சிவா.ஜி
10-10-2009, 08:20 PM
“வீட்டுக்கு வாங்க உங்களுக்கு வெச்சிருக்கேன்....”
பொய்க் கோபத்துடன் சொன்ன மைதிலியை குறும்பாகப் பார்த்த விக்னேஷ்,
“சஸ்பென்ஸ் எல்லாம் வெக்காதடா செல்லம்....இப்பவே சொல்லேன்.....என்ன வெச்சிருக்கே?”
“ம்....சுண்டக்கா வத்தல். ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி.......எப்படீப்பா இப்படி மூஞ்சிய வெச்சுக்கிறீங்க?
“நானா வெச்சுக்கறேன் அதெல்லாம் பொறந்ததுலருந்து இருக்கறது....”
சொல்லிவிட்டு கண்ணடித்தவனைப் பார்த்து செல்லமாய் சூடாகி.....
“ஆமா....அப்ப நாங்கல்லாம் சரவணா ஸ்டோர்ஸ்ல வாங்கி மாட்டிக்கறமாக்கும். அதெப்படி சிக்குன்னு ஒரு பொண்ணு நடந்து போனா தலை தானா திரும்புது?”
“அதான் நீயே சொல்லிட்டியே சிக்குன்னு....ஹி...ஹி....அப்ப திரும்பாம இருக்குமா?”
“அப்ப ஸ்மார்ட்டா ஒரு பையன் போனா நான் திரும்பிப் பாக்கட்டுமா?”
“நீதான் பாக்க மாட்டியே....ஏன்னா நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவ”
“அதான பாத்தேன். இப்படி சொல்லியே எங்களுக்கு தீபாராதனைக் காட்டி சாமியாக்கிடுவீங்க. நீங்க மட்டும் ஃப்ரீயா நடப்பீங்க”
“அடடா....ச்சும்மா கலாட்டா பண்னேண்டா....சரி சரி...இனிமே உன்கூட வரும்போது எந்தப் பொண்ணையும் திரும்பிக்கூட பாக்க மாட்டேன் போதுமா?”
“அப்ப தனியா போகும்போது மொத்தமா ஜொள்ளு வுட்டுட்டு வருவீங்களா?”
“இதெண்டா வம்பாப்போச்சு. சரிம்மா....தாயே....எப்பவும் பாக்க மாட்டேன் போதுமா?”
“அதெல்லாம் தேவையில்ல. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். நீங்க நீங்களாவே இருங்க. போலாமா?”
திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. மைதிலியைப் பெண் பார்த்துவிட்டுப் போன மற்ற ஆறு பேரைப் போலில்லாது, பார்த்தவுடன் சம்மதம் தெரிவித்தவன் விக்னேஷ். இந்த ஆறு மாதத்தில் மைதிலியை கையில் வைத்து தாங்கினான். ஆனால் விக்னேஷின் பெற்றோர்தான் பேராசைப் பிடித்தவர்களாய் இருந்தார்கள். ஒரே பிள்ளையென்றும், கைநிறைய சம்பளம் வாங்குகிறானென்றும் காரணம் சொல்லி நல்ல ஒரு தொகையை மைதிலியின் அப்பாவிடமிருந்து வரதட்சணையாக வாங்கிக் கொண்டார்கள். அநாவசியமாய் அவர்களிடம் பேசி, நாளை மைதிலிக்கும் அவர்களுக்கும் ஒரு கசப்பான உறவை உருவாக்கிவிட வேண்டாமே என்று விக்னேஷ் மௌனமாய் இருந்துவிட்டான்.
வீட்டுக்குத் திரும்பியவர்களை வாசலில் ஒரு ஜோடி புது செருப்பு வரவேற்றது. யாராயிருக்குமென்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். கூடத்தில் போட்டிருந்த சோபாவின்
மீது ஒரு காலை சாவகாசமாக மடக்கி வைத்துக் கொண்டு இடது கையில் காப்பிக் கோப்பையுடன் நிமிர்ந்து பார்த்தவரை மைதிலி அடையாளம் கண்டு கொண்டாள்.
“அடடே...சம்பத் அங்கிள் நீங்களா? எப்படி இங்க......?” என்று இழுத்தவளை பார்த்ததும்,
“அட மைதிலியா? ஆச்சர்யமா இருக்கு. நான் மிஸ்டர் ராஜகோபாலை பாக்க வந்தேன். ம்யூச்சுவல் ஃபண்ட் விஷயமா பேசிட்டு போக. அதுசரி உனக்கு கல்யாணமாயிடிச்சா? ரொம்ப சந்தோஷம்மா...நல்லாருக்கியா?”
ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களைப் பார்த்து பொதுவாக,
“எங்க வீட்டுக்குப் பக்கத்துல ரொம்ப வருஷமா குடியிருந்தாங்க. என்னை சின்ன வயசுலருந்தே தெரியும். போன வருஷம்தான் ட்ரான்ஸ்ஃபர்ல மாத்திட்டு போயிட்டாங்க.”
“ஓ அப்படியா. இப்படித்தான் சில சமயம் எதிர்பார்க்காம சில பேரை சந்திக்கற மாதிரி ஆயிடுது. நீங்க காப்பி சாப்புடுங்க.”
என்று சொன்ன மாமியாரைப் பார்த்து,
“அத்தை போய் புடவை மாத்திட்டு வந்துடறேன். ஏதாவது டிஃபன் செய்ட்டா?”
என்றவளை கொஞ்சம் அலட்சியத்துடன் பார்த்துக்கொண்டே....
“வேணாம்மா...நீங்க டயர்டா வந்திருப்பீங்க...போய் ரெஸ்ட் எடுங்க. நான் பாத்துக்கறேன்”
என்று பொடி வைத்து பேசியவளை சற்றே சங்கடத்துடன் பார்த்துவிட்டு,
”சரிங்க அங்கிள் ஆண்ட்டியை, மீராவை எல்லாம் கேட்டதா சொல்லுங்க. இந்த ஊர்லதான் இருக்கீங்களா? அப்ப எல்லாரையும் ஒரு தடவை கூட்டிட்டு வாங்க” என்றதும்,
“அதெல்லாம் கூட்டிக்கிட்டு வருவாரு. நீ போம்மா...போய் ரெஸ்ட் எடுத்துக்க..”
மறுபடியும் நக்கலாய் சொன்ன மாமியாரை பார்க்காமல் விக்னேஷுடன் தங்கள் அறைக்குப் போனாள்.
அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த சம்பத், விக்னேஷின் அப்பா அம்மாவிடம்,
“ரொம்ப நல்ல பொண்ணு. காலேஜுக்குப் போனாலும் வீட்டு வேலையெல்லாம் இழுத்து போட்டுக்கிட்டு செய்யும். கல்யாணம்தான் தடை பட்டுக்கிட்டே இருந்தது. இப்பதான் மனசுக்கு
நிம்மதியா இருக்கு.”
“ஆமாமா...வேலையெல்லாம் நல்லாத்தான் செய்யுறா. ஆனா எங்க கிட்டதான் கலகலப்பா பழக மாட்டேங்குறா'”
“நல்லா கலகலப்பா பேசிட்டு இருந்த பொண்ணுதாம்மா...ஆனா அந்த சம்பவத்துக்கு அப்புறமாத்தான் ரொம்ப அமைதியாகிட்டா”
அவர் சம்பவம் என்றதும் திடுக்கிட்டு, ஒருவேளை சினிமாவில் காட்டுவதைப் போல ராத்திரியில் தனியாய் வரும்போது யாராவது அவளை நாசமாக்கிவிட்டார்களா? என்று யோசித்து,
“என்னங்க இது...ஏதோ சம்பவம் அது இதுன்னு சொல்றீங்க விபரீதமா எதுவும் நடந்துடலையே”
“அய்யய்யோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்கம்மா....ரெண்டு வருஷத்துக்கு முன்னால திடீர்ன்னு ஒருநாள் ஆம்பிளைக் குரல்ல பேசி தலையை விரிச்சிப் போட்டுக்கிட்டு ஆட ஆரம்பிச்சுட்டா. அப்புறம் கோடங்கியைக் கூட்டிக்கிட்டு வந்து பேயோட்டுனாங்க. அப்புறமா சரியாயிட்டா. ஆனா அதுக்கப்புறம் முன்ன மாதிரி யார்கிட்டயும் கலகலப்பா பேசறதில்ல”
“என்னது பேய் புடிச்சிருந்திச்சா? அடக்கடவுளே...பேய் புடிச்சவளையா எங்க வீட்டுக்கு மருமகளா கூட்டிக்கிட்டு வந்திருக்கோம்.....மோசம் போயிட்டோமே....ஆண்டவா.....என்னல்லாம் பண்னப்போறாளோ...?”
“அடடா....இப்பதான் சரியாயிடிச்சேம்மா. ஏன் உங்களுக்கு இது பத்தி ஒண்ணும் தெரியாதா?
“அதான் முழு பூசனிக்காயை சோத்துல மறைச்சுட்டாங்களே....சரி சரி...நாங்க பாத்துக்கறோம். நீங்க போய்ட்டு இன்னொரு நாளைக்கு வாங்க”
என்று முகத்திலடித்ததைப் போல ராஜகோபால் சொன்னதும், எழுந்து 'சரி போய்ட்டு வரேங்க' என்று சொல்லிவிட்டு, வாசலைத் தாண்டும்போது ‘அடப் பாவமே...அந்தப் பொண்ணை என்ன பாடு படுத்தப் போறாங்களோ தெரியலையே....நாம வேற தேவையில்லாம சொல்லித் தொலைச்சுட்டோமே' என வருத்தப்பட்டுக்கொண்டே போனார்.
அவர் போன மறு வினாடியே...
‘விக்னேஷ்” என்று அலறினாள் சிவகாமி.
மாமியார் பேசியதில் லேசாய் மனவருத்தலிருந்த மைதிலி, ஆறுதலாய் விக்னேஷ் தோளில் சாய்ந்து கொண்டிருந்தவள், மாமியாரின் அலறலில் தூக்கிவாரிப் போட இரண்டு பேரும் கூடத்துக்கு ஓடி வந்தார்கள்.
‘இவங்க அப்பனுக்குப் போன் போடுடா. உடனே அந்த ஆளை இங்க வரச் சொல்லு. இனிமே இந்த பிசாசு இங்க இருக்கக்கூடாது. சீக்கிரமா போன் போடு.”
“ஏம்மா இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி கத்துறீங்க....இவ என்ன தப்பு செஞ்சா?”
“இவ ஒண்ணும் தப்பு செய்யலடா....நாமதான் தப்பு பண்ணிட்டோம். இந்த பேய்புடிச்சவளை நம்ம வீட்டுக்கு விளக்கேத்த கூட்டிக்கிட்டு வந்தமில்லையா...அதுதான் நாம செஞ்ச மகா பெரிய தப்பு. இரு நானே கூப்புடறேன் அந்த ஆளை”
“இருங்கப்பா. என்ன பேய் அது இதுன்னு...என்ன ஒளர்றீங்க”
“நாங்க ஒண்ணும் ஒளறல.....இப்ப வந்துட்டு போன மனுஷன் எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சுட்டு போயிட்டார்” என்று சம்பத் சொன்ன அனைத்தையும், அதோடு இவர்களாகவே இணைத்துக்கொண்ட மசாலாவையும் சேர்த்து சொன்னார்கள்.
விக்னேஷ் எவ்வளவு சொல்லியும், மைதிலி கதறி அழுதும் கேட்காமல், மைதிலியின் அப்பாவை உடனடியாக வரச் சொல்லிவிட்டார்கள்.
அறைக்குள் வந்த மைதிலி, தேம்பலுடன் விக்னேஷின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு அழுதாள்.
”ஹே....மைதூ....என்னடா இது. இங்க பாரு....இங்க பாருன்னேன்....எதுக்கு அழற இப்ப. உங்கப்பாதானே வரட்டும் நானே பேசிக்கறேன். இப்ப அழறத நிறுத்து.”
“எனக்கு அப்ப ஏதோ நடந்துச்சின்னு தெரியும். ஆனா அது பேய்புடிச்சதா இல்ல மனோவியாதியான்னு எனக்கு சரியா தெரியலைங்க. ஆனா எங்கப்பாவும் அம்மாவும்தான், யாரோ பூசாரியைக் கூட்டிக்கிட்டு வந்து பூஜையெல்லாம் செஞ்சாங்க. அதுக்கப்புறம் நார்மலாயிட்டேன். அதுவே ஒருவிதமான மனோதத்துவ ட்ரீட்மெண்ட் மாதிரி இருந்திருக்கலாம். ஆனா இப்ப நான் நல்லாத்தானே இருக்கேன். ஏங்க உங்கப்பா அம்மா இவ்ளோ சத்தம் போட்டு ரகளை பண்றாங்க?”
“பாரு! எவ்ளோ தெளிவா பேசற. ஆனா ஒரு சாதாரண பொண்ணுமாதிரி ஏன் அழற. தைரியமா இரு. எனக்கும் தெரியும். அதெல்லாம் பேயும் இல்லை பூதமும் இல்லன்னு. ஆனா உங்க அப்பா அம்மா, எங்க அப்பா அம்மா இவங்கல்லாம் அந்தக் காலத்து மனுஷங்க. புரிஞ்சிக்க மாட்டாங்க. நாமதான் அவங்களுக்கு சொல்லனும். இப்ப என்ன.....உனக்கு ஆறுதலா எப்பவும் நான் உன் கூட இருக்கேன். எதுக்கு பயப்படற?”
அவனுடைய அந்த ஆறுதலான பேச்சு நெகிழ வைக்க, அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.
“பாத்தியா....இப்ப என்னத்தான் பேய் புடிச்சிருக்கு......காதல்பிசாசே...காதல் பிசாசே......”
“ச்சீ போங்க எப்ப பாத்தாலும் உங்களுக்கு விளையாட்டுதான்....”
“சீரியஸா சொல்லட்டுமா? உனக்குப் பேய்தான் பிடிச்சிருக்கு”
திடுக்கிட்டுப் பார்த்தவளின் முகத்தை நிமிர்த்தி, நமுட்டுச் சிரிப்புடன்,
‘பயந்துட்டியா....பைத்தியம். நான்தான் உன்னைப் பிடிச்சிருக்கிற பேய். எந்த கோடங்கி வந்தாலும் உன் கிட்டருந்து என்னை விரட்ட முடியாது. கடைசி வரைக்கும் நீ பேய் புடிச்சவதான்...ஹா...ஹா...”
சொல்லமுடியாத சந்தோஷத்தில் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்துக்கொண்டு கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.
அடுத்தநாள் மைதிலியின் அப்பாவும் அம்மாவும் வந்ததும் கூடமே அதிரும்படி கூப்பாடு போட்டார்கள் ராஜகோபாலும், சிவகாமியும். ஒன்றும் பேச முடியாமல் ஒடுங்கிப் போயிருந்த தன் பெற்றோரைப் பார்த்து மௌனமாய்க் கண்ணீர் வடித்தாள் மைதிலி. இவர்கள் பேச, அவர்கள் கெஞ்ச...கடைசியாய் ராஜகோபால் சொன்னதைக் கேட்டு ஆத்திரத்தில் பொங்கினான் விக்னேஷ்.
“சரி. ஆனது அயிடிச்சி. ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்ச பாவம் எங்களுக்கு எதுக்கு. இங்கயே இருந்துட்டு போகட்டும். விலைபோகாத சரக்குக்கு நீங்க குடுத்த வரதட்சணை கம்மிதான். இன்னும் ரெண்டு லட்சம் குடுத்துடுங்க. எங்களுக்காகவா கேக்கறோம். நாளைக்கே இவளுக்கு மறுபடியும் அதே பிரச்சனை வந்தா செலவு பண்ணனுமில்ல..”
என்று ராஜகோபால் சொன்னதும், அதுவரை காப்பாற்றி வைத்திருந்த நிதானத்தை, இழந்து, ராஜகோபாலின் முன்னால் போய் நின்று கொண்டு, அவரது முகத்தைப் பார்த்து....
”ச்சே....உங்களை என் அப்பா அம்மான்னு சொல்லவே வெக்கமா இருக்கு. என்ன சொன்னீங்க இவளுக்கா பேய்புடிச்சிருக்கு....உங்களுக்குத்தான் பேய் புடிச்சிருக்கு. பணப்பேய், பேராசைப் பேய். மொதல்ல உங்ககிட்டருந்து இந்தப் பேய்ங்கள தொரத்தனும். அதுசரி....குறையிருக்குன்னு சொல்லி அதுக்கு நிவர்த்தியா கூடக் கொஞ்சம் காசு குடுக்கச் சொல்லி சொல்றீங்களே..... பணம் குடுத்து என்னை விலைக்கு வாங்கினவங்க இவங்க. நாளைக்கே எனக்கு ஏதாவது ஒரு விபத்துல கையோ காலோ போயிடிச்சின்னா.....வாங்குன பொருள் கேரண்டி பீரியடுக்குள்ள சேதமாகிடிச்சு....அதனால கொடுத்தக் காசுலருந்து பாதியை திருப்பிக் குடுங்க இல்லண்னா வேற மாத்திக் குடுங்கன்னு இவங்க கேக்கலாமில்லையா?
உங்களைப் பொறுத்தவரைக்கும் கல்யாணம்ங்கறது வியாபாரம்தானே. அப்ப அப்படி அவங்க கேட்டா அதுல தப்பிருக்கற மாதிரி எனக்குத் தோணல. சேதமடைஞ்ச பொருளுக்கு மார்க்கெட்ல மதிப்பில்ல. அதே மாதிரிதான் சேதமடைஞ்ச மனசுக்கு மனுஷங்ககிட்ட மதிப்பில்ல. முடிஞ்சா உங்க சேதமாகியிருக்கிற மனசை சரி பண்ணிக்க முயற்சி பண்ணுங்க.
சரி. உங்களைப் பொறுத்தவரைக்கும் இவ பேய். இல்லையா? எப்படியோ பேய்க்கு வாழ்க்கைப் பட்டுட்டேன். புளியமரம் ஏறித்தானே ஆகனும். எங்களுக்குன்னு ஒரு மரம் இல்லாமயா போயிடும். நாங்க எங்க மரத்துக்குப் போறோம், உங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காது. மைதிலி...பெட்டி படுக்கையெல்லாம் ரெடி பண்ணு. நாம நம்ம புளியமரத்துக்குப் போலாம்”
பொய்க் கோபத்துடன் சொன்ன மைதிலியை குறும்பாகப் பார்த்த விக்னேஷ்,
“சஸ்பென்ஸ் எல்லாம் வெக்காதடா செல்லம்....இப்பவே சொல்லேன்.....என்ன வெச்சிருக்கே?”
“ம்....சுண்டக்கா வத்தல். ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி.......எப்படீப்பா இப்படி மூஞ்சிய வெச்சுக்கிறீங்க?
“நானா வெச்சுக்கறேன் அதெல்லாம் பொறந்ததுலருந்து இருக்கறது....”
சொல்லிவிட்டு கண்ணடித்தவனைப் பார்த்து செல்லமாய் சூடாகி.....
“ஆமா....அப்ப நாங்கல்லாம் சரவணா ஸ்டோர்ஸ்ல வாங்கி மாட்டிக்கறமாக்கும். அதெப்படி சிக்குன்னு ஒரு பொண்ணு நடந்து போனா தலை தானா திரும்புது?”
“அதான் நீயே சொல்லிட்டியே சிக்குன்னு....ஹி...ஹி....அப்ப திரும்பாம இருக்குமா?”
“அப்ப ஸ்மார்ட்டா ஒரு பையன் போனா நான் திரும்பிப் பாக்கட்டுமா?”
“நீதான் பாக்க மாட்டியே....ஏன்னா நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவ”
“அதான பாத்தேன். இப்படி சொல்லியே எங்களுக்கு தீபாராதனைக் காட்டி சாமியாக்கிடுவீங்க. நீங்க மட்டும் ஃப்ரீயா நடப்பீங்க”
“அடடா....ச்சும்மா கலாட்டா பண்னேண்டா....சரி சரி...இனிமே உன்கூட வரும்போது எந்தப் பொண்ணையும் திரும்பிக்கூட பாக்க மாட்டேன் போதுமா?”
“அப்ப தனியா போகும்போது மொத்தமா ஜொள்ளு வுட்டுட்டு வருவீங்களா?”
“இதெண்டா வம்பாப்போச்சு. சரிம்மா....தாயே....எப்பவும் பாக்க மாட்டேன் போதுமா?”
“அதெல்லாம் தேவையில்ல. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். நீங்க நீங்களாவே இருங்க. போலாமா?”
திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. மைதிலியைப் பெண் பார்த்துவிட்டுப் போன மற்ற ஆறு பேரைப் போலில்லாது, பார்த்தவுடன் சம்மதம் தெரிவித்தவன் விக்னேஷ். இந்த ஆறு மாதத்தில் மைதிலியை கையில் வைத்து தாங்கினான். ஆனால் விக்னேஷின் பெற்றோர்தான் பேராசைப் பிடித்தவர்களாய் இருந்தார்கள். ஒரே பிள்ளையென்றும், கைநிறைய சம்பளம் வாங்குகிறானென்றும் காரணம் சொல்லி நல்ல ஒரு தொகையை மைதிலியின் அப்பாவிடமிருந்து வரதட்சணையாக வாங்கிக் கொண்டார்கள். அநாவசியமாய் அவர்களிடம் பேசி, நாளை மைதிலிக்கும் அவர்களுக்கும் ஒரு கசப்பான உறவை உருவாக்கிவிட வேண்டாமே என்று விக்னேஷ் மௌனமாய் இருந்துவிட்டான்.
வீட்டுக்குத் திரும்பியவர்களை வாசலில் ஒரு ஜோடி புது செருப்பு வரவேற்றது. யாராயிருக்குமென்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். கூடத்தில் போட்டிருந்த சோபாவின்
மீது ஒரு காலை சாவகாசமாக மடக்கி வைத்துக் கொண்டு இடது கையில் காப்பிக் கோப்பையுடன் நிமிர்ந்து பார்த்தவரை மைதிலி அடையாளம் கண்டு கொண்டாள்.
“அடடே...சம்பத் அங்கிள் நீங்களா? எப்படி இங்க......?” என்று இழுத்தவளை பார்த்ததும்,
“அட மைதிலியா? ஆச்சர்யமா இருக்கு. நான் மிஸ்டர் ராஜகோபாலை பாக்க வந்தேன். ம்யூச்சுவல் ஃபண்ட் விஷயமா பேசிட்டு போக. அதுசரி உனக்கு கல்யாணமாயிடிச்சா? ரொம்ப சந்தோஷம்மா...நல்லாருக்கியா?”
ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களைப் பார்த்து பொதுவாக,
“எங்க வீட்டுக்குப் பக்கத்துல ரொம்ப வருஷமா குடியிருந்தாங்க. என்னை சின்ன வயசுலருந்தே தெரியும். போன வருஷம்தான் ட்ரான்ஸ்ஃபர்ல மாத்திட்டு போயிட்டாங்க.”
“ஓ அப்படியா. இப்படித்தான் சில சமயம் எதிர்பார்க்காம சில பேரை சந்திக்கற மாதிரி ஆயிடுது. நீங்க காப்பி சாப்புடுங்க.”
என்று சொன்ன மாமியாரைப் பார்த்து,
“அத்தை போய் புடவை மாத்திட்டு வந்துடறேன். ஏதாவது டிஃபன் செய்ட்டா?”
என்றவளை கொஞ்சம் அலட்சியத்துடன் பார்த்துக்கொண்டே....
“வேணாம்மா...நீங்க டயர்டா வந்திருப்பீங்க...போய் ரெஸ்ட் எடுங்க. நான் பாத்துக்கறேன்”
என்று பொடி வைத்து பேசியவளை சற்றே சங்கடத்துடன் பார்த்துவிட்டு,
”சரிங்க அங்கிள் ஆண்ட்டியை, மீராவை எல்லாம் கேட்டதா சொல்லுங்க. இந்த ஊர்லதான் இருக்கீங்களா? அப்ப எல்லாரையும் ஒரு தடவை கூட்டிட்டு வாங்க” என்றதும்,
“அதெல்லாம் கூட்டிக்கிட்டு வருவாரு. நீ போம்மா...போய் ரெஸ்ட் எடுத்துக்க..”
மறுபடியும் நக்கலாய் சொன்ன மாமியாரை பார்க்காமல் விக்னேஷுடன் தங்கள் அறைக்குப் போனாள்.
அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த சம்பத், விக்னேஷின் அப்பா அம்மாவிடம்,
“ரொம்ப நல்ல பொண்ணு. காலேஜுக்குப் போனாலும் வீட்டு வேலையெல்லாம் இழுத்து போட்டுக்கிட்டு செய்யும். கல்யாணம்தான் தடை பட்டுக்கிட்டே இருந்தது. இப்பதான் மனசுக்கு
நிம்மதியா இருக்கு.”
“ஆமாமா...வேலையெல்லாம் நல்லாத்தான் செய்யுறா. ஆனா எங்க கிட்டதான் கலகலப்பா பழக மாட்டேங்குறா'”
“நல்லா கலகலப்பா பேசிட்டு இருந்த பொண்ணுதாம்மா...ஆனா அந்த சம்பவத்துக்கு அப்புறமாத்தான் ரொம்ப அமைதியாகிட்டா”
அவர் சம்பவம் என்றதும் திடுக்கிட்டு, ஒருவேளை சினிமாவில் காட்டுவதைப் போல ராத்திரியில் தனியாய் வரும்போது யாராவது அவளை நாசமாக்கிவிட்டார்களா? என்று யோசித்து,
“என்னங்க இது...ஏதோ சம்பவம் அது இதுன்னு சொல்றீங்க விபரீதமா எதுவும் நடந்துடலையே”
“அய்யய்யோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்கம்மா....ரெண்டு வருஷத்துக்கு முன்னால திடீர்ன்னு ஒருநாள் ஆம்பிளைக் குரல்ல பேசி தலையை விரிச்சிப் போட்டுக்கிட்டு ஆட ஆரம்பிச்சுட்டா. அப்புறம் கோடங்கியைக் கூட்டிக்கிட்டு வந்து பேயோட்டுனாங்க. அப்புறமா சரியாயிட்டா. ஆனா அதுக்கப்புறம் முன்ன மாதிரி யார்கிட்டயும் கலகலப்பா பேசறதில்ல”
“என்னது பேய் புடிச்சிருந்திச்சா? அடக்கடவுளே...பேய் புடிச்சவளையா எங்க வீட்டுக்கு மருமகளா கூட்டிக்கிட்டு வந்திருக்கோம்.....மோசம் போயிட்டோமே....ஆண்டவா.....என்னல்லாம் பண்னப்போறாளோ...?”
“அடடா....இப்பதான் சரியாயிடிச்சேம்மா. ஏன் உங்களுக்கு இது பத்தி ஒண்ணும் தெரியாதா?
“அதான் முழு பூசனிக்காயை சோத்துல மறைச்சுட்டாங்களே....சரி சரி...நாங்க பாத்துக்கறோம். நீங்க போய்ட்டு இன்னொரு நாளைக்கு வாங்க”
என்று முகத்திலடித்ததைப் போல ராஜகோபால் சொன்னதும், எழுந்து 'சரி போய்ட்டு வரேங்க' என்று சொல்லிவிட்டு, வாசலைத் தாண்டும்போது ‘அடப் பாவமே...அந்தப் பொண்ணை என்ன பாடு படுத்தப் போறாங்களோ தெரியலையே....நாம வேற தேவையில்லாம சொல்லித் தொலைச்சுட்டோமே' என வருத்தப்பட்டுக்கொண்டே போனார்.
அவர் போன மறு வினாடியே...
‘விக்னேஷ்” என்று அலறினாள் சிவகாமி.
மாமியார் பேசியதில் லேசாய் மனவருத்தலிருந்த மைதிலி, ஆறுதலாய் விக்னேஷ் தோளில் சாய்ந்து கொண்டிருந்தவள், மாமியாரின் அலறலில் தூக்கிவாரிப் போட இரண்டு பேரும் கூடத்துக்கு ஓடி வந்தார்கள்.
‘இவங்க அப்பனுக்குப் போன் போடுடா. உடனே அந்த ஆளை இங்க வரச் சொல்லு. இனிமே இந்த பிசாசு இங்க இருக்கக்கூடாது. சீக்கிரமா போன் போடு.”
“ஏம்மா இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி கத்துறீங்க....இவ என்ன தப்பு செஞ்சா?”
“இவ ஒண்ணும் தப்பு செய்யலடா....நாமதான் தப்பு பண்ணிட்டோம். இந்த பேய்புடிச்சவளை நம்ம வீட்டுக்கு விளக்கேத்த கூட்டிக்கிட்டு வந்தமில்லையா...அதுதான் நாம செஞ்ச மகா பெரிய தப்பு. இரு நானே கூப்புடறேன் அந்த ஆளை”
“இருங்கப்பா. என்ன பேய் அது இதுன்னு...என்ன ஒளர்றீங்க”
“நாங்க ஒண்ணும் ஒளறல.....இப்ப வந்துட்டு போன மனுஷன் எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சுட்டு போயிட்டார்” என்று சம்பத் சொன்ன அனைத்தையும், அதோடு இவர்களாகவே இணைத்துக்கொண்ட மசாலாவையும் சேர்த்து சொன்னார்கள்.
விக்னேஷ் எவ்வளவு சொல்லியும், மைதிலி கதறி அழுதும் கேட்காமல், மைதிலியின் அப்பாவை உடனடியாக வரச் சொல்லிவிட்டார்கள்.
அறைக்குள் வந்த மைதிலி, தேம்பலுடன் விக்னேஷின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு அழுதாள்.
”ஹே....மைதூ....என்னடா இது. இங்க பாரு....இங்க பாருன்னேன்....எதுக்கு அழற இப்ப. உங்கப்பாதானே வரட்டும் நானே பேசிக்கறேன். இப்ப அழறத நிறுத்து.”
“எனக்கு அப்ப ஏதோ நடந்துச்சின்னு தெரியும். ஆனா அது பேய்புடிச்சதா இல்ல மனோவியாதியான்னு எனக்கு சரியா தெரியலைங்க. ஆனா எங்கப்பாவும் அம்மாவும்தான், யாரோ பூசாரியைக் கூட்டிக்கிட்டு வந்து பூஜையெல்லாம் செஞ்சாங்க. அதுக்கப்புறம் நார்மலாயிட்டேன். அதுவே ஒருவிதமான மனோதத்துவ ட்ரீட்மெண்ட் மாதிரி இருந்திருக்கலாம். ஆனா இப்ப நான் நல்லாத்தானே இருக்கேன். ஏங்க உங்கப்பா அம்மா இவ்ளோ சத்தம் போட்டு ரகளை பண்றாங்க?”
“பாரு! எவ்ளோ தெளிவா பேசற. ஆனா ஒரு சாதாரண பொண்ணுமாதிரி ஏன் அழற. தைரியமா இரு. எனக்கும் தெரியும். அதெல்லாம் பேயும் இல்லை பூதமும் இல்லன்னு. ஆனா உங்க அப்பா அம்மா, எங்க அப்பா அம்மா இவங்கல்லாம் அந்தக் காலத்து மனுஷங்க. புரிஞ்சிக்க மாட்டாங்க. நாமதான் அவங்களுக்கு சொல்லனும். இப்ப என்ன.....உனக்கு ஆறுதலா எப்பவும் நான் உன் கூட இருக்கேன். எதுக்கு பயப்படற?”
அவனுடைய அந்த ஆறுதலான பேச்சு நெகிழ வைக்க, அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.
“பாத்தியா....இப்ப என்னத்தான் பேய் புடிச்சிருக்கு......காதல்பிசாசே...காதல் பிசாசே......”
“ச்சீ போங்க எப்ப பாத்தாலும் உங்களுக்கு விளையாட்டுதான்....”
“சீரியஸா சொல்லட்டுமா? உனக்குப் பேய்தான் பிடிச்சிருக்கு”
திடுக்கிட்டுப் பார்த்தவளின் முகத்தை நிமிர்த்தி, நமுட்டுச் சிரிப்புடன்,
‘பயந்துட்டியா....பைத்தியம். நான்தான் உன்னைப் பிடிச்சிருக்கிற பேய். எந்த கோடங்கி வந்தாலும் உன் கிட்டருந்து என்னை விரட்ட முடியாது. கடைசி வரைக்கும் நீ பேய் புடிச்சவதான்...ஹா...ஹா...”
சொல்லமுடியாத சந்தோஷத்தில் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்துக்கொண்டு கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.
அடுத்தநாள் மைதிலியின் அப்பாவும் அம்மாவும் வந்ததும் கூடமே அதிரும்படி கூப்பாடு போட்டார்கள் ராஜகோபாலும், சிவகாமியும். ஒன்றும் பேச முடியாமல் ஒடுங்கிப் போயிருந்த தன் பெற்றோரைப் பார்த்து மௌனமாய்க் கண்ணீர் வடித்தாள் மைதிலி. இவர்கள் பேச, அவர்கள் கெஞ்ச...கடைசியாய் ராஜகோபால் சொன்னதைக் கேட்டு ஆத்திரத்தில் பொங்கினான் விக்னேஷ்.
“சரி. ஆனது அயிடிச்சி. ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்ச பாவம் எங்களுக்கு எதுக்கு. இங்கயே இருந்துட்டு போகட்டும். விலைபோகாத சரக்குக்கு நீங்க குடுத்த வரதட்சணை கம்மிதான். இன்னும் ரெண்டு லட்சம் குடுத்துடுங்க. எங்களுக்காகவா கேக்கறோம். நாளைக்கே இவளுக்கு மறுபடியும் அதே பிரச்சனை வந்தா செலவு பண்ணனுமில்ல..”
என்று ராஜகோபால் சொன்னதும், அதுவரை காப்பாற்றி வைத்திருந்த நிதானத்தை, இழந்து, ராஜகோபாலின் முன்னால் போய் நின்று கொண்டு, அவரது முகத்தைப் பார்த்து....
”ச்சே....உங்களை என் அப்பா அம்மான்னு சொல்லவே வெக்கமா இருக்கு. என்ன சொன்னீங்க இவளுக்கா பேய்புடிச்சிருக்கு....உங்களுக்குத்தான் பேய் புடிச்சிருக்கு. பணப்பேய், பேராசைப் பேய். மொதல்ல உங்ககிட்டருந்து இந்தப் பேய்ங்கள தொரத்தனும். அதுசரி....குறையிருக்குன்னு சொல்லி அதுக்கு நிவர்த்தியா கூடக் கொஞ்சம் காசு குடுக்கச் சொல்லி சொல்றீங்களே..... பணம் குடுத்து என்னை விலைக்கு வாங்கினவங்க இவங்க. நாளைக்கே எனக்கு ஏதாவது ஒரு விபத்துல கையோ காலோ போயிடிச்சின்னா.....வாங்குன பொருள் கேரண்டி பீரியடுக்குள்ள சேதமாகிடிச்சு....அதனால கொடுத்தக் காசுலருந்து பாதியை திருப்பிக் குடுங்க இல்லண்னா வேற மாத்திக் குடுங்கன்னு இவங்க கேக்கலாமில்லையா?
உங்களைப் பொறுத்தவரைக்கும் கல்யாணம்ங்கறது வியாபாரம்தானே. அப்ப அப்படி அவங்க கேட்டா அதுல தப்பிருக்கற மாதிரி எனக்குத் தோணல. சேதமடைஞ்ச பொருளுக்கு மார்க்கெட்ல மதிப்பில்ல. அதே மாதிரிதான் சேதமடைஞ்ச மனசுக்கு மனுஷங்ககிட்ட மதிப்பில்ல. முடிஞ்சா உங்க சேதமாகியிருக்கிற மனசை சரி பண்ணிக்க முயற்சி பண்ணுங்க.
சரி. உங்களைப் பொறுத்தவரைக்கும் இவ பேய். இல்லையா? எப்படியோ பேய்க்கு வாழ்க்கைப் பட்டுட்டேன். புளியமரம் ஏறித்தானே ஆகனும். எங்களுக்குன்னு ஒரு மரம் இல்லாமயா போயிடும். நாங்க எங்க மரத்துக்குப் போறோம், உங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காது. மைதிலி...பெட்டி படுக்கையெல்லாம் ரெடி பண்ணு. நாம நம்ம புளியமரத்துக்குப் போலாம்”