ரங்கராஜன்
08-08-2009, 05:04 PM
வித்தியாசமான ஊடகத்துறை
சேனலில் சேர்ந்து இன்றுடன் பல நாட்கள் ஆகிவிட்டது, இன்று வேலை முடித்து சீக்கிரம் வீட்டிற்கு வந்து விட்டேன். என் தாய் மன்றத்தை பார்க்க, தினமும் இரவு எத்தனை மணி ஆனாலும் மன்றத்தை ஒரு
பார்வையாவது பார்த்துவிட்டு தான் படுப்பேன். இன்று எதோ ஒரு மூடில் எழுத அமர்ந்து விட்டேன், அமர்ந்த பின் தான் எதை பற்றி எழுதுவது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. தொடங்கியாச்சு அதனால்
எதாவது சொல்லி விடுகிறேன். ஆனால் சொல்ல பல விஷயங்கள் இருக்கிறது, ஆனால் என் வாய் கட்டப்பட்டு இருக்கிறது, சேனலில் சேர்ந்ததும் எங்களை பார்த்து அவர்கள் சொன்ன முதல் வார்த்தை சேனலுக்கு சொந்தமான எந்த செய்திகளும் வெளியில் கசியவிடக்கூடாது என்பது தான், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். இதற்கு பேசாமல் அவர்கள் என் நாக்கை அறுத்து இருக்கலாம், ஹா ஹா பல சுவாரஸ்யமான விஷயங்களை மனம் சொல்ல துடித்தாலும், இந்த ஒப்பந்தம் என்னை தடுக்கிறது. அதனால் பட்டும் படாமலும் சில விஷயங்களை சொல்கிறேன்.
இந்த துறையை ஏன் இத்தனை நாள் நான் கவனிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன், எனக்கு ஏற்ற தொழில் இது, ஏன் என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு ஏற்ற தொழில் இது. வேற வேலையில் இருக்கும் பொழுது வெளி விஷயங்களை பற்றி தெரிந்துக் கொள்ள தனியாக கொஞ்ச நேரம் செலவு செய்யவேண்டும், ஆனால் இதுவே தொழிலாக போனதால் எனக்கு இந்த வேலை ரொம்ப பிடித்து இருக்கிறது. நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் இருக்கிறேன். நகர செய்திகள் முதல் உலக செய்திகள் வரை விரல் நுனியில் வைத்து இருக்கவேண்டிய வேலை என்பதால் சவாலாக இருக்கிறது, (என்ன,... ஞாபக சக்தி தான் இல்லை என்னிடம்). என்னுடன் பணிபுரிகிறவர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் குணாதிசியம் உடையவர்களாக இருக்கிறார்கள் ஆனால் உலக அறிவில் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதாக இருக்கிறார்கள்.
தினமும் 11 தினசரிகளை படிக்க சொல்கிறார்கள், படித்து முடிக்கவே மாலை ஆகிவிடுகிறது, ஒரு முறை மாலை நேரத்தில் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது
“இந்நேரம் செய்தியே மாறி இருக்கும் அதை ஏன் இவ்வளவு சீரியஸாக படிக்கிறாய்” என்று என்னை பார்த்து சிரிக்கிறார் நியூஸ் டிப்பார்ட்மேண்ட் chief. அவரை பார்த்து அசடு வழிந்தபடி பேப்பரை மடித்து வைப்பேன். சேர்ந்த இரண்டாவது நாள் ஒரு கார் ஒரு காமிராமேன் கொடுத்து போய் ஒரு ஸ்டோரி எடுத்துக் கொண்டு வா என்று அனுப்பிவிட்டார்கள், எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. முகம் எல்லாம் வியர்த்து விட்டது, காமிராமேனை பார்த்தேன்
“எங்க சார் போகனும்” என்று என்னை பார்த்துக் கொண்டு நின்றார்கள் டிரைவரும், காமிராமேனும். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, மறுபடியும் என் பாஸிடம் சென்று என்ன எடுக்க வேண்டும் என்று கேட்டேன், இது டிரைனிங் தானே எதாவது எடுத்துக் கொண்டு வா என்றார். ரூமை விட்டு வெளியே வந்தேன், இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.
நான் எங்கப்போவேன்,....... யாரை பேட்டி எடுப்பேன்,........ எதைப்பற்றி பேட்டி எடுப்பேன்,....... ஒரு எழவு புரியவில்லை, ஒழுங்கா எனக்கு தெரிந்த வேலையையே பார்த்து இருக்கலாம். இந்த லீலுமாவை முதலில் போய் வெட்டனும் அவ தான் நிறைய உசுப்பேத்தி விட்டாள், இது உனக்கு ஏத்த தொழில் இதில் நீ கிழித்து விடுவாய் என்று சொல்லியே இந்த வேலையில் என்னை சேரவைத்தாள். இப்ப யோசித்து என்ன பிரோஜனம், சரி எதாவதை எடுப்போம் என்று நினைத்து காரை அங்கையே விட்டுவிட்டு வாக்-ஸ்பாப் (ஒரே விஷயத்தை பற்றி பல மக்களிடம் கருத்து கேட்பது) மாதிரி எதாவது எடுக்கலாம் என்று நினைத்து, காமிராமேனுடன் பக்கத்து தெருவுக்கு நடந்தே சென்றேன்.
நான் பார்த்த முதல் வேலை காமிராவின் டிரைப்பாடை தூக்கியது (கெளரவமாக தான் இருந்தது), என்ன தலைப்பை பற்றி கேட்கலாம் என்று ஒரே குழப்பம். சரி ஒரு தலைப்பு யோசித்தேன், கூட்ட நெரிசலான இடத்தை நோக்கி சென்றோம். அதற்கு முன் ஒரு நிழலில் காமிராமேன் எனக்கு சில பாடங்களை எடுத்தார்.
காமிராமேன் ஆரம்பித்தார் “சார் இதுக்கு முன்னாடி எந்த டிவியில் இருந்தீங்க”
“இல்லங்க புதுசு”
“புதுசாஅ........., எந்த காலேஜ்ல படிச்ச”
“பொறியியல் கல்லூரியில் படிச்சேன்”
“கிழிச்சது போ”
“நீ ஜர்னலிஸ்டு இல்லையா”
“இல்லை” என்று தலை ஆட்டினேன்.
“சரி விடு நான் கத்து தரேன் பயப்படாதே, தம் அடிப்பீயா”
“ம்ம்ம்ம்”
“இதுக்கு மட்டுமாவது ம்ம்ம் சொன்னீயே” இருவரும் சிரித்தோம்.
பிறகு எப்படி பேசவேண்டும், மைக்கை எப்படி பிடிக்கவேண்டும், எவ்வளவு தூரத்தில் பிடிக்கவேண்டும், எப்படி ஆரம்பிக்க வேண்டும், என்று சில விஷயங்களை ஐந்து நொடியில் வேகமாக சொல்லி முடித்தார், ஒரு எழவு புரியவில்லை. கூட்ட நெரிசலான இடங்களில் வேண்டாம் ஒவ்வொரு மக்களா தனியா கூப்பிட்டு பேட்டி எடுக்கலாம் என்று கூறினேன். ஏன் என்றார் காமிராமேன், வெட்கமா இருக்கு
சார் என்றேன், டேய் உன்ன அவங்க கிட்ட பேச மட்டும் தான் சொன்னாங்க, வேற எதுவும் பண்ண சொல்லலை எதுக்கு வெட்கபடற என்று சிரித்தார். சரி என்று காலையில் பேப்பரில் வந்த செய்திகளை அசைப்போட்டேன் ரயில்வே துறை அமைச்சர் மம்தா அவர்கள் அறிமுகப்படுத்த இருக்கும் சிறப்பு பெண்கள் ரயில் திட்டங்களை பற்றி கேட்கலாம் என்று முடிவு செய்தேன். முதல் முறையாக செய்யப்போகும் வேலை என்பதால் பெண்களை வைத்தே தலைப்பை ஆரம்பிக்கலாம், மங்கலகரமாக இருக்கும் என்று நினைத்தேன். அதுவும் இல்லாமல் ரோட்டில் போகும் பெண்களிடம் தைரியமாக அழைத்து பேசலாம், டிவிக்காரன் இல்லையா????
என்னை தயார் செய்து கொண்டு அந்த கூட்டமான சாலையில் பெண்கள் வருவதற்காக காத்து இருந்தேன், என் நேரம் ஒரு பெண்ணும் காணவில்லை, கொஞ்ச நேரம் கழித்து இஸ்லாமிய மதத்து பெண்கள் முகங்களை மறைத்துக் கொண்டு வந்தார்கள், அவர்களை கேட்கலாம் என்று எண்ணும் பொழுதே, அவர்கள் வேகமாக நடக்க தொடங்கி விட்டனர். தூரத்தில் கல்லூரி பெண்கள் வந்தார்கள், மைக்குடன் நான் நிற்பதை பார்த்து விட்டு அவர்கள் அப்படியே திரும்பி போய் விட்டார்கள். கேமிராமேனை நான் பார்க்க அவர் என்னை பார்த்து
“ஏண்டா கார்பிரேஷனில் நாய் பிடிப்பவன் கையில் சுருக்கு கையிறுடன் நிற்பது போல, மைக்கை வச்சினு நிக்குற. உன்னை பார்த்தாலே பொண்ணுங்க தெரிச்சி ஓடுதுங்க, இப்படி வந்து உக்காரு” என்று சிரித்தார்.
கொஞ்ச நேரம் கழித்து வந்த ஒரு மருமகளையும் மாமியாரையும் மடக்கினேன், விஷயத்தை சொன்னேன், அவர்கள் கேட்ட முதல் கேள்வி
“ஆரு அந்த அம்மா (மம்தாவை)”
“ரயில்வேதுறை அமைச்சர்”
“மந்திரியா?”
“ஆமாம், ரயிலுக்கு எல்லாம் அந்த அம்மா தான் முதலாளி மாதிரி”
“ஓ அப்படியா” என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தாள், அந்த திட்டத்தை அவள் மனதார வரவேற்பதாக சொன்னாள். அப்புறம் சிலரிடம் இதே போல கேட்டு விட்டு வந்தேன். நான் சொல்லவேண்டிய முடிவுரைக்கு 15 முறை ரீடேக் எடுத்தேன், ஒரு வழியாக முடித்து விட்டு ஆபிஸில் போட்டு காண்பித்தேன். எல்லாரும் ஒருமித்த குரலில் காறித்துப்பினார்கள். நிறைய டெக்னிக்கல் மிஸ்டேக் இருந்தது, ஒரு அக்ரிணையை பார்ப்பது போல என்னை பார்த்தார்கள். ரொம்ப அவமானமாக இருந்தது, கோபமாக வந்தது. வெளியே போய் பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்தேன், கோபம் கொஞ்சம் குறைந்தது. இந்த துறையில் கத்துக்க நிறைய விஷயம் இருக்கு. அதனால் இந்த துறை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.
அங்கு இருப்பவர்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமானவர்களாக தான் இருக்கிறார்கள், விக்ரம் அண்ணா மற்றும் மன்ற உறவுகள் சொன்ன அறிவுரைப்படி தான் நடந்துக் கொண்டு வருகிறேன், அவை ரொம்ப உபயோகமாக இருக்கிறது. அங்கு இருப்பவர்கள் எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள், எல்லா துறையிலும் இப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனால் ஊடகத்துறையில் எல்லாரும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறார்கள்.
சில உதாரணங்கள்.
என்னுடன் இருக்கும் சீனியர் ரிப்போர்ட்டருக்கு வயது 39 ஆகிறது, பார்க்க 20 வயது மாதிரி இருக்கிறார். ரொம்ப நெருக்கமாக பழகுகிறார். அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதாம், கல்யாணம் ஆன மாலை அவருடைய மனைவி வேறு ஒருத்தனுடன் ஓடிவிட்டாளாம், சிரித்துக் கொண்டே சொல்கிறார். அதில் இருந்து கல்யாணம் என்றாலே பயமாக இருக்கிறதாம்.
இன்னொருவர் இருக்கிறார், தன் மனைவியுடன் பேசி பல வருடங்கள் ஆகிறதாம், ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் ஆனால் பேச்சுவார்த்தைகள் இல்லையாம், குழந்தையும் இல்லையாம். சண்டைக்கு காரணமாக அவர் சொல்வது அவருடைய மனைவி ஒரு நாயை வளர்க்கிறாராம், அதனுடன் கொஞ்சிக் கொண்டே இருக்கிறாராம், இவருக்கு நாய் என்றாலே அலர்ஜியாம், அதனால் அவர் மனைவியின் பக்கமே போவது இல்லையாம், பல ஆண்டுகளாக.
இன்னொரு பெண் எடிட்டர் இருக்கிறார், தனியாக 14 வயது பெண்ணுடன் இருக்கிறார், அவரிடம் கணவனை பற்றி கேட்டால் பொறிந்து தள்ளிவிடுகிறார், (நான் கேட்கவில்லை, மற்றவர்கள் கேட்கிறார்கள்) விவாகரத்து ஆனவர்.
40 வயதான பிம்மச்சாரி, மற்றும் பத்து வார்த்தை பேசினால் அதில் 9 அவரை பற்றியே பேசிக்கொள்ளும் புரோடக்ஸன் ஹேட், மற்றும் 18 வயதில் திருமணம் செய்துக் கொண்ட காமிராமேன் இன்னும் வித்தியாசமான நபர்கள் இருக்கிறார்கள் அந்த இடத்தில். எல்லார் வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருக்கிறது, ஆனால் அனைவரும் வேலையில் சூப்பராக இருக்கிறார்கள். வித்தியாசமானவர்கள் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் இருப்பார்கள். ஆனால் வித்தியாசமானவர்கள் மட்டுமே இருப்பதாக இருக்கிறது இந்த ஊடகத்துறை,,,,,,,,,,,,,,,,,,, ஏன்????????
சேனலில் சேர்ந்து இன்றுடன் பல நாட்கள் ஆகிவிட்டது, இன்று வேலை முடித்து சீக்கிரம் வீட்டிற்கு வந்து விட்டேன். என் தாய் மன்றத்தை பார்க்க, தினமும் இரவு எத்தனை மணி ஆனாலும் மன்றத்தை ஒரு
பார்வையாவது பார்த்துவிட்டு தான் படுப்பேன். இன்று எதோ ஒரு மூடில் எழுத அமர்ந்து விட்டேன், அமர்ந்த பின் தான் எதை பற்றி எழுதுவது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. தொடங்கியாச்சு அதனால்
எதாவது சொல்லி விடுகிறேன். ஆனால் சொல்ல பல விஷயங்கள் இருக்கிறது, ஆனால் என் வாய் கட்டப்பட்டு இருக்கிறது, சேனலில் சேர்ந்ததும் எங்களை பார்த்து அவர்கள் சொன்ன முதல் வார்த்தை சேனலுக்கு சொந்தமான எந்த செய்திகளும் வெளியில் கசியவிடக்கூடாது என்பது தான், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். இதற்கு பேசாமல் அவர்கள் என் நாக்கை அறுத்து இருக்கலாம், ஹா ஹா பல சுவாரஸ்யமான விஷயங்களை மனம் சொல்ல துடித்தாலும், இந்த ஒப்பந்தம் என்னை தடுக்கிறது. அதனால் பட்டும் படாமலும் சில விஷயங்களை சொல்கிறேன்.
இந்த துறையை ஏன் இத்தனை நாள் நான் கவனிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன், எனக்கு ஏற்ற தொழில் இது, ஏன் என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு ஏற்ற தொழில் இது. வேற வேலையில் இருக்கும் பொழுது வெளி விஷயங்களை பற்றி தெரிந்துக் கொள்ள தனியாக கொஞ்ச நேரம் செலவு செய்யவேண்டும், ஆனால் இதுவே தொழிலாக போனதால் எனக்கு இந்த வேலை ரொம்ப பிடித்து இருக்கிறது. நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் இருக்கிறேன். நகர செய்திகள் முதல் உலக செய்திகள் வரை விரல் நுனியில் வைத்து இருக்கவேண்டிய வேலை என்பதால் சவாலாக இருக்கிறது, (என்ன,... ஞாபக சக்தி தான் இல்லை என்னிடம்). என்னுடன் பணிபுரிகிறவர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் குணாதிசியம் உடையவர்களாக இருக்கிறார்கள் ஆனால் உலக அறிவில் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதாக இருக்கிறார்கள்.
தினமும் 11 தினசரிகளை படிக்க சொல்கிறார்கள், படித்து முடிக்கவே மாலை ஆகிவிடுகிறது, ஒரு முறை மாலை நேரத்தில் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது
“இந்நேரம் செய்தியே மாறி இருக்கும் அதை ஏன் இவ்வளவு சீரியஸாக படிக்கிறாய்” என்று என்னை பார்த்து சிரிக்கிறார் நியூஸ் டிப்பார்ட்மேண்ட் chief. அவரை பார்த்து அசடு வழிந்தபடி பேப்பரை மடித்து வைப்பேன். சேர்ந்த இரண்டாவது நாள் ஒரு கார் ஒரு காமிராமேன் கொடுத்து போய் ஒரு ஸ்டோரி எடுத்துக் கொண்டு வா என்று அனுப்பிவிட்டார்கள், எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. முகம் எல்லாம் வியர்த்து விட்டது, காமிராமேனை பார்த்தேன்
“எங்க சார் போகனும்” என்று என்னை பார்த்துக் கொண்டு நின்றார்கள் டிரைவரும், காமிராமேனும். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, மறுபடியும் என் பாஸிடம் சென்று என்ன எடுக்க வேண்டும் என்று கேட்டேன், இது டிரைனிங் தானே எதாவது எடுத்துக் கொண்டு வா என்றார். ரூமை விட்டு வெளியே வந்தேன், இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.
நான் எங்கப்போவேன்,....... யாரை பேட்டி எடுப்பேன்,........ எதைப்பற்றி பேட்டி எடுப்பேன்,....... ஒரு எழவு புரியவில்லை, ஒழுங்கா எனக்கு தெரிந்த வேலையையே பார்த்து இருக்கலாம். இந்த லீலுமாவை முதலில் போய் வெட்டனும் அவ தான் நிறைய உசுப்பேத்தி விட்டாள், இது உனக்கு ஏத்த தொழில் இதில் நீ கிழித்து விடுவாய் என்று சொல்லியே இந்த வேலையில் என்னை சேரவைத்தாள். இப்ப யோசித்து என்ன பிரோஜனம், சரி எதாவதை எடுப்போம் என்று நினைத்து காரை அங்கையே விட்டுவிட்டு வாக்-ஸ்பாப் (ஒரே விஷயத்தை பற்றி பல மக்களிடம் கருத்து கேட்பது) மாதிரி எதாவது எடுக்கலாம் என்று நினைத்து, காமிராமேனுடன் பக்கத்து தெருவுக்கு நடந்தே சென்றேன்.
நான் பார்த்த முதல் வேலை காமிராவின் டிரைப்பாடை தூக்கியது (கெளரவமாக தான் இருந்தது), என்ன தலைப்பை பற்றி கேட்கலாம் என்று ஒரே குழப்பம். சரி ஒரு தலைப்பு யோசித்தேன், கூட்ட நெரிசலான இடத்தை நோக்கி சென்றோம். அதற்கு முன் ஒரு நிழலில் காமிராமேன் எனக்கு சில பாடங்களை எடுத்தார்.
காமிராமேன் ஆரம்பித்தார் “சார் இதுக்கு முன்னாடி எந்த டிவியில் இருந்தீங்க”
“இல்லங்க புதுசு”
“புதுசாஅ........., எந்த காலேஜ்ல படிச்ச”
“பொறியியல் கல்லூரியில் படிச்சேன்”
“கிழிச்சது போ”
“நீ ஜர்னலிஸ்டு இல்லையா”
“இல்லை” என்று தலை ஆட்டினேன்.
“சரி விடு நான் கத்து தரேன் பயப்படாதே, தம் அடிப்பீயா”
“ம்ம்ம்ம்”
“இதுக்கு மட்டுமாவது ம்ம்ம் சொன்னீயே” இருவரும் சிரித்தோம்.
பிறகு எப்படி பேசவேண்டும், மைக்கை எப்படி பிடிக்கவேண்டும், எவ்வளவு தூரத்தில் பிடிக்கவேண்டும், எப்படி ஆரம்பிக்க வேண்டும், என்று சில விஷயங்களை ஐந்து நொடியில் வேகமாக சொல்லி முடித்தார், ஒரு எழவு புரியவில்லை. கூட்ட நெரிசலான இடங்களில் வேண்டாம் ஒவ்வொரு மக்களா தனியா கூப்பிட்டு பேட்டி எடுக்கலாம் என்று கூறினேன். ஏன் என்றார் காமிராமேன், வெட்கமா இருக்கு
சார் என்றேன், டேய் உன்ன அவங்க கிட்ட பேச மட்டும் தான் சொன்னாங்க, வேற எதுவும் பண்ண சொல்லலை எதுக்கு வெட்கபடற என்று சிரித்தார். சரி என்று காலையில் பேப்பரில் வந்த செய்திகளை அசைப்போட்டேன் ரயில்வே துறை அமைச்சர் மம்தா அவர்கள் அறிமுகப்படுத்த இருக்கும் சிறப்பு பெண்கள் ரயில் திட்டங்களை பற்றி கேட்கலாம் என்று முடிவு செய்தேன். முதல் முறையாக செய்யப்போகும் வேலை என்பதால் பெண்களை வைத்தே தலைப்பை ஆரம்பிக்கலாம், மங்கலகரமாக இருக்கும் என்று நினைத்தேன். அதுவும் இல்லாமல் ரோட்டில் போகும் பெண்களிடம் தைரியமாக அழைத்து பேசலாம், டிவிக்காரன் இல்லையா????
என்னை தயார் செய்து கொண்டு அந்த கூட்டமான சாலையில் பெண்கள் வருவதற்காக காத்து இருந்தேன், என் நேரம் ஒரு பெண்ணும் காணவில்லை, கொஞ்ச நேரம் கழித்து இஸ்லாமிய மதத்து பெண்கள் முகங்களை மறைத்துக் கொண்டு வந்தார்கள், அவர்களை கேட்கலாம் என்று எண்ணும் பொழுதே, அவர்கள் வேகமாக நடக்க தொடங்கி விட்டனர். தூரத்தில் கல்லூரி பெண்கள் வந்தார்கள், மைக்குடன் நான் நிற்பதை பார்த்து விட்டு அவர்கள் அப்படியே திரும்பி போய் விட்டார்கள். கேமிராமேனை நான் பார்க்க அவர் என்னை பார்த்து
“ஏண்டா கார்பிரேஷனில் நாய் பிடிப்பவன் கையில் சுருக்கு கையிறுடன் நிற்பது போல, மைக்கை வச்சினு நிக்குற. உன்னை பார்த்தாலே பொண்ணுங்க தெரிச்சி ஓடுதுங்க, இப்படி வந்து உக்காரு” என்று சிரித்தார்.
கொஞ்ச நேரம் கழித்து வந்த ஒரு மருமகளையும் மாமியாரையும் மடக்கினேன், விஷயத்தை சொன்னேன், அவர்கள் கேட்ட முதல் கேள்வி
“ஆரு அந்த அம்மா (மம்தாவை)”
“ரயில்வேதுறை அமைச்சர்”
“மந்திரியா?”
“ஆமாம், ரயிலுக்கு எல்லாம் அந்த அம்மா தான் முதலாளி மாதிரி”
“ஓ அப்படியா” என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தாள், அந்த திட்டத்தை அவள் மனதார வரவேற்பதாக சொன்னாள். அப்புறம் சிலரிடம் இதே போல கேட்டு விட்டு வந்தேன். நான் சொல்லவேண்டிய முடிவுரைக்கு 15 முறை ரீடேக் எடுத்தேன், ஒரு வழியாக முடித்து விட்டு ஆபிஸில் போட்டு காண்பித்தேன். எல்லாரும் ஒருமித்த குரலில் காறித்துப்பினார்கள். நிறைய டெக்னிக்கல் மிஸ்டேக் இருந்தது, ஒரு அக்ரிணையை பார்ப்பது போல என்னை பார்த்தார்கள். ரொம்ப அவமானமாக இருந்தது, கோபமாக வந்தது. வெளியே போய் பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்தேன், கோபம் கொஞ்சம் குறைந்தது. இந்த துறையில் கத்துக்க நிறைய விஷயம் இருக்கு. அதனால் இந்த துறை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.
அங்கு இருப்பவர்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமானவர்களாக தான் இருக்கிறார்கள், விக்ரம் அண்ணா மற்றும் மன்ற உறவுகள் சொன்ன அறிவுரைப்படி தான் நடந்துக் கொண்டு வருகிறேன், அவை ரொம்ப உபயோகமாக இருக்கிறது. அங்கு இருப்பவர்கள் எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள், எல்லா துறையிலும் இப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனால் ஊடகத்துறையில் எல்லாரும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறார்கள்.
சில உதாரணங்கள்.
என்னுடன் இருக்கும் சீனியர் ரிப்போர்ட்டருக்கு வயது 39 ஆகிறது, பார்க்க 20 வயது மாதிரி இருக்கிறார். ரொம்ப நெருக்கமாக பழகுகிறார். அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதாம், கல்யாணம் ஆன மாலை அவருடைய மனைவி வேறு ஒருத்தனுடன் ஓடிவிட்டாளாம், சிரித்துக் கொண்டே சொல்கிறார். அதில் இருந்து கல்யாணம் என்றாலே பயமாக இருக்கிறதாம்.
இன்னொருவர் இருக்கிறார், தன் மனைவியுடன் பேசி பல வருடங்கள் ஆகிறதாம், ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் ஆனால் பேச்சுவார்த்தைகள் இல்லையாம், குழந்தையும் இல்லையாம். சண்டைக்கு காரணமாக அவர் சொல்வது அவருடைய மனைவி ஒரு நாயை வளர்க்கிறாராம், அதனுடன் கொஞ்சிக் கொண்டே இருக்கிறாராம், இவருக்கு நாய் என்றாலே அலர்ஜியாம், அதனால் அவர் மனைவியின் பக்கமே போவது இல்லையாம், பல ஆண்டுகளாக.
இன்னொரு பெண் எடிட்டர் இருக்கிறார், தனியாக 14 வயது பெண்ணுடன் இருக்கிறார், அவரிடம் கணவனை பற்றி கேட்டால் பொறிந்து தள்ளிவிடுகிறார், (நான் கேட்கவில்லை, மற்றவர்கள் கேட்கிறார்கள்) விவாகரத்து ஆனவர்.
40 வயதான பிம்மச்சாரி, மற்றும் பத்து வார்த்தை பேசினால் அதில் 9 அவரை பற்றியே பேசிக்கொள்ளும் புரோடக்ஸன் ஹேட், மற்றும் 18 வயதில் திருமணம் செய்துக் கொண்ட காமிராமேன் இன்னும் வித்தியாசமான நபர்கள் இருக்கிறார்கள் அந்த இடத்தில். எல்லார் வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருக்கிறது, ஆனால் அனைவரும் வேலையில் சூப்பராக இருக்கிறார்கள். வித்தியாசமானவர்கள் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் இருப்பார்கள். ஆனால் வித்தியாசமானவர்கள் மட்டுமே இருப்பதாக இருக்கிறது இந்த ஊடகத்துறை,,,,,,,,,,,,,,,,,,, ஏன்????????