PDA

View Full Version : ஒருவன்



ஆதி
10-08-2009, 01:32 PM
எல்லையற்றவனுக்கு
எது சிறை ?
எங்கும் நிறைந்தவனுக்கு
ஏது வீடு ?
தில்லையில் நின்றவனும்
திருமலையில் உள்ளவனும்
பாலையில் உறைந்தவனும்
பாவத்துக்காய் இறந்தவனும்
ஒருவந்தான் - அவன்
உருவம் என்றும் அரூவம் தான்..

இளசு
10-08-2009, 07:35 PM
பார்வைகள் உயர்ந்தால், பரந்தால்...
சர்வம் ஏகமாகும்..

பாராட்டுகள் ஆதி!

அமரன்
11-08-2009, 09:46 AM
அருவம் எப்படி
ஒருவன்/ஒருத்தி ஆகும்...!

ஒன்றே குலம்...
அன்பே சிவம்..

பாராட்டுகள் ஆதி!!

நாகரா
11-08-2009, 10:56 AM
உள்ளே அமர்ந்த ஒருவனை உணர்ந்தால்
மெய்யைப் பிரியா உயிர்ப்பு

அருவம் ஒன்றே உருவம் யாவுமாய்
அடர்ந்த ஞால உண்மை

கவிதை அருமை, வாழ்த்துக்கள் ஆதி