கீதம்
13-10-2009, 09:24 AM
வசந்தகால வருகைப்பதிவேட்டில்
பெயர் பதித்துச் செல்கின்றன,
பாடும் பறவைகளும்,
பூத்துக் குலுங்கும் மரங்களும்!
பறவைகளில் இத்தனை ரகமா?
அவற்றின் பாடல்களில்
இத்தனை ராகமா?
ஏங்கவைக்கின்றன,
இன்னிசை கீதங்கள்!
எங்கே போயிருந்தன,
இவை யாவும்?
எப்படி வாய்மூடிக்கிடந்தன,
இத்தனைக் காலம்?
காலத்தின் கையில் சிக்கிய
வானவில் ஒன்று
சின்னாபின்னமாகிச்
சிதறிக்கிடக்கிறது
காணுமிடமெல்லாம்!
அவசரமாய் ஆடைமாற்றும்
அழகுப்பெண்ணைப்போல
மரங்கள் யாவும்
பச்சைச் சீருடை களைந்து
பூக்களால் நெய்த
புத்தாடை போர்த்து நிற்க,
தானே நிற்கத் தடுமாறும்
புற்களின் தலையிலும்
பூவாலே கிரீடங்கள்!
மாயவித்தைக்காரன் ஒருவன்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
கைக்குழலிலிருந்து
பூங்கொத்து தருவிப்பது போல்
ஒரு தருவிலிருந்து
ஓராயிரம் மலர்ச்செண்டுகள்!
காலம் பார்த்து காதல் செய்ய,
காத்திருந்த புட்களும், பூக்களும்
வசந்தத்தின் வாயிலில் நுழைந்து
வண்ணவித்தை புரிவதை
வாய் கொண்டு நான் வர்ணிக்க இயலுமோ?
கைக்கொண்டு நான் கவி புனைய இயலுமோ?
வண்ண மலர்கள் யாவும்
கண்ணுக்கு விருந்தளிக்க,
அற்புதப் பறவைகளின் கானம்
காதுக்கு இதமளிக்க,
சுவாசிக்கும் காற்று மட்டும்
சுமையாகிப் போனதே,
மகரந்தத் துகள்களும்
தென்றலோடு உறவாடி
மயங்கித் திரிவதாலே!
பெயர் பதித்துச் செல்கின்றன,
பாடும் பறவைகளும்,
பூத்துக் குலுங்கும் மரங்களும்!
பறவைகளில் இத்தனை ரகமா?
அவற்றின் பாடல்களில்
இத்தனை ராகமா?
ஏங்கவைக்கின்றன,
இன்னிசை கீதங்கள்!
எங்கே போயிருந்தன,
இவை யாவும்?
எப்படி வாய்மூடிக்கிடந்தன,
இத்தனைக் காலம்?
காலத்தின் கையில் சிக்கிய
வானவில் ஒன்று
சின்னாபின்னமாகிச்
சிதறிக்கிடக்கிறது
காணுமிடமெல்லாம்!
அவசரமாய் ஆடைமாற்றும்
அழகுப்பெண்ணைப்போல
மரங்கள் யாவும்
பச்சைச் சீருடை களைந்து
பூக்களால் நெய்த
புத்தாடை போர்த்து நிற்க,
தானே நிற்கத் தடுமாறும்
புற்களின் தலையிலும்
பூவாலே கிரீடங்கள்!
மாயவித்தைக்காரன் ஒருவன்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
கைக்குழலிலிருந்து
பூங்கொத்து தருவிப்பது போல்
ஒரு தருவிலிருந்து
ஓராயிரம் மலர்ச்செண்டுகள்!
காலம் பார்த்து காதல் செய்ய,
காத்திருந்த புட்களும், பூக்களும்
வசந்தத்தின் வாயிலில் நுழைந்து
வண்ணவித்தை புரிவதை
வாய் கொண்டு நான் வர்ணிக்க இயலுமோ?
கைக்கொண்டு நான் கவி புனைய இயலுமோ?
வண்ண மலர்கள் யாவும்
கண்ணுக்கு விருந்தளிக்க,
அற்புதப் பறவைகளின் கானம்
காதுக்கு இதமளிக்க,
சுவாசிக்கும் காற்று மட்டும்
சுமையாகிப் போனதே,
மகரந்தத் துகள்களும்
தென்றலோடு உறவாடி
மயங்கித் திரிவதாலே!