அறிஞர்
24-07-2009, 03:08 PM
மாதக்கணக்கில் மருந்து கொடுத்ததால் 5 மாத குழந்தை 9 கிலோவானது
http://tm.dinakaran.com/2472009/TM_24-07-09_E1_02-04%20CNI.jpg
தாயின் கொழுகொழு ஆசையால் விபரீதம்
சென்னை, ஜூலை 24
சளி, இருமலுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை தொடர்ந்து கொடுத்து வந்ததால் 5 மாத குழந்தை திடீரென உடல் பெருத்து 9 கிலோ அளவுக்கு வளர்ந்தது. கொழுகொழு குழந்தைக்கு ஆசைப்பட்டு தாய் இவ்வாறு செய்ததும் தெரியவந்தது.
அம்பத்தூர் சிவானந்தா நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (28). தனியார் கம்பெனி ஊழியர். மனைவி அனிதா (21). இவர்களுக்கு அபிராமி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் குழந்தையின் எடை திடீரென அதிகரித்தது. நாள் ஆகஆக குண்டாகிக் கொண்டே போனது.
பயந்துபோன பெற்றோர் எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தனர். குழந்தையை டாக்டர் வெங்கடராமன் பரிசோதனை செய்தார். ஸ்டீராய்ட் மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததால் குழந்தையின் எலும்புகள் பலவீனம் அடைந்திருப்பதை கண்டுபிடித்தார். இதுபற்றி பெற்றோரிடம் விசாரித்தார்.
‘குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் சளி, இருமலுடன் வலிப்பும் இருந்தது. 4 நாட்களுக்கு கொடுக்குமாறு ஒரு மருந்தை டாக்டர் எழுதிக் கொடுத்தார். மருந்து கொடுத்த 4 நாளும் குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லை. குழந்தை துருதுருவென்றும் காணப்பட்டது. அந்த மருந்தை தொடர்ந்து கொடுத்தேன். குழந்தை முன்பைவிட கொழுகொழுவென்று வளர்ந்ததால் 4 மாதமாக கொடுத்து வந்தேன். சமீபத்தில் ரொம்ப குண்டாகிவிட்டாள். பயந்துபோய் வந்தோம்Õ என்று தாய் அனிதா கூறினார்.
ஸ்டீராய்டு மருந்து என்பது விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் உட்கொள்ளும் ஊக்க மருந்து. டாக்டர் ஆலோசனையின்றி அளவுக்கு அதிகமாக கொடுத்துள்ளீர்கள். 6 கிலோ இருக்க வேண்டிய குழந்தை 9 கிலோ இருக்கிறது. தொடர்ந்து கொடுத்திருந்தால் குழந்தை உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். டாக்டரை கேட்காமல் எந்த மருந்தும் கொடுக்கக்கூடாது என்று கூறி அவர்களை டாக்டர் அனுப்பிவைத்தார்.
நன்றி-தினகரன்
http://tm.dinakaran.com/2472009/TM_24-07-09_E1_02-04%20CNI.jpg
தாயின் கொழுகொழு ஆசையால் விபரீதம்
சென்னை, ஜூலை 24
சளி, இருமலுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை தொடர்ந்து கொடுத்து வந்ததால் 5 மாத குழந்தை திடீரென உடல் பெருத்து 9 கிலோ அளவுக்கு வளர்ந்தது. கொழுகொழு குழந்தைக்கு ஆசைப்பட்டு தாய் இவ்வாறு செய்ததும் தெரியவந்தது.
அம்பத்தூர் சிவானந்தா நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (28). தனியார் கம்பெனி ஊழியர். மனைவி அனிதா (21). இவர்களுக்கு அபிராமி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் குழந்தையின் எடை திடீரென அதிகரித்தது. நாள் ஆகஆக குண்டாகிக் கொண்டே போனது.
பயந்துபோன பெற்றோர் எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தனர். குழந்தையை டாக்டர் வெங்கடராமன் பரிசோதனை செய்தார். ஸ்டீராய்ட் மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததால் குழந்தையின் எலும்புகள் பலவீனம் அடைந்திருப்பதை கண்டுபிடித்தார். இதுபற்றி பெற்றோரிடம் விசாரித்தார்.
‘குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் சளி, இருமலுடன் வலிப்பும் இருந்தது. 4 நாட்களுக்கு கொடுக்குமாறு ஒரு மருந்தை டாக்டர் எழுதிக் கொடுத்தார். மருந்து கொடுத்த 4 நாளும் குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லை. குழந்தை துருதுருவென்றும் காணப்பட்டது. அந்த மருந்தை தொடர்ந்து கொடுத்தேன். குழந்தை முன்பைவிட கொழுகொழுவென்று வளர்ந்ததால் 4 மாதமாக கொடுத்து வந்தேன். சமீபத்தில் ரொம்ப குண்டாகிவிட்டாள். பயந்துபோய் வந்தோம்Õ என்று தாய் அனிதா கூறினார்.
ஸ்டீராய்டு மருந்து என்பது விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் உட்கொள்ளும் ஊக்க மருந்து. டாக்டர் ஆலோசனையின்றி அளவுக்கு அதிகமாக கொடுத்துள்ளீர்கள். 6 கிலோ இருக்க வேண்டிய குழந்தை 9 கிலோ இருக்கிறது. தொடர்ந்து கொடுத்திருந்தால் குழந்தை உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். டாக்டரை கேட்காமல் எந்த மருந்தும் கொடுக்கக்கூடாது என்று கூறி அவர்களை டாக்டர் அனுப்பிவைத்தார்.
நன்றி-தினகரன்