PDA

View Full Version : மூன்று வரியில் மூன்று!



குணமதி
18-10-2009, 12:49 PM
கரைதவழ்ந்து மீண்டது அலை

சீரான கழுவல்

ஓசையிட்டாலும் உருப்படியான வேலை.


***


செக்கச் செவேலெனச் சிவப்பொளி

உருக்கிய எஃகுக் குழம்பில் ஓவியம்

வைகறைக் கதிரவன்.


***


'கைதூக்கிவிட ஆளில்லை'எனப் புலம்பும் குரலே!

கிடைத்ததைப் பற்றிப் படர்ந்து காய்க்கிறது பார் -

அவரை.

ஜனகன்
18-10-2009, 08:02 PM
கரைதவழ்ந்து மீண்டது அலை

சீரான கழுவல்

ஓசையிட்டாலும் உருப்படியான வேலை.


வாழ்க்கையில் இப்படியும் சிலர், நல்ல வரிகள்

aren
19-10-2009, 04:38 PM
நல்ல கவிதைவரிகள். யோசிக்கவைக்கிறது. நிச்சயம் வாழ்க்கையில் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பாடம்.

இன்னும் கொடுங்கள்.

samuthraselvam
20-10-2009, 08:29 AM
அருமையான கவிதை குணா.... முதல் கவிதை சிந்திக்கத் தூண்டுகிறது...

குணமதி
20-10-2009, 11:19 AM
மூவர்க்கும் நன்றி.