கீதம்
10-08-2009, 01:27 AM
பச்சிளம் குழந்தையாய் அன்று,
பாலர் பள்ளியில் விட்டுவிட்டு,
வீட்டுக்குக் கிளம்பிய வேளையிலே,
'அம்மா, போகாதே!' என்று
அழுது புரண்ட மகனை
அழகாய் சமாளிக்க,
அவளுக்குத் தோன்றியது,
அருமையான உபாயம்.
'போகமாட்டேன், கண்ணே!' என்று
பொய்சத்தியம் செய்தவள்,
வகுப்பு முடித்து வந்தவனிடம்,
'காலை முதல் மாலைவரை
காத்திருந்தேன் மரத்தடியில்.
கண்மணி, என்னை நம்பு!' என்றாள்.
கலக்கமின்றி நம்பினான் அவன்.
நம்பிக்கையினூடே காலம் விரைந்தது.
இன்றோ,
கலங்கி நிற்கிறாள், அவள்.
‘திரையரங்கில் திரிகிறான்
உன் திருப்புதல்வன்' என்றே
அறிந்தவர் தகவல் சொல்ல,
அதிர்ந்தவள் விசாரணை செய்ய,
அலட்டலின்றி சொல்கிறான்,
'காலை முதல் மாலை வரை
கல்லூரியில்தான் இருந்தேன்,
அம்மா, என்னை நம்பு!' என்று.
இப்போது அவள் முறை.
நம்புவதா, கூடாதா என்று
புரியாமல் தவிக்கிறாள்.
பாலர் பள்ளியில் விட்டுவிட்டு,
வீட்டுக்குக் கிளம்பிய வேளையிலே,
'அம்மா, போகாதே!' என்று
அழுது புரண்ட மகனை
அழகாய் சமாளிக்க,
அவளுக்குத் தோன்றியது,
அருமையான உபாயம்.
'போகமாட்டேன், கண்ணே!' என்று
பொய்சத்தியம் செய்தவள்,
வகுப்பு முடித்து வந்தவனிடம்,
'காலை முதல் மாலைவரை
காத்திருந்தேன் மரத்தடியில்.
கண்மணி, என்னை நம்பு!' என்றாள்.
கலக்கமின்றி நம்பினான் அவன்.
நம்பிக்கையினூடே காலம் விரைந்தது.
இன்றோ,
கலங்கி நிற்கிறாள், அவள்.
‘திரையரங்கில் திரிகிறான்
உன் திருப்புதல்வன்' என்றே
அறிந்தவர் தகவல் சொல்ல,
அதிர்ந்தவள் விசாரணை செய்ய,
அலட்டலின்றி சொல்கிறான்,
'காலை முதல் மாலை வரை
கல்லூரியில்தான் இருந்தேன்,
அம்மா, என்னை நம்பு!' என்று.
இப்போது அவள் முறை.
நம்புவதா, கூடாதா என்று
புரியாமல் தவிக்கிறாள்.