தமிழநம்பி
27-08-2009, 03:55 AM
1800ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்!
குடக்கோ நெடுஞ்சேரலாதன், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரப் பேரரசன்.
அப் பெருவேந்தனுக்கு இரண்டு பிள்ளைகள்.
அவன் தன் மைந்தரோடு தலைநகராகிய வஞ்சிமூதூரில் மணிமண்டபத்தில் வீற்றிருந்த போது அங்கு ஒரு கணியன் (சோதிடன்) வந்தான்.
அக் கணியன், அரசன் நெடுஞ்சேரலாதனிடம், தான் கணியத் திறமையன் என்று அரசனுக்குக் காட்டிப் பெரும் பரிசு பெறும் எண்ணங் கொண்டான்.
அரசனை வணங்கிவிட்டு, அம் மணிமண்டபத்தில் இருந்த அரசனின் மைந்தர் இருவரையும் பார்த்துவிட்டு, அரசனிடம் கூறத் தொடங்கினான்.
"அரசே, உம் மைந்தருள், இளையவனான இளங்கோவுக்கே அரசு வீற்றிருக்கும் இலக்கணம் உள்ளது" என்று சொன்னான்.
அதைக் கேட்டதும் மூத்த மைந்தனான செங்குட்டுவனின் முகம் சுருங்கியது.
விருட்டென எழுந்தார் இளங்கோ! அக் கணியனை வெகுண்டு நோக்கி, தமையனாகிய செங்குட்டுவனிருக்க, இவ்வாறு முறைமை கெடச் சொன்னாயே! எனக் கடுமையாகக் கூறினார்.
தமையனுக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் போக்க எண்ணினார் இளங்கோ.
அந்தக் கணியனை நோக்கி, " உன் கணியம் பொய்யென்பதை மெய்ப்பித்துக் காட்டுவேன்! அண்ணன் செங்குட்டுவன் அனைத்துலகும் புகழ ஆட்சி செய்வதை மக்கள் காண்பர்!" என்று மு்ழக்கமிட்டார்.
அம் மணிமண்டபத்தை விட்டு நீங்கிய இளங்கோ, தன்னிருப்பிடம் சென்றார். அரச உடைகளைக் களைந்தார். துறவுடை பூண்டார். கிழக்கு வாயில் நோக்கி நடந்தார்.
அந்தக் கிழக்கு வாயிற் கோட்டத்திலேயே தங்கி இருந்து தம் வாழ்நாள் கடமைகளைச் செய்தார்! அங்கிருந்தே ஈடற்ற முத்தமிழ் இலக்கியமான நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
அவரின் தமையனான, சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களை வென்று இமய வெற்பில் (மலையில்) விற்புலிகயல் (தமிழ்க்கொடி) பொறித்தான்! தமிழரின் வீரத்தை இகழ்ந்த வடவாரிய மன்னர்களான கனகன் விசயன் எனபாரின் தலையில் கல்சுமத்திக் கொணர்ந்து கற்புக்கரசி கண்ணகிக்குச் சிலை அமைத்துக் கோயில் கட்டினான்.
இவ்வாறு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்பே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர் இளங்கோ அடிகளாவார்.
குடக்கோ நெடுஞ்சேரலாதன், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரப் பேரரசன்.
அப் பெருவேந்தனுக்கு இரண்டு பிள்ளைகள்.
அவன் தன் மைந்தரோடு தலைநகராகிய வஞ்சிமூதூரில் மணிமண்டபத்தில் வீற்றிருந்த போது அங்கு ஒரு கணியன் (சோதிடன்) வந்தான்.
அக் கணியன், அரசன் நெடுஞ்சேரலாதனிடம், தான் கணியத் திறமையன் என்று அரசனுக்குக் காட்டிப் பெரும் பரிசு பெறும் எண்ணங் கொண்டான்.
அரசனை வணங்கிவிட்டு, அம் மணிமண்டபத்தில் இருந்த அரசனின் மைந்தர் இருவரையும் பார்த்துவிட்டு, அரசனிடம் கூறத் தொடங்கினான்.
"அரசே, உம் மைந்தருள், இளையவனான இளங்கோவுக்கே அரசு வீற்றிருக்கும் இலக்கணம் உள்ளது" என்று சொன்னான்.
அதைக் கேட்டதும் மூத்த மைந்தனான செங்குட்டுவனின் முகம் சுருங்கியது.
விருட்டென எழுந்தார் இளங்கோ! அக் கணியனை வெகுண்டு நோக்கி, தமையனாகிய செங்குட்டுவனிருக்க, இவ்வாறு முறைமை கெடச் சொன்னாயே! எனக் கடுமையாகக் கூறினார்.
தமையனுக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் போக்க எண்ணினார் இளங்கோ.
அந்தக் கணியனை நோக்கி, " உன் கணியம் பொய்யென்பதை மெய்ப்பித்துக் காட்டுவேன்! அண்ணன் செங்குட்டுவன் அனைத்துலகும் புகழ ஆட்சி செய்வதை மக்கள் காண்பர்!" என்று மு்ழக்கமிட்டார்.
அம் மணிமண்டபத்தை விட்டு நீங்கிய இளங்கோ, தன்னிருப்பிடம் சென்றார். அரச உடைகளைக் களைந்தார். துறவுடை பூண்டார். கிழக்கு வாயில் நோக்கி நடந்தார்.
அந்தக் கிழக்கு வாயிற் கோட்டத்திலேயே தங்கி இருந்து தம் வாழ்நாள் கடமைகளைச் செய்தார்! அங்கிருந்தே ஈடற்ற முத்தமிழ் இலக்கியமான நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
அவரின் தமையனான, சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களை வென்று இமய வெற்பில் (மலையில்) விற்புலிகயல் (தமிழ்க்கொடி) பொறித்தான்! தமிழரின் வீரத்தை இகழ்ந்த வடவாரிய மன்னர்களான கனகன் விசயன் எனபாரின் தலையில் கல்சுமத்திக் கொணர்ந்து கற்புக்கரசி கண்ணகிக்குச் சிலை அமைத்துக் கோயில் கட்டினான்.
இவ்வாறு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்பே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர் இளங்கோ அடிகளாவார்.