PDA

View Full Version : நாளை தீவிரவாதிகள் தாக்க கூடும் ?



Honeytamil
21-07-2009, 05:43 AM
நாளை சுனாமி அல்லது தீவிரவாதிகள் தாக்குதல் ஏற்பட கூடும் என ஜோதிடர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர் . இதையடுத்து இந்தியா , இலங்கை , மாலத்தீவு போன்ற நாடுகளில் சுனாமி ஏற்படுவதாக செய்திகள் மிக வேகமாக பரவி கொண்டிருக்கின்றன .

இந்த சூரிய கிரகணம் 360 ஆண்டுக்கு பின் நடைபெறும் ஒரு முழு சூரிய கிரகணமாகும் . சூரிய கிரகணத்தின் போது பூமி சந்திரன் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும் . சூரியனை சந்திரன் மறித்து கொண்டிருக்கும் போது தான் சூரிய கிரகணம் ஏற்படும் . நாளை காலை 5:52 மணிக்கு தமிழகத்தில் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

சூரிய கிரகணம் ஏற்படும் போது அதை வெறும் கண்களால் பார்க்ககூடாது . அது மட்டுமல்லாது கருப்பு கண்ணாடிகளால் கூட பார்க்க ப்கூடாது . அப்படி பார்க்கும் பட்சத்தில் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும் . சூரிய கிரகணம் ஏற்படும் என்றவுடனே ஜோதிடர்கள் ஆளாளுக்கு தங்கள் ஐப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர் .

முதலில் சுனாமி வரும் என்று ஒரு புரளியை கிளப்பிய ஜோதிடர்கள் பின்னர் விஞ்சானிகள் அதை மறுத்த பின்னர் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க கூடும் . தீவிரவாதிகள் அரசியல் வாதியை கொலை செய்வார்கள் என்றெல்லாம் புரளியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள் .

சூரிய கிரகணத்தின் போது உணவு அருந்த கூடாது என மக்கள் மத்தியில் மூட நம்பிக்கையும் பரவி வருகிறது . இதையடுத்து திராவிடர் கழகத்தின் சார்பாக நாளை திறந்த வெளியில் சூரிய கிரகணத்தின் போது உணவருந்தி உணவிற்கு சூரிய கிரகனதிற்கும் தொடர்பு இல்லை என நிரூபிக்கதயாராகி கொண்டிருக்கின்றனர் .

சூரிய கிரகணத்தின் போது பாதுகாப்பு கண்ணாடி இன்றி சூரியனை பார்ப்பதை தவிருங்கள் மாற்ற படி சுனாமியோ , தீவிரவாதிகள் தாக்குதலோ நடக்க வாய்ப்பில்லை .

நாளை தீவிரவாதிகள் தாக்க கூடும் என்று சொன்ன ஜோதிடர்களால் மும்பையில் தாக்குதல் நடத்திய போது முன் கூட்டி தெரியாமல் போனது ஏனோ ?

தூயவன்
21-07-2009, 06:15 AM
தகவலுக்கு நன்றி தேன் தமிழா...

நூர்
21-07-2009, 06:19 AM
பகிர்வுக்கு நன்றி தேன்.

நேசம்
21-07-2009, 09:00 AM
சூரிய கிரகண் வந்தால் என்ன நடக்கும் என்று மட்டும் ஜோதிடர்களுக்கும் தெரியும் போலிருக்கு....

விக்ரம்
21-07-2009, 09:29 AM
ஜோதிடர்கள் ஒரு ESP வாதிகள். நம்பினால் ஸ்பூனை அவர்கள் உணர்வால் வளைப்பது போன்று தோன்றும், நம்பாவிட்டால் அவர்கள் கழுத்தை நம்ம நெறிப்பது போன்று தோன்றும்.

நம்மெல்லாம் அடுத்தவங்க நம்பிக்கையில மண்ணை வாரி போடுற ஆள் இல்லைப்பா.

பரஞ்சோதி
21-07-2009, 09:41 AM
செய்திக்கு நன்றி.

தங்கள் திட்டத்தை வெளியே சொன்ன ஜோதிடர்களை மட்டுமே ஏன் தீவிரவாதிகள் கொல்லக்கூடாது.

இன்பா
21-07-2009, 09:56 AM
ஜோதிடர்கள் கணிக்கிறார்கள் என்று சொல்கிறார்களே, யார்பா அந்த ஜோதிடர்... அவர் முகத்தையும் பிரசுரிக்கலாமே?

இந்த பத்திரிக்கையாளர்கள் அப்படித்தான்., சுமாங்காட்டி ஜோதிடர் சொன்னாங்கன்னு கொளுத்திப் போட்டு போயிறுவாங்க...

ஜோதிடர் சொல்றது பலிக்குதோ இல்லையோ பத்திரிக்கைகாரர்களுக்கு காசு சேருது... (ஒரு சில பத்திரிக்கைகள் தவிர :) )

அமரன்
21-07-2009, 10:41 AM
தான் சொன்னது பலிக்கட்டும் என்று காரியப்படுத்தும் மந்திரவாதி என்ற கதை எழுத நமக்கு ஒரு நல்வாய்ப்பு.

ஓவியன்
21-07-2009, 05:04 PM
தங்கள் திட்டத்தை வெளியே சொன்ன ஜோதிடர்களை மட்டுமே ஏன் தீவிரவாதிகள் கொல்லக்கூடாது.

ஆஹா, பரம்ஸ்ணா...!!
தங்களைக் கொல்ல வரும் தீவிரவாதிகளையும் அவர் தம் திட்டங்களையும் இந்த ஜோதிடர்கள் மோப்பம் பிடிக்க மாட்டார்களா...?? :D:D:D

பாலகன்
21-07-2009, 05:10 PM
தம்பி மொட்டைபையன் சொன்னது போல இது பத்திரிக்கைகள் கொளுத்திப்போடும் பீலாவா இருக்குமோ?


ஜோதிடர்கள் கணிக்கிறார்கள் என்று சொல்கிறார்களே, யார்பா அந்த ஜோதிடர்... அவர் முகத்தையும் பிரசுரிக்கலாமே?

இந்த பத்திரிக்கையாளர்கள் அப்படித்தான்., சுமாங்காட்டி ஜோதிடர் சொன்னாங்கன்னு கொளுத்திப் போட்டு போயிறுவாங்க...

ஜோதிடர் சொல்றது பலிக்குதோ இல்லையோ பத்திரிக்கைகாரர்களுக்கு காசு சேருது... (ஒரு சில பத்திரிக்கைகள் தவிர :) )

இன்பா
21-07-2009, 05:51 PM
அண்ணே வேணா பாருங்க... பூகம்பம் வராது, அப்படியே வந்தாலும் சுனாமி வரவே வரது ... ... ...