வானதிதேவி
10-10-2009, 11:53 AM
நிலா காட்டி சோறுட்டிய அன்னையிடம்
நினைவு தெரிந்தது கேட்ட முதல் பொருள்
நிலா
தும்பி பிடித்து வாலில் நுல்கட்டி விளையாட
துடித்தது ஒருகாலம்
பட்டுபுச்சி வண்ணம் பார்த்து பாவாடை
கே்ட்டதொரு பருவம்
வண்ணமலர் தோட்டத்தில்
மணிகணக்கில் அமர்ந்து புவோடு புவை
பேசிய காலங்கள்
அத்தனையும் மறைய புறப்பட்டேன்
கல்லுரிக்கு முதல்வர் கேட்டார்
விருப்பப்பாடமென்ன
சட்டென்று சொன்னேன் தாவரவியல்
தினமும் ஒரு குடும்பம் பல உதாரண உறுப்பினர்களாய்
ஆர்வமும் ஆசையுமாய் கழிந்தன நாட்கள்
அய்யகோ அந்த நாளும் வந்தது செய்முறை என்ற
பெயரில் வேரோடு பிடுங்கி வரப்பட்டன செடிகள்
எல்லோரும் பார்க்கையிலேயே
கருவி எடுத்து அறுவை சிகிச்சை
நீள்வெட்டு தோற்றம் இது
குறுக்குவெட்டு தோற்றம் இதென்று
நெஞ்சிலே இதுவரை அனுபவித்தறியா
புதுவலி
என்கண்ணீர் கண்டு காரணமறிந்த
ஆசிரியர் நகைத்து நுண்ணோக்கியில்
பார் என்றார் பார்த்தேன்
மலரே நீ விந்தையானவள்
உள்ளும் புறமுமாய் உன்னுள் அழகின்
பிறப்பிடம் அறியா பேதையாய்
பிரசவித்த தாயின் வேதனை
கலந்த மகிழ்வோடு
ஆனாலும் நிதமும் உன்னை
காணுகையில் கழுத்தறுத்த
ஞாபகச்சிதறல்கள் என்னில்
ஆனாலும் மெளனமாய் என்னைப்
பார்த்து சிரிக்கிறாய் காற்றுடன்
கும்மி கொட்டி, என்ன பெண் இவள்
என்று எள்ளி நகையாடி
நினைவு தெரிந்தது கேட்ட முதல் பொருள்
நிலா
தும்பி பிடித்து வாலில் நுல்கட்டி விளையாட
துடித்தது ஒருகாலம்
பட்டுபுச்சி வண்ணம் பார்த்து பாவாடை
கே்ட்டதொரு பருவம்
வண்ணமலர் தோட்டத்தில்
மணிகணக்கில் அமர்ந்து புவோடு புவை
பேசிய காலங்கள்
அத்தனையும் மறைய புறப்பட்டேன்
கல்லுரிக்கு முதல்வர் கேட்டார்
விருப்பப்பாடமென்ன
சட்டென்று சொன்னேன் தாவரவியல்
தினமும் ஒரு குடும்பம் பல உதாரண உறுப்பினர்களாய்
ஆர்வமும் ஆசையுமாய் கழிந்தன நாட்கள்
அய்யகோ அந்த நாளும் வந்தது செய்முறை என்ற
பெயரில் வேரோடு பிடுங்கி வரப்பட்டன செடிகள்
எல்லோரும் பார்க்கையிலேயே
கருவி எடுத்து அறுவை சிகிச்சை
நீள்வெட்டு தோற்றம் இது
குறுக்குவெட்டு தோற்றம் இதென்று
நெஞ்சிலே இதுவரை அனுபவித்தறியா
புதுவலி
என்கண்ணீர் கண்டு காரணமறிந்த
ஆசிரியர் நகைத்து நுண்ணோக்கியில்
பார் என்றார் பார்த்தேன்
மலரே நீ விந்தையானவள்
உள்ளும் புறமுமாய் உன்னுள் அழகின்
பிறப்பிடம் அறியா பேதையாய்
பிரசவித்த தாயின் வேதனை
கலந்த மகிழ்வோடு
ஆனாலும் நிதமும் உன்னை
காணுகையில் கழுத்தறுத்த
ஞாபகச்சிதறல்கள் என்னில்
ஆனாலும் மெளனமாய் என்னைப்
பார்த்து சிரிக்கிறாய் காற்றுடன்
கும்மி கொட்டி, என்ன பெண் இவள்
என்று எள்ளி நகையாடி