Ravee
08-09-2009, 01:21 AM
புது உணர்வு
எத்தனையோ சோதனைகள் எத்தனையோ வேதனைகள்
இவைதாண்டி வாழ்க்கை அலுத்துப்போன வேளையிலே
இறை அருளால் சந்தித்தேன் ஒரு பெரியவரை
மிச்சம் இருக்கும் காலம் கொஞ்சம்
என்ன செய்வேன் இனி என்று
அருள் தந்தார் ஆசி தந்தார்
உனக்கு உன் ஆயுளின் ஒரு பகுதியை
மீட்டு தருகிறேன் என்று வரம் தந்தார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்வே மகிழ்ச்சி
ஒருகணம் வீணாகவில்லை
உழைப்பு உழைப்பு ஓயாத உழைப்பு
இழந்தது எல்லாம் கிடைத்தது
எட்டாத உயரம் எல்லாம் தொட்டு வந்தேன்
நல்ல வீடு நல்ல மனைவி நல்ல குடும்பம்
சந்தோசம் சந்தோசம் இரட்டிப்பு சந்தோசம்
இறைவனுக்கு நன்றி கூறி கண்திறந்து பார்த்தேன்
என் பழைய கட்டில் பழைய வீடு என் பழைய மனைவி
கண்டதெல்லாம் கனவா , கண்களை மூடினேன்
மீண்டும் வண்ண வண்ண கனவுகளின் ஒளி வட்டம்
வாழ்க்கையே நம்பிக்கையில்தான்
புது உணர்வுடன் எழுந்தேன்
என் மிச்சம் இருக்கும் வாழ்க்கையை
வாழ்ந்து பார்ப்பது என்று ................
எத்தனையோ சோதனைகள் எத்தனையோ வேதனைகள்
இவைதாண்டி வாழ்க்கை அலுத்துப்போன வேளையிலே
இறை அருளால் சந்தித்தேன் ஒரு பெரியவரை
மிச்சம் இருக்கும் காலம் கொஞ்சம்
என்ன செய்வேன் இனி என்று
அருள் தந்தார் ஆசி தந்தார்
உனக்கு உன் ஆயுளின் ஒரு பகுதியை
மீட்டு தருகிறேன் என்று வரம் தந்தார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்வே மகிழ்ச்சி
ஒருகணம் வீணாகவில்லை
உழைப்பு உழைப்பு ஓயாத உழைப்பு
இழந்தது எல்லாம் கிடைத்தது
எட்டாத உயரம் எல்லாம் தொட்டு வந்தேன்
நல்ல வீடு நல்ல மனைவி நல்ல குடும்பம்
சந்தோசம் சந்தோசம் இரட்டிப்பு சந்தோசம்
இறைவனுக்கு நன்றி கூறி கண்திறந்து பார்த்தேன்
என் பழைய கட்டில் பழைய வீடு என் பழைய மனைவி
கண்டதெல்லாம் கனவா , கண்களை மூடினேன்
மீண்டும் வண்ண வண்ண கனவுகளின் ஒளி வட்டம்
வாழ்க்கையே நம்பிக்கையில்தான்
புது உணர்வுடன் எழுந்தேன்
என் மிச்சம் இருக்கும் வாழ்க்கையை
வாழ்ந்து பார்ப்பது என்று ................