aren
28-09-2009, 07:26 AM
குடும்பம்!!!
வீடு களேபரபட்டது. காமினி பள்ளிக்குச் செல்ல ஆயத்தம் என்ற பெயரில் இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தாள். ஸ்கூல் யூனிபாஃர்ம் அயர்ன் பண்ணவில்லை என்று ஒரே அழுகை. அம்மா ருக்மணி, கொடு நான் அயர்ன் செய்துகொடுக்கிறேன் என்று வாங்கி செய்துகொடுக்கிறாள்.
பையன் நரேஷோ, பள்ளி இருப்பது பற்றியே கவலைப்படாமல் உட்கார்ந்திருந்தான். அவனை கிளப்பி குளியல் அறைக்குள் அனுப்பிவிட்டு ருக்மணி சமையறைக்குள் வந்து அவர்களுக்கு காலை டிபனும், மதிய உணவிற்கு டிபனும் செய்து அதை பாக் செய்துவிட்டு, இவர் என்ன செய்கிறார் என்று கணவரைப் பார்க்கவந்தாள் படுக்கையறைக்கு.
கணவர் எழுந்து பாத்ரூமில் ஷேவ் செய்துகொண்டிருந்தார். உங்களுக்கு பிரேக்ஃபாஃஸ்ட் என்ன செய்யட்டும் என்றாள். கணவர் ரகு, எது இருக்கிறதோ அதையே கொடு என்று சொல்லி தன் காரியத்தில் கண்ணாயிருந்தார்.
சரி, இவர் என்றைக்கு முடிவு எடுத்திருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே ருக்மணி சமையறை நோக்கி நடந்தாள்.
கடந்த ஒரு வார காலமாகவே அவள் தன் கணவரை கவனித்து வருகிறார். யாரிடமும் சரியாக பேசுவதில்லை. எது கேட்டாலும் ஒரு பிடி கொடுக்காமல் பதில் சொல்கிறார். என்னவாயிற்று இவருக்கு. ஆபிஸில் ஏதாவது பிரச்சனையா, ஏன் மனுஷன் இப்படியிருக்கிறார் என்று தனக்குள்ளேயே நினைத்துகொண்டாளேயொழிய தன் கணவரிடம் இதுபற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.
ரகுவும் குளித்து ரெடியாகி கொடுத்த காலை சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு உணவை ஒரு டிபன் பாக்ஸில் எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானான். அப்பொழுதும் ருக்மணி ரகுவின் முகத்தைப் பார்த்தாள், ஏதோ பிரச்சனை என்று நன்றாகத் தெரிந்தது. அப்பொழுது என்னவென்று கேட்கவில்லை.
இப்படியே ஒரு வாரம் கழிந்தது. பிள்ளைகள் இந்த வருடம் லீவிற்கு மாமா வீட்டிற்குப் போகலாமா என்று கேட்டபோதும் ரகு ஒன்னும் சரியாக சொல்லவில்லை, ஏதோ சொல்லி மழுப்பினதை ருக்மணி கவனித்தாள். அப்பொழுதும் அவள் வாய் திறக்கவில்லை.
சந்தேகம் மேலும் வலுத்தது. என்ன செய்வது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் முழித்தாள். கல்யாணமான இந்த 12 வருடங்களில் தன் கணவன் இப்படி இருந்து பார்த்ததில்லை.
வார இறுதி முடிந்து திங்கட்கிழமை எப்பொழுதும் போல ரகு வேலைக்கு கிளம்பினான். வாசலுக்கு வந்து கொஞ்சம் நடந்து பஸ் ஸ்டாண்டிற்கு வந்தான், வந்து 12பி பஸ்ஸுல் ஏறினான், கண்டக்டரிடம் பனகல்பார்க் போக டிக்கெட் வாங்கினான்.
பனகல்பார்க்கில் இறங்கி நேராக அங்கே இருக்கும் பனகல்பார்க்கினுள் சென்றான், ஒரு சரியான இடத்தைப் பார்த்து அங்கே உட்கார்ந்துகொண்டன். உட்கார்ந்து தான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
அவனுக்கு வேலை போன விஷயம் அவன் குடும்பத்தாருக்குத் தெரியாது. ஆபிஸில் இரண்டுமாத சம்பளம் கொடுத்தார்கள். அதை வீட்டில் கொடுத்து இந்த இரண்டு மாதத்திற்குள் ஏதாவது ஒரு வேலை தேடிக்கொண்டு பின்னர் வீட்டில் சொல்லலாம் என்றிருந்தான், ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தால் மிகவும் மனதிற்கு கஷ்டப்படுவார்கள் என்ற காரணத்தால்.
ஆனால் அவனுடைய விதி இந்த இரண்டு மாதத்தில் அவனால் வேறு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளமுடியவில்லை, வீட்டிலும் உண்மையைச் சொல்லமுடியவில்லை. இருதலைக்கொள்ளி எரும்பாக மிகவும் கஷ்டப்பட்டான்.
ஒரு சில நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான், அவர்களும் எப்படியும் வேலை வாங்கித்தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவரை இப்படியே தினமும் வந்துவிட்டுப் போகலாம்.
புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கும்பொழுது பக்கத்தில் ஏதோ நிழலாடுவது போலிருந்தது. பார்த்தால் அங்கே ருக்குவும், காமினி, நரேஷ் ஆகியோரும் இருந்தார்கள். ரகுவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ருக்மணி ரகுவின் அருகில் அமர்ந்து, கொஞ்ச நாட்களாகவே கவனித்துவருகிறேன், நீங்கள் பழைய நிலையில் இல்லை என்று தெரிந்தது, ஆனால் எப்படி பேசுவது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டேன்.
இதைக் கேட்டவுடன் ரகுவின் கண்களிலிருந்து தண்ணீர் அருவியாகக் கொட்டியது, வேலை போய்விட்டது என்று எப்படி உங்களிடம் சொல்வது என்று தெரியாமல் இந்த இரண்டு மாதங்களாக முழித்துக்கொண்டிருக்கிறேன், குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றான்.
ருக்குவும் பிள்ளைகளும் ரகுவின் கண்ணீரைத் துடைத்துவிட்டார்கள். ருக்கு ரகுவிடம் நாங்கள் இருக்கிறோம், இந்த வேலை போனால் இன்னொரு வேலை கிடைக்காமலா போய்விடும், கவலைப்படவேண்டாம், வீட்டிற்கு வாங்க என்று ரகுவின் கையைப்பிடித்தாள்.
பிள்ளைகள் இருவரும், அப்பா இந்த வருஷ லீவிற்கு எங்கேயும் போகவேண்டாம் வீட்டிலேயே இருக்கலாம் என்றார்கள்.
ரகு ருக்கு மற்றும் பிள்ளைகளைப் பார்த்தான், அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது.
வீடு களேபரபட்டது. காமினி பள்ளிக்குச் செல்ல ஆயத்தம் என்ற பெயரில் இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தாள். ஸ்கூல் யூனிபாஃர்ம் அயர்ன் பண்ணவில்லை என்று ஒரே அழுகை. அம்மா ருக்மணி, கொடு நான் அயர்ன் செய்துகொடுக்கிறேன் என்று வாங்கி செய்துகொடுக்கிறாள்.
பையன் நரேஷோ, பள்ளி இருப்பது பற்றியே கவலைப்படாமல் உட்கார்ந்திருந்தான். அவனை கிளப்பி குளியல் அறைக்குள் அனுப்பிவிட்டு ருக்மணி சமையறைக்குள் வந்து அவர்களுக்கு காலை டிபனும், மதிய உணவிற்கு டிபனும் செய்து அதை பாக் செய்துவிட்டு, இவர் என்ன செய்கிறார் என்று கணவரைப் பார்க்கவந்தாள் படுக்கையறைக்கு.
கணவர் எழுந்து பாத்ரூமில் ஷேவ் செய்துகொண்டிருந்தார். உங்களுக்கு பிரேக்ஃபாஃஸ்ட் என்ன செய்யட்டும் என்றாள். கணவர் ரகு, எது இருக்கிறதோ அதையே கொடு என்று சொல்லி தன் காரியத்தில் கண்ணாயிருந்தார்.
சரி, இவர் என்றைக்கு முடிவு எடுத்திருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே ருக்மணி சமையறை நோக்கி நடந்தாள்.
கடந்த ஒரு வார காலமாகவே அவள் தன் கணவரை கவனித்து வருகிறார். யாரிடமும் சரியாக பேசுவதில்லை. எது கேட்டாலும் ஒரு பிடி கொடுக்காமல் பதில் சொல்கிறார். என்னவாயிற்று இவருக்கு. ஆபிஸில் ஏதாவது பிரச்சனையா, ஏன் மனுஷன் இப்படியிருக்கிறார் என்று தனக்குள்ளேயே நினைத்துகொண்டாளேயொழிய தன் கணவரிடம் இதுபற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.
ரகுவும் குளித்து ரெடியாகி கொடுத்த காலை சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு உணவை ஒரு டிபன் பாக்ஸில் எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானான். அப்பொழுதும் ருக்மணி ரகுவின் முகத்தைப் பார்த்தாள், ஏதோ பிரச்சனை என்று நன்றாகத் தெரிந்தது. அப்பொழுது என்னவென்று கேட்கவில்லை.
இப்படியே ஒரு வாரம் கழிந்தது. பிள்ளைகள் இந்த வருடம் லீவிற்கு மாமா வீட்டிற்குப் போகலாமா என்று கேட்டபோதும் ரகு ஒன்னும் சரியாக சொல்லவில்லை, ஏதோ சொல்லி மழுப்பினதை ருக்மணி கவனித்தாள். அப்பொழுதும் அவள் வாய் திறக்கவில்லை.
சந்தேகம் மேலும் வலுத்தது. என்ன செய்வது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் முழித்தாள். கல்யாணமான இந்த 12 வருடங்களில் தன் கணவன் இப்படி இருந்து பார்த்ததில்லை.
வார இறுதி முடிந்து திங்கட்கிழமை எப்பொழுதும் போல ரகு வேலைக்கு கிளம்பினான். வாசலுக்கு வந்து கொஞ்சம் நடந்து பஸ் ஸ்டாண்டிற்கு வந்தான், வந்து 12பி பஸ்ஸுல் ஏறினான், கண்டக்டரிடம் பனகல்பார்க் போக டிக்கெட் வாங்கினான்.
பனகல்பார்க்கில் இறங்கி நேராக அங்கே இருக்கும் பனகல்பார்க்கினுள் சென்றான், ஒரு சரியான இடத்தைப் பார்த்து அங்கே உட்கார்ந்துகொண்டன். உட்கார்ந்து தான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
அவனுக்கு வேலை போன விஷயம் அவன் குடும்பத்தாருக்குத் தெரியாது. ஆபிஸில் இரண்டுமாத சம்பளம் கொடுத்தார்கள். அதை வீட்டில் கொடுத்து இந்த இரண்டு மாதத்திற்குள் ஏதாவது ஒரு வேலை தேடிக்கொண்டு பின்னர் வீட்டில் சொல்லலாம் என்றிருந்தான், ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தால் மிகவும் மனதிற்கு கஷ்டப்படுவார்கள் என்ற காரணத்தால்.
ஆனால் அவனுடைய விதி இந்த இரண்டு மாதத்தில் அவனால் வேறு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளமுடியவில்லை, வீட்டிலும் உண்மையைச் சொல்லமுடியவில்லை. இருதலைக்கொள்ளி எரும்பாக மிகவும் கஷ்டப்பட்டான்.
ஒரு சில நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான், அவர்களும் எப்படியும் வேலை வாங்கித்தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவரை இப்படியே தினமும் வந்துவிட்டுப் போகலாம்.
புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கும்பொழுது பக்கத்தில் ஏதோ நிழலாடுவது போலிருந்தது. பார்த்தால் அங்கே ருக்குவும், காமினி, நரேஷ் ஆகியோரும் இருந்தார்கள். ரகுவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ருக்மணி ரகுவின் அருகில் அமர்ந்து, கொஞ்ச நாட்களாகவே கவனித்துவருகிறேன், நீங்கள் பழைய நிலையில் இல்லை என்று தெரிந்தது, ஆனால் எப்படி பேசுவது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டேன்.
இதைக் கேட்டவுடன் ரகுவின் கண்களிலிருந்து தண்ணீர் அருவியாகக் கொட்டியது, வேலை போய்விட்டது என்று எப்படி உங்களிடம் சொல்வது என்று தெரியாமல் இந்த இரண்டு மாதங்களாக முழித்துக்கொண்டிருக்கிறேன், குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றான்.
ருக்குவும் பிள்ளைகளும் ரகுவின் கண்ணீரைத் துடைத்துவிட்டார்கள். ருக்கு ரகுவிடம் நாங்கள் இருக்கிறோம், இந்த வேலை போனால் இன்னொரு வேலை கிடைக்காமலா போய்விடும், கவலைப்படவேண்டாம், வீட்டிற்கு வாங்க என்று ரகுவின் கையைப்பிடித்தாள்.
பிள்ளைகள் இருவரும், அப்பா இந்த வருஷ லீவிற்கு எங்கேயும் போகவேண்டாம் வீட்டிலேயே இருக்கலாம் என்றார்கள்.
ரகு ருக்கு மற்றும் பிள்ளைகளைப் பார்த்தான், அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது.