அமரன்
24-08-2009, 03:03 PM
போர்வைப் போர்க்களத்துள்
நித்திரையுடன் யுத்தம் செய்து
வென்று வெளிவந்து,
வாசல் தெளித்துக் கோலமிடும்
இளங்காலைச் சூரியனை
உண்டு உழைத்த அந்த நாட்கள்
அடைபட்டுக் கிடக்கின்றன
அலாரம் அடித்து ஓய்ந்த
மணிக் கூடுகளில்...
நித்திரையுடன் யுத்தம் செய்து
வென்று வெளிவந்து,
வாசல் தெளித்துக் கோலமிடும்
இளங்காலைச் சூரியனை
உண்டு உழைத்த அந்த நாட்கள்
அடைபட்டுக் கிடக்கின்றன
அலாரம் அடித்து ஓய்ந்த
மணிக் கூடுகளில்...