சசிதரன்
12-08-2009, 05:27 PM
யாருமறியாத
காட்டில்...
ஏதோ ஓர்..
பெயர் தெரியாத பூ..
பூத்துக் கொண்டிருக்கிறது.
எங்கோ ஒரு
விவாதம் நீண்டு...
புரிதலின் சுவடுகள்..
மறைய தொடங்குகிறது.
தாங்க முடியாத...
நிராகரிப்பின் வலியை...
யாரோ ஒருவன்..
பெற்றுக் கொண்டிருக்கிறான்.
எவனோ ஒருவன்...
மரணம் பற்றி...
கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறான்.
எங்கோ ஒருவன்...
தன மரணத்திற்கு...
யாரும் காரணமில்லையென..
கடிதம்
எழுதிக் கொண்டிருக்கிறான்.
இரவுகள்..
ஒன்று போல்..
அமைவதில்லை...
எல்லோருக்கும்.
நீளும் இரவின்...
நிசப்தம் உடைத்து..
நான் விடும் பெருமூச்சு...
ஏற்படுத்தக்கூடும்...
எங்கோ ஒரு...
பெரும்புயலுக்கான..
ஆரம்ப சுழற்சியை
காட்டில்...
ஏதோ ஓர்..
பெயர் தெரியாத பூ..
பூத்துக் கொண்டிருக்கிறது.
எங்கோ ஒரு
விவாதம் நீண்டு...
புரிதலின் சுவடுகள்..
மறைய தொடங்குகிறது.
தாங்க முடியாத...
நிராகரிப்பின் வலியை...
யாரோ ஒருவன்..
பெற்றுக் கொண்டிருக்கிறான்.
எவனோ ஒருவன்...
மரணம் பற்றி...
கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறான்.
எங்கோ ஒருவன்...
தன மரணத்திற்கு...
யாரும் காரணமில்லையென..
கடிதம்
எழுதிக் கொண்டிருக்கிறான்.
இரவுகள்..
ஒன்று போல்..
அமைவதில்லை...
எல்லோருக்கும்.
நீளும் இரவின்...
நிசப்தம் உடைத்து..
நான் விடும் பெருமூச்சு...
ஏற்படுத்தக்கூடும்...
எங்கோ ஒரு...
பெரும்புயலுக்கான..
ஆரம்ப சுழற்சியை