View Full Version : காத.....
கடவுளை மற
சாத்தானை நினை
காதலை துதி
மஞ்சுபாஷிணி
12-08-2009, 05:07 AM
அட இப்படியுமா? :) நல்லா இருக்கு சுஜா... நன்றி...
அட இப்படியுமா? :) நல்லா இருக்கு சுஜா... நன்றி...
நன்றி அக்கா
கிட்டினால் அமுது
சிந்தினால் நஞ்சு
விநோத பானம் - காதல்!
காதலினால் மானிடர்க்கு உய்வுண்டாம் - பாரதி பாடிய கீதம்!
கடவுளை மற , காதலைத் துதி - சாத்தான் ஓதிய வேதம்!!
காதல் - சொல் ஒன்று; பார்வைகள் பல..
பாராட்டுகள் சுஜா.
அமரன்
13-08-2009, 11:52 AM
என்னமோ போங்கப்பா.
காதல் என்றாலே
எனக்கு
சூன்யம்தான் மிஞ்சும்..
பாராட்டுகள் சுஜா.
வெற்றி வாசன்
13-08-2009, 07:23 PM
சுஜா என்ன குற வருகிறார் என்று தெரியவில்லை.
முதல் முயற்சிககு எனது பாராட்டுகள்
இளசுவின் வரிகள் மிக அருமை.
ஓவியன்
19-08-2009, 03:02 PM
சுஜா,
மறந்தும் இந்தக் கவிதையைக் காதலியிடம் காட்டிடாதீங்க, தன்னை நினைக்காமல் சாத்தானை நினைக்கச் சொல்லுறீங்களேனு கோவிச்சாலும் கோவிப்பாங்க.. :):D