M.Rishan Shareef
19-10-2009, 04:22 AM
சிதைந்த நாட்களோடு ஓய்தல் (http://mrishanshareef.blogspot.com/2009/09/blog-post_13.html)
எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்
கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று
நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது
நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது
வேறெதுவும் வேண்டேன்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# நடுகை - கவிதைகளுக்கான இதழ் - ஆகஸ்ட் 2009
# திண்ணை இணைய இதழ்
எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்
கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று
நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது
நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது
வேறெதுவும் வேண்டேன்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# நடுகை - கவிதைகளுக்கான இதழ் - ஆகஸ்ட் 2009
# திண்ணை இணைய இதழ்