PDA

View Full Version : எதிலும் அடங்கா கவிதைகள்



umakarthick
25-08-2009, 09:52 AM
என்ன தலைப்பு வைக்குறது
--------------------------
கிட்னி பெயிலராகி இறந்து போன
பொன்னுச்சாமி அண்ணனின்
இறுதி ஊர்வலத்தில் அவரது
கால்விரல்களை தொட்டதாக அம்மாவிடம் சொன்னேன்

ஏன் அப்படி பண்னினே
இன்னைக்கு நைட்டு புடிச்சுக்குவாரு பாரு பயங்காட்டினாள்

அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது

புருஷன் செத்ததுக்கு கூட வராம
மச்சினன் வீட்டுல தங்கிட்ட பொண்டாட்டிய
விட்டுட்டு என்னையாவா வந்து புடிப்பாரு??


கோட்டி
------------

கோட்டி நாய் கடிச்சுட்ட வாச்சு மேனு
உடம்பு சரியாகுற வரைக்கும் நாய்க்கு
ஒண்ணும் ஆவாம பாத்துக்கிட்டாரு

தினமும் சோறுவைக்குறது
புண்ணுக்கு மருந்து போடுறதும்னு

ஏழு நாள் கழிச்சு உடம்புக்கு நல்லானதும்
நாய அடிச்சு கொல்ல மனசில்லாம அப்படியே விட்டுட்டாரு

இப்போ அந்த வாச்சுமேனுக்கு கோட்டி
புடிச்சிட்டுன்னு எல்லாரும் சொல்றாங்க