PDA

View Full Version : பதில் கடிதம் இது



Ravee
23-09-2009, 06:33 PM
இணையத்தில் வந்த ஒரு ஈழத்தமிழரின் கவிதைக்கு பதில் கடிதம்







நண்பா

என் நெஞ்கில் ஈரம் உண்டு

அது என் கண்ணில் கண்டேன்

உன் கவிதை படிக்கையில்

மூன்றாம் முறை தான்

முழுதாய் படித்தேன்

ஏன் என்றால்

முட்டிக்கொண்டது

கண்ணில் நீர்

மரித்துப்போன காகத்திற்காக

மற்றவை போடும் கூப்பாடு

காகங்களைப்போலவே நாங்களும்

கரைந்து திரிகிறோம்

கண்டுகொள்வார் யாரும் இல்லை

கட்சிகள் கொடுத்த காசுக்காக

விலை போன என் மக்கள்

அடுத்த வீடு எரியும் போது

உலைஅடுப்புக்கு நெருப்பெடுத்தார்



நண்பா நம்பிக்கை வை

நாம் நீறு பூத்த நெருப்பு

நமக்காக வீசட்டும் ஒரு காற்று

அறிஞர்
23-09-2009, 08:51 PM
எதிர்காலத்தை
நம்பிக்கையுண்டாக்கும் காலமாய்....
பதில் அருமை..

ஜெயாஸ்தா
03-10-2009, 01:43 PM
மொழியால் இணைந்த
முகமறிய சொந்தங்களுக்கு...
யாரோ எழுதிய இந்த வரிகள்...
நம்பிக்கையின் வாளாய் இருக்கட்டும்..!

கவிதை மீள்பதிவுக்கு நன்றி நண்பரே..!

ஓவியன்
04-10-2009, 06:20 AM
ஒரு பக்கம் ஊரே கூடி
ஊதி, ஊதி
நம் உயிர்
அணைத்துக் கொண்டிருந்தாலும்,
இது போன்ற
ஆறுதல் வார்த்தைகளே
இன்னும் எமை வாழ வைக்கின்றன....

நன்றிகள் பல, நண்பர்கள் அனைவருக்கும்....

Ravee
06-10-2009, 02:08 PM
ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு வலிமை தரும் . ஆனால் நான் என்றும் தோளோடு தோளாக இருக்கவே பிரியபடுகிறேன் நண்பரே .

aren
08-10-2009, 03:38 PM
அருமையான கவிதை வரிகள். நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது, உங்களுக்கு கை கொடுக்கும்.

அருமையான எதிர்காலம் இருக்கிறது. காத்திருங்கள். எல்லாம் வந்து சேரும்.

Ravee
17-10-2009, 12:45 AM
அருமையான கவிதை வரிகள். நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது, உங்களுக்கு கை கொடுக்கும்.

அருமையான எதிர்காலம் இருக்கிறது. காத்திருங்கள். எல்லாம் வந்து சேரும்.

நன்றி aren அவர்களே மனிதனுக்கு மனதில் கடவுள் பூட்டிவைத்த கை தான் நம்பிக்கை என்று நம்புகிறேன் .அது ஒவ்வொரு இதயத்தையும் தட்டும் பொது மட்டுமே கை கொடுக்கும். :icon_b:

அருள்
17-10-2009, 02:57 AM
வலிமை தரும் கவிதை

அமரன்
17-10-2009, 08:10 AM
என்னத்த சொல்ல.

உங்களைப் போன்றவர்களையும் இழக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உங்களால் கிடைத்த ஆறுதல் குலைக்கப்படும் அபாயம் தென்படுகிறது.

நன்றி நண்பனே.