ஆதி
14-08-2009, 11:07 AM
சவக்குழியில் இருந்து
உயிர்ப்பு கொண்டது
அந்த பொழுது..
அதன் அந்தகார வெளியில்
அழுகுரலும் ஓலமும்
கசையடி அதிர்வுகளும்
ஏக்கப் பெருமூச்சுகளும்
நிறைந்தது..
நடுநிசியின் மோன கணத்தில்
ஓசையற்ற பாதங்களோடு
கனவுக்குள் கசிந்து
என்னை ஆக்ரமித்தது அது..
முற்றி வளர்ந்த
அரக்க நகங்கள் கொண்ட கைகளின்
கோரப்பிடியில் இருந்து விடுபட
திமிறி போராடி
மூச்சிரைக்க எழுந்தேன் நான்..
தான் இரைத்து போட்ட இருளை
அமைதியாக பொறுக்கி கொண்டிருந்த இரவு
மருட்சி வழியும் என்னை கண்டு
நிலா முறுவல் பூத்தது..
அரண்ட என் விழிகளின் தேடலில்
பற்றிய கோர கைகளும்
அதன் பிடியும் தென்படவில்லை..
ச்சீ, கனவென மீண்டும்
தூக்க பாதாளத்தில் ஆழ்கையில்
புறா சிறகுகளுண்ட
ஒரு தேவதையின் கைகள்
புனித நகர் நோக்கி
என்னை அள்ளி பறந்தது..
உயிர்ப்பு கொண்டது
அந்த பொழுது..
அதன் அந்தகார வெளியில்
அழுகுரலும் ஓலமும்
கசையடி அதிர்வுகளும்
ஏக்கப் பெருமூச்சுகளும்
நிறைந்தது..
நடுநிசியின் மோன கணத்தில்
ஓசையற்ற பாதங்களோடு
கனவுக்குள் கசிந்து
என்னை ஆக்ரமித்தது அது..
முற்றி வளர்ந்த
அரக்க நகங்கள் கொண்ட கைகளின்
கோரப்பிடியில் இருந்து விடுபட
திமிறி போராடி
மூச்சிரைக்க எழுந்தேன் நான்..
தான் இரைத்து போட்ட இருளை
அமைதியாக பொறுக்கி கொண்டிருந்த இரவு
மருட்சி வழியும் என்னை கண்டு
நிலா முறுவல் பூத்தது..
அரண்ட என் விழிகளின் தேடலில்
பற்றிய கோர கைகளும்
அதன் பிடியும் தென்படவில்லை..
ச்சீ, கனவென மீண்டும்
தூக்க பாதாளத்தில் ஆழ்கையில்
புறா சிறகுகளுண்ட
ஒரு தேவதையின் கைகள்
புனித நகர் நோக்கி
என்னை அள்ளி பறந்தது..