தமிழநம்பி
18-08-2009, 04:25 PM
இனக்கொலையர் வெங்கொடுமை எல்லை மீற
இனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே
இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
தன்மானம் கெட்டோரொப் பந்தம் போட்டார்!
சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!
உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
செயிருருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
அயிறற்கு உணவில்லை அருந்த நீரும்
அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!
அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்!
:confused:
இனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே
இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
தன்மானம் கெட்டோரொப் பந்தம் போட்டார்!
சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!
உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
செயிருருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
அயிறற்கு உணவில்லை அருந்த நீரும்
அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!
அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்!
:confused: