அறிஞர்
08-10-2009, 03:14 PM
நடுத்தரமான செய்திகளை வெளியிடவேண்டிய பத்திரிக்கைகள்... மக்களை கவர்தற்காக சில செய்திகளை திரித்து வெளியிடுகின்றன. அவற்றில் சில உண்மை, பொய் செய்திகள் இடம் பெறுகின்றன...
பத்திரிக்கை நடுநிலை என்பது முக்கியம்
---------------
தினமலர் செய்தி ஆசிரியர்.. பெண் கொடுமை சட்டத்தில் கைதாகி
புழல் சிறையில் அடைப்பு
சென்னை, அக். 8- நடிகைகள் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்காக, தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனின், பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டது தொடர்பான செய்தியில், சில முக்கிய நடிகைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாக்குமூலத்தில் புவனேஸ்வரி கூறியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் மீது நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார்கள் கொடுத்தனர். இதன் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நேற்று கைது செய்யப்பட்டார். இதுபற்றி, போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகை புவனேஸ்வரி, மற்ற நடிகைகள் பற்றி அவதூறாக கூறியதாக தவறான செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ராதாரவி புகார் அளித்தார். அதில், ‘இந்த செய்திநடிகைகள் மனதை புண்படுத்துவதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று காலை வழக்குப்பதிவு செய்தனர். இச்செய்தியை வெளியிட்ட செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டு எழும்பூர் முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் லெனின் அடைக்கப்பட்டார்.
தினமலரில் வெளியான தகவலில் பல நடிகைகள் (நமீதா, சீதா, நளினி, மஞ்சுளா, ஷகீலா, ஸ்ரீப்ரியா, அஞ்சு) பெயர்கள் வெளிவந்தது.
பத்திரிக்கை நடுநிலை என்பது முக்கியம்
---------------
தினமலர் செய்தி ஆசிரியர்.. பெண் கொடுமை சட்டத்தில் கைதாகி
புழல் சிறையில் அடைப்பு
சென்னை, அக். 8- நடிகைகள் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்காக, தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனின், பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டது தொடர்பான செய்தியில், சில முக்கிய நடிகைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாக்குமூலத்தில் புவனேஸ்வரி கூறியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் மீது நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார்கள் கொடுத்தனர். இதன் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நேற்று கைது செய்யப்பட்டார். இதுபற்றி, போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகை புவனேஸ்வரி, மற்ற நடிகைகள் பற்றி அவதூறாக கூறியதாக தவறான செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ராதாரவி புகார் அளித்தார். அதில், ‘இந்த செய்திநடிகைகள் மனதை புண்படுத்துவதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று காலை வழக்குப்பதிவு செய்தனர். இச்செய்தியை வெளியிட்ட செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டு எழும்பூர் முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் லெனின் அடைக்கப்பட்டார்.
தினமலரில் வெளியான தகவலில் பல நடிகைகள் (நமீதா, சீதா, நளினி, மஞ்சுளா, ஷகீலா, ஸ்ரீப்ரியா, அஞ்சு) பெயர்கள் வெளிவந்தது.