அருள்
09-08-2009, 06:47 PM
நெடுந்தூரப் பயணம்
இடையில் உனக்கேது களைப்பு?
வழியெங்கும் உனக்குக் காட்சி.
தடைகள் வரும்போது தாண்டிக் கடக்கிறாய்.
பள்ளத்தில் விழும்போதோ பாய்ந்தெழுகிறாய்.
கார்முகில் உன்னை நனைத்தாலும்
சூரியன் உன்னைச் சுட்டாலும் - எதுவுமே
நடவாததுபோல் சென்று - உனது
இலட்சிய நோக்கான
சமுத்திரத்தை அடைந்து,
வெற்றி வாகை சூடிக் கொள்கிறாய்.
நதியே!
நீ ஒரு வழிகாட்டி
உன்னைப் புரிந்து கொள்பவர்களுக்கோ
நீ அறிவுறை கூறும் மூதாட்டி.
நன்றி - தமிழ் முரசு
இடையில் உனக்கேது களைப்பு?
வழியெங்கும் உனக்குக் காட்சி.
தடைகள் வரும்போது தாண்டிக் கடக்கிறாய்.
பள்ளத்தில் விழும்போதோ பாய்ந்தெழுகிறாய்.
கார்முகில் உன்னை நனைத்தாலும்
சூரியன் உன்னைச் சுட்டாலும் - எதுவுமே
நடவாததுபோல் சென்று - உனது
இலட்சிய நோக்கான
சமுத்திரத்தை அடைந்து,
வெற்றி வாகை சூடிக் கொள்கிறாய்.
நதியே!
நீ ஒரு வழிகாட்டி
உன்னைப் புரிந்து கொள்பவர்களுக்கோ
நீ அறிவுறை கூறும் மூதாட்டி.
நன்றி - தமிழ் முரசு