PDA

View Full Version : என் தோழியே..



இன்பக்கவி
17-08-2009, 07:21 AM
ஆயிரம் மைல்கள் தள்ளி
நீ இருந்தாலும்
என்னுடன் அருகில் இருப்பதாய்
உணர்ந்தேன் இது வரை..
உன் பிரிவில் வாடும்
இந்த நாட்கள்....
என்னால் சொல்ல
இயலா துயரம் நெஞ்சில்...
இனியும் எனக்கு
இந்த நிலையை
தந்து விடாதே.....
அனாதையாகி போனேன்
உன் அரவணைப்பு இல்லாமல்....
இதயம் வெடிக்கும் அழுகை..
இனி அழ என்னிடம் திறன் இல்லை....
என்னை விட்டு தொலைதூரம்
செல்ல போகிறாய்...
நிம்மதியாக சென்று வா...
கவனமாக சென்று வா...
உன்னை மறக்க நினைப்பது
என் உயிர் போன பின் வேண்டுமாயின்
நடக்கும்...
சந்தோஷம் மட்டுமே இனி கிடைக்க
வாழ்த்துக்கள்....
பத்திரமாக சென்று வா...
நீயும் உன் நினைவுகளும் மட்டும்
பத்திரமாக என்னுடனேயே
இருக்கட்டும்...

ஓவியன்
17-08-2009, 07:30 AM
அன்பாலிணைந்த நல்ல உள்ளங்களை
மைல்கள் பிரித்து வைத்தாலும்,
மனங்கள் நெருக்கித்தானே வைத்திருக்கும்...!!

வாழ்த்துகள் சகோதரி..!!

செல்வா
19-08-2009, 08:17 AM
பசுமை நிறைந்த நினைவுகளே....
பாடித்திரிந்த பறவைகளே...

நட்பின் பிரிவு எப்போது நினைத்தாலும்
நன்மையோ இன்பமோ கொடுப்பதல்ல...

ஆனால் நண்பரோடு இருந்த நாட்களை நினைந்து
இந்தப் பிரிவாற்றாமையைச் சற்றுக் குறைக்கலாம்...

பிரிவுத்துன்பத்தை
கவியாக்கிய கவிக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் நிறைய கவிதைகள் வாசியுங்கள்
இன்னும் நிறைய எழுதுங்கள்...

கா.ரமேஷ்
19-08-2009, 08:35 AM
நீயும் உன் நினைவுகளும் மட்டும்
பத்திரமாக என்னுடனேயே
இருக்கட்டும்...

நல்ல வரிகள்.... வாழ்த்துக்கள்...

அமரன்
19-08-2009, 08:36 AM
ஆயிரம் மைல்களுக்கப்பால் தொலைதூரமா..
தொலைதூரம் என்பது கவிமொழியில் கவலை தரும் அர்த்தமாச்சே..

நான் எங்கே சென்றாலும்
நமக்குள்
வட்டமிட்டுக் கொண்டிருக்கும்
நினைவுகளும் நட்பும்.

நட்பின் பிரிவு தாங்க முடியாதது. அடிதாங்கியாவும் இருக்கப் பழகவேண்டும். அடிகள் விழுவதாலும் சங்கீதம் பிறக்கிறது.

ஆதி
19-08-2009, 08:50 AM
அன்பு அக்கறை வாழ்த்து பிரிவாற்றாமை என
பலவும் வழியும்
நெருக்கமான நட்பை சொல்லும்
எதார்த்தமான கவிதை..
உணர்வுகள் உயிர்ப்போடு இருக்கிறது கவிதைக்குள்..
வாழ்த்துக்கள் கவிதா123 அவர்களே..

இன்பக்கவி
20-08-2009, 07:24 AM
நட்பு..எனக்கு இது மட்டுமே சுவாசம்...
நட்பின் பிரிவை தாங்கும் சக்தி வெளியில் உண்டு...மனதால் முடிவது இல்லை...
நன்றிகள், அமரன், செல்வா, ரமேஷ், ஆதி, ஓவியன்...அனைவருக்கும்....

மாதவர்
21-08-2009, 11:50 AM
தோழியை பாடிய நீர்
வாழி