மதுரை மைந்தன்
10-08-2009, 09:12 AM
தயாரிப்பாளர்: அடுத்தடுத்து சோகமான படங்களே எடுத்து அலுத்துடுச்சு. அடுத்ததா எடுக்கப் போற படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படமா இருக்கணும் என்ன சொல்றீங்க?
டைரகடர்: நானும் அதையே விருமபறேன். ஆனா கதைக்கு எங்கே போறது?
உதவியாளர்: சார் எனக்குத் தெரிஞ்ச நகைச்சுவை எழுத்தாளர் ஒருத்தர் இருக்காரு. அவர் பெயர் கிரேஸி மைந்தன். நம்ம கிரேஸி மோகனை மாதிரியே எழுதறதா நினைச்சுக்கிட்டு அவரே தன்னை கிரேஸி மைந்தன்னு சொல்லிக்கறாரு. நான் வேணா அவரைக் கூப்பிடட்டா?
தயாரிப்பாளர்: கூப்பிடுங்க. கதை நல்லா இருந்தா சரி.
உதவியாளர் தனது செல் போனில் அவரைக் கூப்பிட கிரேஸி மைந்தன் அங்கு வருகிறார்.
கிரேஸி மைந்தன்: ஹி ஹி ஹி வணக்கம். ஹி ஹி ஹி என்னைக் கூப்பிட்டீங்களாமே? ஹி ஹி ஹி எதுக்கு?
தயாரிப்பாளர் (எரிச்சலுடன்): நீங்க ஒரு நகைச்சுவை எழுத்தாளர் எனபதால் வார்த்தைக்கு வார்த்தை இப்படி ஹி ஹி னு சிரிக்கறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா? நாங்க ஒரு முழு நீள நகைச் சுவைப் படம் எடுக்கலாம்னு இருக்கோம். அதுக்கு ஏத்த மாதிரி கதை எதுவும் வச்சுருக்கீங்களா?
கிரேஸி மைந்தன்: ஓ வச்சிருக்கேனே. கதையின் தலைப்பு தில்லி.
தயாரிப்பாளர்: நாங்க தமிழ் படம் எடுக்கறோம். நீங்க சொல்ற தலைப்பை பார்த்தா அது ஒரு ஹிந்தி படம் போல இருக்கே?
கிரேஸி மைந்தன்: மணி ரத்னம் மட்டும் பம்பாய்னு தலைப்பு வைச்சு தமிழ் படம் எடுக்கலையா? என்னோட கதையும் அதே மாதிரி தான். மணி ரத்னம் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கப்புறம் பம்பாயில் நடந்த கலவரங்களை வைச்சு படம் எடுத்தாரு. என்னோட கதை இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதற்கப்புறம் தில்லியில் நடந்த கலவரத்தை வச்சு எழுதப்பட்டது. மணி ரத்னம் சீரியஸா கதை சென்னாரு. நான் நகைச்சுவையா கதை சொல்றேன்.
டைரக்டர்: ஓ அப்படியா, கதை சுவாரஸ்யமா இருக்கும் போல தோணுதே. சரி. சொல்லுங்க.
கிரேஸி மைந்தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கதையை சொல்ல ஆரம்பிக்கறார்.
" தில்லிலே பஞ்சாபகேசன் னு ஒரு தமிழர் அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பான மோதிபாக்கில் ஒரு வீட்டில குடியிருந்தார். அவர் தில்லி செக்ரடேரியத்தில ஒரு அதிகாரி. அவருக்கு ஒரே பையன் ஒரே பொண்ணு ஒரே மனைவி".
தயாரிப்பாளர் குறுக்கிட்டு: ஒரே மனைவிக்காரர்னா அவர் பெயர் பஞ்சாப ராமன்னுல இருக்கணும்.
கிரேஸி மைந்தன்: பஞ்சாப கேசன் பெயர் தான் கதையோட ஒத்துப் போகிறது. அதை பின்னால பார்ப்பீங்க.
" இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் அன்று தில்லியில் ஒரு கலவரம் வெடிக்கிறது. கலவரக்காரர்கள் சர்தார்ஜிகளை தாக்கினார்கள் அன்று. அனறயை தினம் பஞ்சாப கேசன் வீட்டுக் கதவு பட பட வென்று தட்டப் படுகிறது".
பங்கஜம் (பஞசாப கேசனின் ஒரே மனைவி): ஏன்னா யாரோ வாசல் கதவைத் தட்டறாளே. சித்தப் பாருங்கோ. நான் இங்கே சமையல் கட்டில கை வேலையா இருக்கேன்.
பஞ்சாப கேசன் வேண்டா வெறுப்பாக சென்று கதவைத் திறக்க அவரைத் தள்ளிக் கொண்டு ஒரு தாடிக்கார இளைஞன் விட்டிற்குள் நுழைகிறான்.
பஞசாபகேசன்(கோபமாக): ஏய் யார் நீ? எதுக்காக இப்படி அவசரமா அத்து மீறி நுழைஞ்சே?
தாடிக்கார இளைஞன் தமிழ் புரியாமல் முழித்து விட்டு: " மே ஏக் சர்தார்ஜி சோக்ரா முஜே குச் லோக் மார்னேக் கேலியே பீச்சாக் கர் ரஹே ஹைன். ஆப் ஹி முஜே பசா சக்தே ஹைன் ( நான் ஒரு சர்தார்ஜி பையன். என்னைக் கொல்வதற்கு சிலர் என்னைத் துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து நீங்கள் தான் என்னைக் காப்பாத்தணும்).
பஞ்சாப கேசன்(தனக்கு தெரிந்த அரை குறை இந்தியில்): தும் சர்தார்ஜி கஹான் தலைப்பா? (நீ ஒரு சர்தார்ஜிங்கறே. எங்கே உன்னோட தலைப்பா?)
சர்தார்ஜி பையன்: மேரா பகடி? மே உஸ் கோ பேக் தியா தாக்கி ஓ லோக் முஜே பகசான் சகே (என்னோட தலைப்பாவா? நான் அதை தூர எறிந்து விட்டேன் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க).
இவ்வாறு சொல்லி விட்டு அவன் பக்கத்து அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொள்ள உள்ளிருந்து வீல் என்ற அலறல் சத்தம் கேட்கிறது.
பஞ்சாப கேசன்: பங்கஜம் உடனே இங்கே வா. இந்த பையன் நம்ம கமலாவோட அறைக்குள்ளே புகுந்து கலாட்டா பண்றான்.
பங்கஜம்: ஏன் இப்படி சத்தம் போடறீங்க? அந்த பையன் பாவம். அவன் உயிருக்கு பயந்து இங்கே வந்து ஒளிஞ்சுருக்கான். நீங்க சும்மா இருங்கோ.
பஞ்சாப கேசன்: எனக்கு என்ன பயம்னா இந்த இதுவும் அதுவும் பக்கத்தில இருந்தா ஆபத்தாச்சே.
பங்கஜம்: என்னது இதுவும் அதுவும்? ஓ பஞ்சும் நெருப்புமா? ஒரு பையனும் ஒரு பெண்ணும் பக்கத்தில இருந்தா உடனே அந்த உவமைக்கு தாவறேளே? நம்ம பொண்ணு நெருப்பு மாதிரி. அந்த பையனை பஞ்சா ஊதிடுவா.
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது மூடிய அறையிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்கிறது. பின் ஒரு பாடல் ஒலிக்கிறது.
கிரேஸி மைந்தன் தயாரிப்பாளரிடம்: இந்த இடத்துக்கன்னே ஒரு பாட்டு வச்சுருக்கேன். கேக்கறீங்களா? (பாடுகிறார்)
அந்த யமுனைக் கரையோரம்
ஒரு அழகைக் கண்டேனே
அவள் கூந்தல் விரிய விரிய
சௌரி கண்டேனே
பல்லே பல்லே பல்ல பல்ல பல்லே
ஓஹோ பல்லே பல்லே பல்ல பல்ல பல்லே
தயாரிப்பாளர்: சர்தாரஜிப் பையன் எப்படி தமிழ்ல பாடறான்?
கிரேஸி மைந்தன்: ஆக்சுவலா இந்த பாட்டு அந்த பொண்ணு கனவில வருகிறது. கனவில தான் எதுவும் சாத்தியமாச்சே. சென்னையில இருக்கிற ஹீரோ ஹீரோயின் கனவு ஸீன்ல ஸ்விட்ஜர்லாந்துக்கு போய் பாடலையா?. (கதையை தொடர்கிறார்)
பஞ்சாப கேசனும் அவரது மனைவியும் மூடிய அறைக்குள் சர்தார்ஜி பையனும் அவர்களது ஒரே பொண்ணும் என்ன பண்ணிக்கிட்டிருக்காங்க என்று பதை பதைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் வீட்டுக் கதவு மீண்டும் பலமாகத் தட்டப் படுகிறது.
தொடரும்
டைரகடர்: நானும் அதையே விருமபறேன். ஆனா கதைக்கு எங்கே போறது?
உதவியாளர்: சார் எனக்குத் தெரிஞ்ச நகைச்சுவை எழுத்தாளர் ஒருத்தர் இருக்காரு. அவர் பெயர் கிரேஸி மைந்தன். நம்ம கிரேஸி மோகனை மாதிரியே எழுதறதா நினைச்சுக்கிட்டு அவரே தன்னை கிரேஸி மைந்தன்னு சொல்லிக்கறாரு. நான் வேணா அவரைக் கூப்பிடட்டா?
தயாரிப்பாளர்: கூப்பிடுங்க. கதை நல்லா இருந்தா சரி.
உதவியாளர் தனது செல் போனில் அவரைக் கூப்பிட கிரேஸி மைந்தன் அங்கு வருகிறார்.
கிரேஸி மைந்தன்: ஹி ஹி ஹி வணக்கம். ஹி ஹி ஹி என்னைக் கூப்பிட்டீங்களாமே? ஹி ஹி ஹி எதுக்கு?
தயாரிப்பாளர் (எரிச்சலுடன்): நீங்க ஒரு நகைச்சுவை எழுத்தாளர் எனபதால் வார்த்தைக்கு வார்த்தை இப்படி ஹி ஹி னு சிரிக்கறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா? நாங்க ஒரு முழு நீள நகைச் சுவைப் படம் எடுக்கலாம்னு இருக்கோம். அதுக்கு ஏத்த மாதிரி கதை எதுவும் வச்சுருக்கீங்களா?
கிரேஸி மைந்தன்: ஓ வச்சிருக்கேனே. கதையின் தலைப்பு தில்லி.
தயாரிப்பாளர்: நாங்க தமிழ் படம் எடுக்கறோம். நீங்க சொல்ற தலைப்பை பார்த்தா அது ஒரு ஹிந்தி படம் போல இருக்கே?
கிரேஸி மைந்தன்: மணி ரத்னம் மட்டும் பம்பாய்னு தலைப்பு வைச்சு தமிழ் படம் எடுக்கலையா? என்னோட கதையும் அதே மாதிரி தான். மணி ரத்னம் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கப்புறம் பம்பாயில் நடந்த கலவரங்களை வைச்சு படம் எடுத்தாரு. என்னோட கதை இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதற்கப்புறம் தில்லியில் நடந்த கலவரத்தை வச்சு எழுதப்பட்டது. மணி ரத்னம் சீரியஸா கதை சென்னாரு. நான் நகைச்சுவையா கதை சொல்றேன்.
டைரக்டர்: ஓ அப்படியா, கதை சுவாரஸ்யமா இருக்கும் போல தோணுதே. சரி. சொல்லுங்க.
கிரேஸி மைந்தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கதையை சொல்ல ஆரம்பிக்கறார்.
" தில்லிலே பஞ்சாபகேசன் னு ஒரு தமிழர் அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பான மோதிபாக்கில் ஒரு வீட்டில குடியிருந்தார். அவர் தில்லி செக்ரடேரியத்தில ஒரு அதிகாரி. அவருக்கு ஒரே பையன் ஒரே பொண்ணு ஒரே மனைவி".
தயாரிப்பாளர் குறுக்கிட்டு: ஒரே மனைவிக்காரர்னா அவர் பெயர் பஞ்சாப ராமன்னுல இருக்கணும்.
கிரேஸி மைந்தன்: பஞ்சாப கேசன் பெயர் தான் கதையோட ஒத்துப் போகிறது. அதை பின்னால பார்ப்பீங்க.
" இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் அன்று தில்லியில் ஒரு கலவரம் வெடிக்கிறது. கலவரக்காரர்கள் சர்தார்ஜிகளை தாக்கினார்கள் அன்று. அனறயை தினம் பஞ்சாப கேசன் வீட்டுக் கதவு பட பட வென்று தட்டப் படுகிறது".
பங்கஜம் (பஞசாப கேசனின் ஒரே மனைவி): ஏன்னா யாரோ வாசல் கதவைத் தட்டறாளே. சித்தப் பாருங்கோ. நான் இங்கே சமையல் கட்டில கை வேலையா இருக்கேன்.
பஞ்சாப கேசன் வேண்டா வெறுப்பாக சென்று கதவைத் திறக்க அவரைத் தள்ளிக் கொண்டு ஒரு தாடிக்கார இளைஞன் விட்டிற்குள் நுழைகிறான்.
பஞசாபகேசன்(கோபமாக): ஏய் யார் நீ? எதுக்காக இப்படி அவசரமா அத்து மீறி நுழைஞ்சே?
தாடிக்கார இளைஞன் தமிழ் புரியாமல் முழித்து விட்டு: " மே ஏக் சர்தார்ஜி சோக்ரா முஜே குச் லோக் மார்னேக் கேலியே பீச்சாக் கர் ரஹே ஹைன். ஆப் ஹி முஜே பசா சக்தே ஹைன் ( நான் ஒரு சர்தார்ஜி பையன். என்னைக் கொல்வதற்கு சிலர் என்னைத் துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து நீங்கள் தான் என்னைக் காப்பாத்தணும்).
பஞ்சாப கேசன்(தனக்கு தெரிந்த அரை குறை இந்தியில்): தும் சர்தார்ஜி கஹான் தலைப்பா? (நீ ஒரு சர்தார்ஜிங்கறே. எங்கே உன்னோட தலைப்பா?)
சர்தார்ஜி பையன்: மேரா பகடி? மே உஸ் கோ பேக் தியா தாக்கி ஓ லோக் முஜே பகசான் சகே (என்னோட தலைப்பாவா? நான் அதை தூர எறிந்து விட்டேன் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க).
இவ்வாறு சொல்லி விட்டு அவன் பக்கத்து அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொள்ள உள்ளிருந்து வீல் என்ற அலறல் சத்தம் கேட்கிறது.
பஞ்சாப கேசன்: பங்கஜம் உடனே இங்கே வா. இந்த பையன் நம்ம கமலாவோட அறைக்குள்ளே புகுந்து கலாட்டா பண்றான்.
பங்கஜம்: ஏன் இப்படி சத்தம் போடறீங்க? அந்த பையன் பாவம். அவன் உயிருக்கு பயந்து இங்கே வந்து ஒளிஞ்சுருக்கான். நீங்க சும்மா இருங்கோ.
பஞ்சாப கேசன்: எனக்கு என்ன பயம்னா இந்த இதுவும் அதுவும் பக்கத்தில இருந்தா ஆபத்தாச்சே.
பங்கஜம்: என்னது இதுவும் அதுவும்? ஓ பஞ்சும் நெருப்புமா? ஒரு பையனும் ஒரு பெண்ணும் பக்கத்தில இருந்தா உடனே அந்த உவமைக்கு தாவறேளே? நம்ம பொண்ணு நெருப்பு மாதிரி. அந்த பையனை பஞ்சா ஊதிடுவா.
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது மூடிய அறையிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்கிறது. பின் ஒரு பாடல் ஒலிக்கிறது.
கிரேஸி மைந்தன் தயாரிப்பாளரிடம்: இந்த இடத்துக்கன்னே ஒரு பாட்டு வச்சுருக்கேன். கேக்கறீங்களா? (பாடுகிறார்)
அந்த யமுனைக் கரையோரம்
ஒரு அழகைக் கண்டேனே
அவள் கூந்தல் விரிய விரிய
சௌரி கண்டேனே
பல்லே பல்லே பல்ல பல்ல பல்லே
ஓஹோ பல்லே பல்லே பல்ல பல்ல பல்லே
தயாரிப்பாளர்: சர்தாரஜிப் பையன் எப்படி தமிழ்ல பாடறான்?
கிரேஸி மைந்தன்: ஆக்சுவலா இந்த பாட்டு அந்த பொண்ணு கனவில வருகிறது. கனவில தான் எதுவும் சாத்தியமாச்சே. சென்னையில இருக்கிற ஹீரோ ஹீரோயின் கனவு ஸீன்ல ஸ்விட்ஜர்லாந்துக்கு போய் பாடலையா?. (கதையை தொடர்கிறார்)
பஞ்சாப கேசனும் அவரது மனைவியும் மூடிய அறைக்குள் சர்தார்ஜி பையனும் அவர்களது ஒரே பொண்ணும் என்ன பண்ணிக்கிட்டிருக்காங்க என்று பதை பதைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் வீட்டுக் கதவு மீண்டும் பலமாகத் தட்டப் படுகிறது.
தொடரும்