PDA

View Full Version : உன்னோடு வாழ்ந்தால்..



இன்பக்கவி
24-07-2009, 10:11 AM
http://dl7.glitter-graphics.net/pub/1645/1645327nnglkx7lfc.gif
உன்னோடு வாழ்ந்தால்
அவ் வாழ்க்கை மட்டும் தான் நிஜம்...
வாழ இயலா நிலை...
வாழ துடிக்கும் மனது....
தினமும் வாழ்கிறேன் கனவில்.......

தலையணை மந்திரம்
அறிந்தேன் நான்....
தலையணையாய் நீ
தூங்க முடியாமல் நான்....
என்ன மந்திரம் போட்டாய்........

என் பெயரை
நொடிக்கு ஒரு முறை
நீ அழைக்கிறாய்.....
ஒவ்வொருமுறையும்
செத்து செத்து பிழைக்கிறேன்
உன் குரலின் வசியத்தால்...........

இதயம் கனக்கிறது
உன்னை தாங்க இயலவில்லை
என் இதயத்தால்....

நான் பேசும் வார்த்தைகளை
நீ ரசிப்பாய் என்றாய்
இப்போது வார்த்தைகள் தேடி அலைகிறேன்
வெட்கத்தால்....
மீண்டும் அவ் வார்த்தைகளை
பேச இயலாமல்........

சிவா.ஜி
27-07-2009, 06:39 AM
வாழ நினைத்தும் வாழ இயலா நிலை....கனவுகளில் தாம்பத்யம்...அருகாமை வேண்டி ஆவல்.....கவிதை நாயகியின் வலி உணர்த்தும் வரிகள்.

வாழ்த்துகள் கவிதா.

அமரன்
27-07-2009, 07:45 AM
உங்களது அண்மைக்காலக் கவிதைகளில் ஒரு வித தாக்கமும் ஏக்கமும் இழையோடுகிறது.



என் பெயரை
நொடிக்கு ஒரு முறை
நீ அழைக்கிறாய்.....


இந்த இடத்தில் ஏதோ ஒன்று இதயத்தை இம்சிக்கிறது. வலிகளால் வலிமை பெறும் நிலையை நாயகி எட்டட்டும் கவி.

வாழ்த்துகள்.