Ravee
23-09-2009, 06:33 PM
இணையத்தில் வந்த ஒரு ஈழத்தமிழரின் கவிதைக்கு பதில் கடிதம்
நண்பா
என் நெஞ்கில் ஈரம் உண்டு
அது என் கண்ணில் கண்டேன்
உன் கவிதை படிக்கையில்
மூன்றாம் முறை தான்
முழுதாய் படித்தேன்
ஏன் என்றால்
முட்டிக்கொண்டது
கண்ணில் நீர்
மரித்துப்போன காகத்திற்காக
மற்றவை போடும் கூப்பாடு
காகங்களைப்போலவே நாங்களும்
கரைந்து திரிகிறோம்
கண்டுகொள்வார் யாரும் இல்லை
கட்சிகள் கொடுத்த காசுக்காக
விலை போன என் மக்கள்
அடுத்த வீடு எரியும் போது
உலைஅடுப்புக்கு நெருப்பெடுத்தார்
நண்பா நம்பிக்கை வை
நாம் நீறு பூத்த நெருப்பு
நமக்காக வீசட்டும் ஒரு காற்று
நண்பா
என் நெஞ்கில் ஈரம் உண்டு
அது என் கண்ணில் கண்டேன்
உன் கவிதை படிக்கையில்
மூன்றாம் முறை தான்
முழுதாய் படித்தேன்
ஏன் என்றால்
முட்டிக்கொண்டது
கண்ணில் நீர்
மரித்துப்போன காகத்திற்காக
மற்றவை போடும் கூப்பாடு
காகங்களைப்போலவே நாங்களும்
கரைந்து திரிகிறோம்
கண்டுகொள்வார் யாரும் இல்லை
கட்சிகள் கொடுத்த காசுக்காக
விலை போன என் மக்கள்
அடுத்த வீடு எரியும் போது
உலைஅடுப்புக்கு நெருப்பெடுத்தார்
நண்பா நம்பிக்கை வை
நாம் நீறு பூத்த நெருப்பு
நமக்காக வீசட்டும் ஒரு காற்று