Ravee
19-09-2009, 06:15 PM
இன்னும் எத்தனை நாள் திரும்பி போக
தாயகம் திரும்பினேன் இரு வருடம் கழித்து
கண்களில் பட்டவர்கள் எல்லாம் சொந்தமாய் தோன்றியது. முதலில் கேட்க்கும் தமிழ் வார்த்தைக்காக காதுகள் ஏங்கின.
" போடா சாவுகிராக்கி " என் கைல ராங்கு காட்டாதே என்ற டாக்சி காரனை புறம் தள்ளி வந்த ஆட்டோ காரன் "வா சார் எங்க போனும்" என்றான். இடம் சொன்னேன் எவ்வளவு என்றேன்.
இருநூறு ரூபாய் என்றான். ஏன் ? என்றேன்.
பிளைட் ஏறும்போது பேரம் பேசினியா என்றான் .
முடியவில்லை பொடிநடையாய் பேருந்தை நோக்கி நகர்ந்தேன் . போது பாரு சாவுகிராக்கி
இப்போது ஆட்டோ காரனும் டாக்சி காரனும் நண்பர்கள் ஆகி போனார்கள் . வீட்டு வாசல் அடைந்தேன் . வாயெல்லாம் புன்னகை
கைகளில் இருந்த இரண்டு பெட்டிகளை மட்டும் பார்த்து கொஞ்சம் மங்கித்தான் போனது
பெட்டி எல்லாம் இவ்வளவுதானா அர்த்தம் புரிந்தது ....சீண்டிப்பார்க்க ஆசைப்பட்டேன்
ஆமாம் அவ்வளவுதான் . என்ன பெட்ரோல் கிணத்தை கொண்டுவருவேன்னு பார்த்தியா என்றேன் .
டிவி என்றாள்.
வாங்குவோம் என்றேன்
மகள் கம்ப்யூட்டர் என்றாள்
வாங்குவோம் என்றேன்
மகன் பைக் என்றான்
வாங்குவோம் என்றேன்
ஒருவார பொழுது சந்தோசமாய் கழிந்தது
என் கைஇருப்பும் கரைந்தது
அரைகுறை உறக்கத்தில் இருந்த என் காதுகளில்
கேட்டது வாசலில் நடந்த அரட்டை அரங்கம் .
அங்க எல்லாம் பவுன் என்ன விலையாம் ? ?
அங்க எல்லாம் ஒட்டக கறிதானா சாப்பிட .
என் கழுத்து லேசாக வளைந்ததுபோல் இருந்தது . இப்படியாக ஒரு விவாத அரங்கம் நடந்துகொண்டு இருந்தது. பொழுது போகாமல் பைக்யை எடுத்துக்கொண்டு பழைய நண்பன் வீட்டுக்கு போனேன். வரவேற்றவன் வாடா என்ன வெறும் கையோட வந்து இருக்க என்றான் .புரியவில்லை அதான் சரக்கு ஒன்னும் கொண்டுவரலியா என்றான் .கஸ்டம்ஸ் ஆபிசர் எடுத்துக்கொண்டான் என்றேன் . மனமார சபித்தான் ,ஆபிசரையும் என்னையும் .சரி என்ன இன்னும் பழைய மோதிரம் என்றான் இது ராசிடா என்றேன் மாப்ள நீ சுத்த வேஸ்டுடா என்றான் .
அவன் கொடுத்த சான்றிதழுடன் கிளம்பினேன்
வீட்டுக்கு வந்தால் ஒரே கூச்சல் இவர யாரு வண்டியை எடுத்துகிட்டு போக சொன்னா... மகன் கூப்பாடு போட்டுகொண்டு இருந்தான்
என்னை ப்பார்த்தவுடன் வீடு அமைதியாய் போனது . இல்லை டியூஷன் போணுமாம் அதான் என்று மனைவி இழுத்தாள். சாவியை கொடுத்து விட்டு நகர்ந்தேன் . மகளின் கம்ப்யூட்டர்ரை ஆன் செய்தேன் .அப்பா கஷ்ட்டப்பட்டு வாங்கித்தந்த கம்ப்யூட்டரில் முகப்பில் அஜித் சிரித்துக்கொண்டு இருந்தான். தலைவிதி என்று நொந்து கொண்டு விலகி போனேன் .பசிக்குது சாப்பிடலாமா என்றேன் . இருங்க கோலங்கள் முடியட்டும் , போனவாரம் கூட தேவயானி இதே பொடவ கட்டிஇருந்தா அப்ப கூட எடுப்பா இல்லை .
புது டிவில தான் பளிச்சுன்னு இருக்கு என்றாள்.
கோவம் தலைக்கு ஏற கத்தினேன் . ஒரு நிமிடம் நின்று பார்த்தாள். காலையில இருந்து சும்மாவே இருகிங்களா அதான் அடிக்கடி பசிக்குது என்றாள். வார்த்தையின் உக்கிரம் நெஞ்சில் பாய்ந்தது. யாரை பார்த்து சும்மா இருக்கன்னு சொன்ன என்று சீற ஆரம்பிக்க,
கண்களில் போல போலவேன கண்ணிருடன், ரெண்டு வருஷம் கழிச்சு வந்து அன்பா பேசினாரா , என் தலைவிதி முனங்கி கொண்டே உள்ளே போனாள்.
என் சொந்த வீட்டிலேயே நான் அந்நியமாய் போய்க்கொண்டு இருந்தேன் .கண்கள் காலண்டரை மேய்ந்தது , இன்னும் எத்தனை நாள் திரும்பி போக என்று .
தாயகம் திரும்பினேன் இரு வருடம் கழித்து
கண்களில் பட்டவர்கள் எல்லாம் சொந்தமாய் தோன்றியது. முதலில் கேட்க்கும் தமிழ் வார்த்தைக்காக காதுகள் ஏங்கின.
" போடா சாவுகிராக்கி " என் கைல ராங்கு காட்டாதே என்ற டாக்சி காரனை புறம் தள்ளி வந்த ஆட்டோ காரன் "வா சார் எங்க போனும்" என்றான். இடம் சொன்னேன் எவ்வளவு என்றேன்.
இருநூறு ரூபாய் என்றான். ஏன் ? என்றேன்.
பிளைட் ஏறும்போது பேரம் பேசினியா என்றான் .
முடியவில்லை பொடிநடையாய் பேருந்தை நோக்கி நகர்ந்தேன் . போது பாரு சாவுகிராக்கி
இப்போது ஆட்டோ காரனும் டாக்சி காரனும் நண்பர்கள் ஆகி போனார்கள் . வீட்டு வாசல் அடைந்தேன் . வாயெல்லாம் புன்னகை
கைகளில் இருந்த இரண்டு பெட்டிகளை மட்டும் பார்த்து கொஞ்சம் மங்கித்தான் போனது
பெட்டி எல்லாம் இவ்வளவுதானா அர்த்தம் புரிந்தது ....சீண்டிப்பார்க்க ஆசைப்பட்டேன்
ஆமாம் அவ்வளவுதான் . என்ன பெட்ரோல் கிணத்தை கொண்டுவருவேன்னு பார்த்தியா என்றேன் .
டிவி என்றாள்.
வாங்குவோம் என்றேன்
மகள் கம்ப்யூட்டர் என்றாள்
வாங்குவோம் என்றேன்
மகன் பைக் என்றான்
வாங்குவோம் என்றேன்
ஒருவார பொழுது சந்தோசமாய் கழிந்தது
என் கைஇருப்பும் கரைந்தது
அரைகுறை உறக்கத்தில் இருந்த என் காதுகளில்
கேட்டது வாசலில் நடந்த அரட்டை அரங்கம் .
அங்க எல்லாம் பவுன் என்ன விலையாம் ? ?
அங்க எல்லாம் ஒட்டக கறிதானா சாப்பிட .
என் கழுத்து லேசாக வளைந்ததுபோல் இருந்தது . இப்படியாக ஒரு விவாத அரங்கம் நடந்துகொண்டு இருந்தது. பொழுது போகாமல் பைக்யை எடுத்துக்கொண்டு பழைய நண்பன் வீட்டுக்கு போனேன். வரவேற்றவன் வாடா என்ன வெறும் கையோட வந்து இருக்க என்றான் .புரியவில்லை அதான் சரக்கு ஒன்னும் கொண்டுவரலியா என்றான் .கஸ்டம்ஸ் ஆபிசர் எடுத்துக்கொண்டான் என்றேன் . மனமார சபித்தான் ,ஆபிசரையும் என்னையும் .சரி என்ன இன்னும் பழைய மோதிரம் என்றான் இது ராசிடா என்றேன் மாப்ள நீ சுத்த வேஸ்டுடா என்றான் .
அவன் கொடுத்த சான்றிதழுடன் கிளம்பினேன்
வீட்டுக்கு வந்தால் ஒரே கூச்சல் இவர யாரு வண்டியை எடுத்துகிட்டு போக சொன்னா... மகன் கூப்பாடு போட்டுகொண்டு இருந்தான்
என்னை ப்பார்த்தவுடன் வீடு அமைதியாய் போனது . இல்லை டியூஷன் போணுமாம் அதான் என்று மனைவி இழுத்தாள். சாவியை கொடுத்து விட்டு நகர்ந்தேன் . மகளின் கம்ப்யூட்டர்ரை ஆன் செய்தேன் .அப்பா கஷ்ட்டப்பட்டு வாங்கித்தந்த கம்ப்யூட்டரில் முகப்பில் அஜித் சிரித்துக்கொண்டு இருந்தான். தலைவிதி என்று நொந்து கொண்டு விலகி போனேன் .பசிக்குது சாப்பிடலாமா என்றேன் . இருங்க கோலங்கள் முடியட்டும் , போனவாரம் கூட தேவயானி இதே பொடவ கட்டிஇருந்தா அப்ப கூட எடுப்பா இல்லை .
புது டிவில தான் பளிச்சுன்னு இருக்கு என்றாள்.
கோவம் தலைக்கு ஏற கத்தினேன் . ஒரு நிமிடம் நின்று பார்த்தாள். காலையில இருந்து சும்மாவே இருகிங்களா அதான் அடிக்கடி பசிக்குது என்றாள். வார்த்தையின் உக்கிரம் நெஞ்சில் பாய்ந்தது. யாரை பார்த்து சும்மா இருக்கன்னு சொன்ன என்று சீற ஆரம்பிக்க,
கண்களில் போல போலவேன கண்ணிருடன், ரெண்டு வருஷம் கழிச்சு வந்து அன்பா பேசினாரா , என் தலைவிதி முனங்கி கொண்டே உள்ளே போனாள்.
என் சொந்த வீட்டிலேயே நான் அந்நியமாய் போய்க்கொண்டு இருந்தேன் .கண்கள் காலண்டரை மேய்ந்தது , இன்னும் எத்தனை நாள் திரும்பி போக என்று .