PDA

View Full Version : தீபஒளியில் இறைவன்



சரண்யா
16-10-2009, 01:40 AM
http://t0.gstatic.com/images?q=tbn:ntvs7t6MqFwF5M:http://3.bp.blogspot.com/_SJ56V49l1y4/SQLmU0Sf5EI/AAAAAAAAAmY/gXbqSgyzxBU/s320/diwali4.jpg

இல்லத்தின் இருளை அகற்ற
ஒளியாய் நின்றாய் நீ

உலகத்தின் இருளை அகற்ற
சூரியனாய் திகழ்கிறாய் நீ

மனதின் இருளை அகற்ற
அறிவொளியாய் நுழைந்தாய் நீ

இறைவா.....
தீபஒளியாய் பிரகாசிக்க
பயமுறுத்தும் பட்டாசுகளா
சில மணித்துளிகள் தானே
துடிப்புடன் விளங்குவாயே
பின்பு மறைந்து விடுவாயே
மறைந்து விளையாடுவதே
உன்னுடைய லீலையாகுமே

பட்டாசுகள் பளிச்சிடும்
ஆனால் சத்தம் பயமுறுத்துமே
காதுகள் அடைக்குமே
கம்பி மத்தாப்பு தெரிக்குமே
சாட்டை கீழ் நோக்கி இருக்குமே
சங்கு சக்கரம் சுழன்று கொண்டே
புஸ்வோணம் வானம் நோக்கியே
கலர் தீப்பெட்டி வண்ணமயமாய்
பாம்பு மாத்திரை நெளிந்து வளைந்தே
இப்படியே சென்றால்....
சரி இனிப்பாய் வந்தால்
சர்க்கரை நோய் உள்ளவர்
சீண்ட மனமில்லையே
ஆகையால் இறைவா
எல்லாரும் மகிழ்வாய்
ஒளி மயமாய் நீ
தீபஒளி திருநாளிலும்
ஜோதினுள் புகுந்து
வழியாய் வந்து
வாழ்வில் சிறக்க
வைப்பாய் என்றும்......

அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
கோ.சரண்யா

ஆன்டனி ஜானி
04-12-2010, 03:00 PM
மறைந்து இருக்கும்
இறைவனை அப்படியே
கவிதைகளின் வரியில்
வெளிச்சத்தில் பிறவேசிக்க வத்து விட்டீர்களே !!!!

ரெம்ப அருமையான கவிதை
வாழ்த்துக்கள் .........

பாலகன்
04-12-2010, 03:39 PM
பட்டாசுகள் வெடிக்குமே
காற்று மண்டலம் மாசு படுமே.....

கவிதை நன்று