Ravee
25-07-2009, 05:32 PM
பரமன் வைத்த பந்தயம்
அப்பன் விநாயகனும்
அய்யன் முருகனும்
அடியேன் ரவிக்கும்
ஒரு போட்டி
யார் உலகத்தை முதலில்
சுற்றி வருவது என்று
நந்தி ஒன்று இரண்டு சொல்ல
மூவரும் வரிசையில்
விநாயகன் எலியின் மேலே
முருகன் மயிலின் மேலே
நானோ வெறும் காலில்
தோளில் மட்டும்
என் லேப்டாப்
நந்தி சொன்ன மறுகணம்
எலி பாதாளத்தில் பாய்ந்தது
மயில் வானத்தில் பறந்தது
நான் மட்டும் பரமன் காலடியில்
பரமன் கேட்டான்
என்ன ரவி என்ன ஆச்சு
பரமனைப் பார்த்தேன்
சிரித்தேன்
அய்யனே
வாருங்கள் என் அருகில்
வந்தார் நின்றார் அமர்ந்தார்
பரமனின் கண்கள் விரிந்தது
என் மடிகணக்கியை பார்த்து
(மடிகணக்கி அதான் நம்ம லேப்டாப்)
தட்டினேன் எலிப்பொறியை
கைகள் தட்டச்சுப் பலகை
மேலே தாளம் போட்டது
விரிந்தது வெள்ளித் திரையில்
அரட்டை அரங்கம்
வந்தார்கள் நண்பர்கள்
உலகத்தின் எல்லா பக்கம் இருந்தும்
அண்ணா தம்பி அன்பே
என்று ஆயிரம் குரல்கள்
இந்தியாவில் இருந்து கிளம்பி
அரேபியா வழியே
ஐரோப்பா முழுதும் சுற்றி வந்து
அமெரிக்கா போய்
கனடாவில் இளைப்பாறி
மீண்டும் கடல் வழியே
மலேசியா சிங்கப்பூர் போய்
இலங்கை தொட்டு
இந்தியா வந்தேன்.
கண்ணால் கண்டிராத சொந்தங்கள்
இணையத்தின் வழியே இணைந்தார்கள்
எனக்கு இரவு உனக்கு பகலா
நான் சாப்பிட்டேன் நீ சாப்பிட்டாயா
என்ன இத்தனை நாளாய் உன்னைக் காணவில்லை
விழித்து இருந்தவர்கள் விசாரிக்க
இன்னும் பலர் தூங்கிக் கொண்டு இருக்க
சாட்சிக்கு இத்தனை பேர்
இருக்க ஜட்ஜ்மென்டில்
குழப்பம் இல்லை
பரமன் சொன்னார்
நானே பார்த்திருக்க
பத்து நிமிடத்தில்
உலகத்தை சுற்றியது
" ரவியே "
எனவே பழம்
ரவிக்கே
என்று
பரமன் பெருமூச்சி விட்டான்.
அவன் பிள்ளைகள் இரண்டும்
தோற்று போனார்களே என்று
பரமன் தந்த கனியை
உண்டு காத்திருக்கிறேன்
இன்று வரை
கந்தனும் வரவில்லை
கணபதியும் வரவில்லை.
:icon_b: :icon_b: :icon_b:
அப்பன் விநாயகனும்
அய்யன் முருகனும்
அடியேன் ரவிக்கும்
ஒரு போட்டி
யார் உலகத்தை முதலில்
சுற்றி வருவது என்று
நந்தி ஒன்று இரண்டு சொல்ல
மூவரும் வரிசையில்
விநாயகன் எலியின் மேலே
முருகன் மயிலின் மேலே
நானோ வெறும் காலில்
தோளில் மட்டும்
என் லேப்டாப்
நந்தி சொன்ன மறுகணம்
எலி பாதாளத்தில் பாய்ந்தது
மயில் வானத்தில் பறந்தது
நான் மட்டும் பரமன் காலடியில்
பரமன் கேட்டான்
என்ன ரவி என்ன ஆச்சு
பரமனைப் பார்த்தேன்
சிரித்தேன்
அய்யனே
வாருங்கள் என் அருகில்
வந்தார் நின்றார் அமர்ந்தார்
பரமனின் கண்கள் விரிந்தது
என் மடிகணக்கியை பார்த்து
(மடிகணக்கி அதான் நம்ம லேப்டாப்)
தட்டினேன் எலிப்பொறியை
கைகள் தட்டச்சுப் பலகை
மேலே தாளம் போட்டது
விரிந்தது வெள்ளித் திரையில்
அரட்டை அரங்கம்
வந்தார்கள் நண்பர்கள்
உலகத்தின் எல்லா பக்கம் இருந்தும்
அண்ணா தம்பி அன்பே
என்று ஆயிரம் குரல்கள்
இந்தியாவில் இருந்து கிளம்பி
அரேபியா வழியே
ஐரோப்பா முழுதும் சுற்றி வந்து
அமெரிக்கா போய்
கனடாவில் இளைப்பாறி
மீண்டும் கடல் வழியே
மலேசியா சிங்கப்பூர் போய்
இலங்கை தொட்டு
இந்தியா வந்தேன்.
கண்ணால் கண்டிராத சொந்தங்கள்
இணையத்தின் வழியே இணைந்தார்கள்
எனக்கு இரவு உனக்கு பகலா
நான் சாப்பிட்டேன் நீ சாப்பிட்டாயா
என்ன இத்தனை நாளாய் உன்னைக் காணவில்லை
விழித்து இருந்தவர்கள் விசாரிக்க
இன்னும் பலர் தூங்கிக் கொண்டு இருக்க
சாட்சிக்கு இத்தனை பேர்
இருக்க ஜட்ஜ்மென்டில்
குழப்பம் இல்லை
பரமன் சொன்னார்
நானே பார்த்திருக்க
பத்து நிமிடத்தில்
உலகத்தை சுற்றியது
" ரவியே "
எனவே பழம்
ரவிக்கே
என்று
பரமன் பெருமூச்சி விட்டான்.
அவன் பிள்ளைகள் இரண்டும்
தோற்று போனார்களே என்று
பரமன் தந்த கனியை
உண்டு காத்திருக்கிறேன்
இன்று வரை
கந்தனும் வரவில்லை
கணபதியும் வரவில்லை.
:icon_b: :icon_b: :icon_b: