெரியாது
ஆட்கள் யாரும் இல்லா
அனாதையாய் போன சாலை ஒன்று
காலர நடந்து வருவேன்
எங்கோ கேட்கும் லியோனியின் பேச்சு
கோவில் திருவிழாவோ தெரியாது
காதுக்கு இதமாய் தமிழ் ஏற்ற இறக்கங்களுடன்
கண்ணுக்கு எதிரே ஒரு மாளிகை
காரணம் தெரியாது அதனுள் போவேன்
கம்பிகளால் அடைத்த நடைபாதை
மேலே ஏறி இறங்கி சென்று கொண்டே இருக்கும்
பல வளைவுகள் கடந்து
ஒரு திருப்பத்துடன் கூடிய மாடிப்படி
அகலமான படிகள் கீழே பெரியதாய் ஒரு முற்றம்
முற்றத்தின் வடகோடியில் ஒரு வளைவு
அதன் பின்னே என்ன இருக்கும் ஒரு ஆவல்
படிகளில் மெதுவாக இறங்க
மனது ஏனோ படபடக்கும்
உள்ளே எங்கேயோ ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும்
படிகளின் கடைசி திருப்பத்தில் நின்று திரும்பி பார்ப்பேன்
அங்கே........................................................................
கொழுத்த சிங்கங்கள் மூன்று என்னையே உற்று நோக்கும்
என் கால்கள் கட்டிப்போட்டது போல கிடக்க
உடல் எல்லாம் வேர்க்கும்
இதயம் இருமடங்கு வேகம் கொண்டு துடிக்க
அறிவு சொல்லும் பின்னே போ , பின்னே போ
என் கால் செருப்பு கல்லாய் போனது போல
கைகளால் அவைகளை கழட்டி எறிகிறேன்
கண்ணுக்கு நேரே ஒரு சிங்கம்
நான்கு படிகளாய் தாண்டி ஓடுவேன்
ஒரே திருப்பத்தில் மாடிப்படிகள் முடிந்து போக
என் பின்னே இருமடங்கு வேகத்தில் ஒரு சிங்கம்
கம்பிகள் கொண்ட நடை பாதை கடந்து
பாழாய் போன சில அறைகள்
மின்கம்பிகள் அறுந்து கிடக்க
எந்த மின் இணைப்புகளும் இல்லாமல்
கால் வரை கவ்வ வந்த சிங்கத்தின்
வாயில் இருந்து ஒரே தாவலில்
அந்த அறைக்குள் பாய்வேன்
கனவு கலைந்துவிடும்
ஆனால் உள்ளத்தின் பதட்டம் அடங்க
ஒரு பத்து நிமிடங்கள்
அறிவு இப்போது நிதானமாக தேடும் இதன் அர்த்தத்தை
எத்தனையோ தடவை கண்ட கனவுக்கு
இன்று வரை விடை தெரியவில்லை
யாரவது சொல்லுங்கள் ...................
அந்த முற்றத்தில் சிங்கத்துக்கு என்ன வேலை ? ? ?