அருள்
28-07-2009, 03:08 PM
காதல் கவிதை ஒன்றை
காதலர் தினத்தன்று
எழுதச்சொன்னவளே!
வாழ்நாளே நமக்குத்தானென்று
நானிருக்கும் வேளையிலே
இன்றுமட்டும் எழுதச்சொல்லி
நம் தினத்தை
சுருக்கிவிட்டாயே!
உன் கையசைத்தலை
பரதமாகவும்
வாயசைத்தலை
பாசுரமாகவும் கொண்டவன்
கவிதை சொல்லாமல்
கலங்குவதைக்காண
உன் கயல்கள்
துடிப்பதை நான் அறிவேன்!
என்ன செய்வது?
உன்னுடன் இருக்கும்
மமதையிலேயே
மந்தமாகிப்போய்விட்டேன்.
உனக்கான கவிதையை
சொல்லும் மொழிக்காக
உலகம்முழுதும் தேடுகிறேன்.
கிட்டும் வரை காத்திரு!
அடுத்த யுகம் வரைக்குமாவது!
உன் காதலியாய் பிறந்து
கவிதை கேட்கிறேன் நான்!
பின் குறிப்பு :- அட என்ன எல்லாரும் கவிதை எழுதராங்கலே ஏன் நம்ம எழுத கூடாதுனு முயற்சி செய்தால் நேரமும் பேப்பர் தான் வேஸ்ட். எனவே நான் படித்த கவிதை களை இங்கு தருகிறேன். ஏற்கனவே யாரும் பதிந்திருக்க மாட்டர்கள் என்ற நினைப்பில்.....
நன்றி - சுரேகா-விகடன்
காதலர் தினத்தன்று
எழுதச்சொன்னவளே!
வாழ்நாளே நமக்குத்தானென்று
நானிருக்கும் வேளையிலே
இன்றுமட்டும் எழுதச்சொல்லி
நம் தினத்தை
சுருக்கிவிட்டாயே!
உன் கையசைத்தலை
பரதமாகவும்
வாயசைத்தலை
பாசுரமாகவும் கொண்டவன்
கவிதை சொல்லாமல்
கலங்குவதைக்காண
உன் கயல்கள்
துடிப்பதை நான் அறிவேன்!
என்ன செய்வது?
உன்னுடன் இருக்கும்
மமதையிலேயே
மந்தமாகிப்போய்விட்டேன்.
உனக்கான கவிதையை
சொல்லும் மொழிக்காக
உலகம்முழுதும் தேடுகிறேன்.
கிட்டும் வரை காத்திரு!
அடுத்த யுகம் வரைக்குமாவது!
உன் காதலியாய் பிறந்து
கவிதை கேட்கிறேன் நான்!
பின் குறிப்பு :- அட என்ன எல்லாரும் கவிதை எழுதராங்கலே ஏன் நம்ம எழுத கூடாதுனு முயற்சி செய்தால் நேரமும் பேப்பர் தான் வேஸ்ட். எனவே நான் படித்த கவிதை களை இங்கு தருகிறேன். ஏற்கனவே யாரும் பதிந்திருக்க மாட்டர்கள் என்ற நினைப்பில்.....
நன்றி - சுரேகா-விகடன்