PDA

View Full Version : கோடை



M.Rishan Shareef
07-10-2009, 06:22 AM
கோடை (http://mrishanshareef.blogspot.com/2009/09/blog-post.html)


பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான்
எரித்து எரித்துக் கருக்கி
எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான்
மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்

கீதம்
08-10-2009, 06:51 AM
கோடையின் உக்கிரம் கவிதையின் வழியாய்! ரசிக்கும்பொழுதில் கூட ஒரு கணம் பொசுக்கிச் செல்வது உண்மையே

aren
08-10-2009, 03:32 PM
கவிதை நன்றாக உள்ளது நண்பரே. இது நீங்கள் எழுதியதா. அப்படியானால் எதற்கு வார்த்தை இதழுக்கு நன்றி சொல்கிறீர்கள்.

M.Rishan Shareef
16-10-2009, 04:38 AM
அன்பின் கீதம்,

//கோடையின் உக்கிரம் கவிதையின் வழியாய்! ரசிக்கும்பொழுதில் கூட ஒரு கணம் பொசுக்கிச் செல்வது உண்மையே //

:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
16-10-2009, 04:40 AM
அன்பின் Aren,

//கவிதை நன்றாக உள்ளது நண்பரே. இது நீங்கள் எழுதியதா. அப்படியானால் எதற்கு வார்த்தை இதழுக்கு நன்றி சொல்கிறீர்கள். //

நன்றி நண்பரே !
கவிதை நான் எழுதியதுதான்.
அதனை 'வார்த்தை இதழ்' சிறப்பாகப் பிரசுரித்திருந்தது.
அதற்காகத்தான் அதற்கு நன்றி தெரிவித்திருக்கிறேன் !